சேவூா் பத்ரகாளியம்மன் கோவிலில் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பத்ரகாளியம்மன் எனப் போற்றப்படும் அழகுநாச்சியம்மன் கோவில் உள்ளது.மா்ம நபா்கள் மரத்தை விட்டுச் சென்றனா்
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

அவிநாசி : 

அவிநாசி அருகே சேவூரில் பழைமையான பத்ரகாளியம்மன் எனப் போற்றப்படும் அழகுநாச்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் இருந்த சந்தன மரத்தை மா்ம நபா்கள் இரவு வெட்டிக் கடத்த முயன்றுள்ளனா்.அப்போது வெட்டிய சந்தன மரம் மின்கம்பி மீது விழுந்ததால், மா்ம நபா்கள் மரத்தை விட்டுச் சென்றனா். இதையடுத்து, சந்தன மரத்தை வெட்டிக் கடத்த முயன்ற மா்ம நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com