search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்தன மரம் கடத்தல்"

    • பத்ரகாளியம்மன் எனப் போற்றப்படும் அழகுநாச்சியம்மன் கோவில் உள்ளது.
    • மா்ம நபா்கள் மரத்தை விட்டுச் சென்றனா்

    அவிநாசி : 

    அவிநாசி அருகே சேவூரில் பழைமையான பத்ரகாளியம்மன் எனப் போற்றப்படும் அழகுநாச்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் இருந்த சந்தன மரத்தை மா்ம நபா்கள் இரவு வெட்டிக் கடத்த முயன்றுள்ளனா்.அப்போது வெட்டிய சந்தன மரம் மின்கம்பி மீது விழுந்ததால், மா்ம நபா்கள் மரத்தை விட்டுச் சென்றனா். இதையடுத்து, சந்தன மரத்தை வெட்டிக் கடத்த முயன்ற மா்ம நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். 

    • ஸ்ரீ சுப்பிரமணியம் ஐ.டி. ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
    • வீட்டின் பின்பகுதியில் 2 சந்தன மரங்களை வைத்து வளர்த்து வந்தார்.

    குனியமுத்தூர்,

    கோவை போத்தனூர் அருகே உள்ள சிட்கோ எல்.ஐ.சி. காலனியை சேர்ந்தவர் ஸ்ரீ சுப்பிரமணியம் (வயது 50). ஐ.டி. ஊழியர். இவர் தனது வீட்டின் பின்பகுதியில் 2 சந்தன மரங்களை வைத்து வளர்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு இவர் மரங்களை பார்த்து வீட்டு தூங்க சென்றார். நள்ளிரவு வீட்டின் காம்பவுண்டு சுவரை ஏறி குதித்த மர்மந பர்கள் ஸ்ரீ சுப்பிரமணியம் வளர்த்த ஒரு சந்தன மரத்தை வெட்டி 10 அடி துண்டை மட்டும் கடத்தி சென்றனர். மறுநாள் காலையில் இதனை பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் இது குறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து ஸ்ரீசுப்பிரமணியம் அளித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தன மரத்தை வெட்டி கடத்தி சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    • சினிமா பணியில் போலீசார் மடக்கி பிடித்தனர்
    • வேலூரில் பரபரப்பு

    வேலூர்:

    வேலூர் கோட்டை அருகே நேற்று இரவு தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    சினிமா பாணியில் மடக்கினர்

    இரவு 2 மணிக்கு பைக்கில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் நிற்காமல் வேகமாக சென்றனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சினிமா காட்சி போல அவர்களை விரட்டி சென்றனர். அண்ணா சாலையில் வாலிபர்கள் வந்த பைக்கை போலீசார் மடக்கினர்.

    அப்போது அதிலிருந்த வாலிபர் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பைக் ஓட்டி வந்த மற்றொரு வாலிபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சிறுமூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் (வயது 28) தப்பி ஓடியவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என தெரியவந்தது.

    சந்தன மரங்கள் பறிமுதல்

    அவர்கள் வந்த பைக்கில் 20 கிலோ எடை கொண்ட 6 சந்தனமரக்கட்டைகள் இருந்தன. மேலும் சந்தன மரங்களை வெட்ட பயன்படுத்தும் கத்தி 2 ரம்பம் ஆகியவை இருந்தன.

    பைக்குடன் அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வாலிபர் ராஜசேகர் மற்றும் பறிமுதல் செய்த சந்தன கட்டைகள் பைக் ஆகியவற்றை வேலூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே மணிகண்டன் சந்தன மரங்களை ஒரு கும்பலிடம் வாங்கி வைத்துவிட்டு என்னை அழைத்தார். நான் பைக்கில் வந்து அவரை அழைத்துக் கொண்டு ஆரணி நோக்கி சென்றேன் வேறு எதுவும் எனக்கு தெரியாது என ராஜசேகர் கூறியுள்ளார். ஆனாலும் அவர்கள் கத்தி ரம்பம் ஆகியவை வைத்திருந்ததால் வேலூர் பகுதியில் இருந்து சந்தன மரங்களை வெட்டி கடத்தியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து வேலூர் வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சினிமா பணியில் போலீசார் மடக்கி பிடித்தனர்
    • வேலூரில் பரபரப்பு

    வேலூர்:

    வேலூர் கோட்டை அருகே நேற்று இரவு தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    இரவு 2 மணிக்கு பைக்கில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் நிற்காமல் வேகமாக சென்றனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சினிமா காட்சி போல அவர்களை விரட்டி சென்றனர். அண்ணா சாலையில் வாலிபர்கள் வந்த பைக்கை போலீசார் மடக்கினர்.

    அப்போது அதிலிருந்த வாலிபர் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பைக் ஓட்டி வந்த மற்றொரு வாலிபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சிறுமூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் (வயது 28) தப்பி ஓடியவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என தெரியவந்தது.

    அவர்கள் வந்த பைக்கில் 20 கிலோ எடை கொண்ட 6 சந்தனமரக்கட்டைகள் இருந்தன. மேலும் சந்தன மரங்களை வெட்ட பயன்படுத்தும் கத்தி 2 ரம்பம் ஆகியவை இருந்தன.

    பைக்குடன் அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வாலிபர் ராஜசேகர் மற்றும் பறிமுதல் செய்த சந்தன கட்டைகள் பைக் ஆகியவற்றை வேலூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே மணிகண்டன் சந்தன மரங்களை ஒரு கும்பலிடம் வாங்கி வைத்துவிட்டு என்னை அழைத்தார். நான் பைக்கில் வந்து அவரை அழைத்துக் கொண்டு ஆரணி நோக்கி சென்றேன் வேறு எதுவும் எனக்கு தெரியாது என ராஜசேகர் கூறியுள்ளார். ஆனாலும் அவர்கள் கத்தி ரம்பம் ஆகியவை வைத்திருந்ததால் வேலூர் பகுதியில் இருந்து சந்தன மரங்களை வெட்டி கடத்தியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து வேலூர் வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×