search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sandalwood smuggling"

    • பத்ரகாளியம்மன் எனப் போற்றப்படும் அழகுநாச்சியம்மன் கோவில் உள்ளது.
    • மா்ம நபா்கள் மரத்தை விட்டுச் சென்றனா்

    அவிநாசி : 

    அவிநாசி அருகே சேவூரில் பழைமையான பத்ரகாளியம்மன் எனப் போற்றப்படும் அழகுநாச்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் இருந்த சந்தன மரத்தை மா்ம நபா்கள் இரவு வெட்டிக் கடத்த முயன்றுள்ளனா்.அப்போது வெட்டிய சந்தன மரம் மின்கம்பி மீது விழுந்ததால், மா்ம நபா்கள் மரத்தை விட்டுச் சென்றனா். இதையடுத்து, சந்தன மரத்தை வெட்டிக் கடத்த முயன்ற மா்ம நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். 

    • வனத்துறையினர் பயிரிட்டுள்ள சந்தன மரக் கன்றுகளை ஆய்வு செய்து வந்தனர்.
    • காட்டுப் பகுதியில் ஓடையின் அருகே கார் ஒன்று நின்று கொண்டிருந்ததை அப்பகுதி இளைஞர்கள் பார்த்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ம. புடையூர் கிராமத்தில்அரசு அனுமதியுடன் விவசாயிகள் சந்தன மரக்கன்றுகளை தங்களது விலை நிலத்தில் பயிரிட்டு உள்ளனர். தற்போது 15 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் வனத்துறையினர் அவ்வாறு பயிரிட்டுள்ள சந்தன மரக் கன்றுகளை ஆய்வு செய்து வந்தனர். தற்போது மரம் வெட்டும் சூழ்நிலையில் உள்ளதாக பயிரிட்டுள்ள விவசாயிகளிடம் கூறி சென்றுள்ளனர்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாராயணசாமி (வயது 70), இவர் நிலத்தில் இருந்த 12 சந்தன மரங்களை மர்மநபர்கள் வெட்டி கடத்தினர். நேற்று முன்தினம் இதே போல் இளங்கோவன் (40), இவரது நிலத்தில் 5 சந்தனமரங்களை வெட்டி கடத்தி உள்ளனர். தொடர்ச்சியாக மாப்புடையூர் கிராமத்தில் விவசாய நிலங்களில் உள்ள சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி வந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12:30 மணி அளவில் காட்டுப் பகுதியில் ஓடையின் அருகே கார் ஒன்று நின்று கொண்டிருந்ததை அப்பகுதி இளைஞர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த ராமநத்தம் போலீசார் கார் மற்றும் அதிலிருந்த 4 நபர்களை பிடித்த போலீசார், சந்தனமர கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சினிமா பணியில் போலீசார் மடக்கி பிடித்தனர்
    • வேலூரில் பரபரப்பு

    வேலூர்:

    வேலூர் கோட்டை அருகே நேற்று இரவு தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    சினிமா பாணியில் மடக்கினர்

    இரவு 2 மணிக்கு பைக்கில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் நிற்காமல் வேகமாக சென்றனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சினிமா காட்சி போல அவர்களை விரட்டி சென்றனர். அண்ணா சாலையில் வாலிபர்கள் வந்த பைக்கை போலீசார் மடக்கினர்.

    அப்போது அதிலிருந்த வாலிபர் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பைக் ஓட்டி வந்த மற்றொரு வாலிபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சிறுமூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் (வயது 28) தப்பி ஓடியவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என தெரியவந்தது.

    சந்தன மரங்கள் பறிமுதல்

    அவர்கள் வந்த பைக்கில் 20 கிலோ எடை கொண்ட 6 சந்தனமரக்கட்டைகள் இருந்தன. மேலும் சந்தன மரங்களை வெட்ட பயன்படுத்தும் கத்தி 2 ரம்பம் ஆகியவை இருந்தன.

