search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போத்தனூர் அருகே ஐ.டி. ஊழியர் வீட்டில் சந்தன மரம் கடத்தல்
    X

    போத்தனூர் அருகே ஐ.டி. ஊழியர் வீட்டில் சந்தன மரம் கடத்தல்

    • ஸ்ரீ சுப்பிரமணியம் ஐ.டி. ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
    • வீட்டின் பின்பகுதியில் 2 சந்தன மரங்களை வைத்து வளர்த்து வந்தார்.

    குனியமுத்தூர்,

    கோவை போத்தனூர் அருகே உள்ள சிட்கோ எல்.ஐ.சி. காலனியை சேர்ந்தவர் ஸ்ரீ சுப்பிரமணியம் (வயது 50). ஐ.டி. ஊழியர். இவர் தனது வீட்டின் பின்பகுதியில் 2 சந்தன மரங்களை வைத்து வளர்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு இவர் மரங்களை பார்த்து வீட்டு தூங்க சென்றார். நள்ளிரவு வீட்டின் காம்பவுண்டு சுவரை ஏறி குதித்த மர்மந பர்கள் ஸ்ரீ சுப்பிரமணியம் வளர்த்த ஒரு சந்தன மரத்தை வெட்டி 10 அடி துண்டை மட்டும் கடத்தி சென்றனர். மறுநாள் காலையில் இதனை பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் இது குறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து ஸ்ரீசுப்பிரமணியம் அளித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தன மரத்தை வெட்டி கடத்தி சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×