    பைக்குடன் அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வாலிபர் ராஜசேகர் மற்றும் பறிமுதல் செய்த சந்தன கட்டைகள் பைக் ஆகியவற்றை வேலூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே மணிகண்டன் சந்தன மரங்களை ஒரு கும்பலிடம் வாங்கி வைத்துவிட்டு என்னை அழைத்தார். நான் பைக்கில் வந்து அவரை அழைத்துக் கொண்டு ஆரணி நோக்கி சென்றேன் வேறு எதுவும் எனக்கு தெரியாது என ராஜசேகர் கூறியுள்ளார். ஆனாலும் அவர்கள் கத்தி ரம்பம் ஆகியவை வைத்திருந்ததால் வேலூர் பகுதியில் இருந்து சந்தன மரங்களை வெட்டி கடத்தியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து வேலூர் வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சினிமா பணியில் போலீசார் மடக்கி பிடித்தனர்
    • வேலூரில் பரபரப்பு

    வேலூர்:

    வேலூர் கோட்டை அருகே நேற்று இரவு தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    இரவு 2 மணிக்கு பைக்கில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் நிற்காமல் வேகமாக சென்றனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சினிமா காட்சி போல அவர்களை விரட்டி சென்றனர். அண்ணா சாலையில் வாலிபர்கள் வந்த பைக்கை போலீசார் மடக்கினர்.

    அப்போது அதிலிருந்த வாலிபர் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பைக் ஓட்டி வந்த மற்றொரு வாலிபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சிறுமூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் (வயது 28) தப்பி ஓடியவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என தெரியவந்தது.

    அவர்கள் வந்த பைக்கில் 20 கிலோ எடை கொண்ட 6 சந்தனமரக்கட்டைகள் இருந்தன. மேலும் சந்தன மரங்களை வெட்ட பயன்படுத்தும் கத்தி 2 ரம்பம் ஆகியவை இருந்தன.

    பைக்குடன் அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வாலிபர் ராஜசேகர் மற்றும் பறிமுதல் செய்த சந்தன கட்டைகள் பைக் ஆகியவற்றை வேலூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே மணிகண்டன் சந்தன மரங்களை ஒரு கும்பலிடம் வாங்கி வைத்துவிட்டு என்னை அழைத்தார். நான் பைக்கில் வந்து அவரை அழைத்துக் கொண்டு ஆரணி நோக்கி சென்றேன் வேறு எதுவும் எனக்கு தெரியாது என ராஜசேகர் கூறியுள்ளார். ஆனாலும் அவர்கள் கத்தி ரம்பம் ஆகியவை வைத்திருந்ததால் வேலூர் பகுதியில் இருந்து சந்தன மரங்களை வெட்டி கடத்தியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து வேலூர் வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செம்மரம் கடத்துபவர்களை பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரி சீனிவாசராவ் கூறியுள்ளார். #sandalwood #smuggling
    திருப்பதி:

    ஸ்ரீ காளஹஸ்தி, கொல்லப்பள்ளியில் நேற்று செம்மரம் கடத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரி சீனிவாசராவ் கலந்து கொண்டு பேசியதாவது:-

    செம்மர தடுப்புப்பிரிவு ஐ.ஜி.காந்தாராவ் அறிவுரையின்படி, பொதுமக்களிடம் செம்மரம் கடத்துவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    ராயலசீமா பகுதிகளிலும், சித்தூர் மாவட்டத்திலும் அரியவகை செம்மரங்கள் இருப்பதால் இவை மிகவும் விலை மதிப்புள்ளது. இவற்றை ஒரு சிலர் முறைகேடாக வெட்டுவதோடு மட்டுமல்லாது, கடத்தியும் வருகின்றனர்.

    இதுபோன்று செம்மர கடத்தலில் ஈடுபடுபவர்கள் முதல் முறையாக பிடிபட்டால் 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.3 லட்சம் அபராதமும், 2-வது முறை பிடிபட்டால் 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 லட்சம் அபராதமும், 3-வது முறை பிடிபட்டால் 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். செம்மரம் கடத்துபவர்களின் விவரங்களை தெரியப்படுத்துபவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். மேலும் ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் செம்மர தடுப்பு பிரிவு ஊழியர்கள் சுப்பிரமணியம், சத்தியநாராயணா, பாபாராம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #sandalwood #smuggling
    ×