search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "க்ரிப்டோகரென்சி"

    ஃபேஸ்புக் நிறுவனம் சொந்தமாக உருவாக்கி வரும் க்ரிப்டோகரென்சியின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஃபேஸ்புக் நிறுவனம் அடுத்த ஆண்டு வாக்கில் உலகின் 12 நாடுகளில் சொந்தமாக க்ரிப்டோகரென்சிக்களை உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரென்சி குளோபல் காயின் என்ற பெயரில் அழைக்கப்படும் என தெரிகிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்த க்ரிப்டோகரென்சிக்கான சோதனை துவங்கும் என கூறப்படுகிறது.

    2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் டிஜிட்டல் பேமண்ட்ஸ் சிஸ்டம் ஒன்றை துவங்க ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குளோபல் காயின் மூலம் மக்கள் குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பாக பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ள வழி செய்வதாக இருக்கும் என கூறப்படுகிறது.

    இதனை சாத்தியப்படுத்த ஃபேஸ்புக் நிறுவனம் வெஸ்டன் யூனியன் போன்ற பணப்பரிமாற்ற நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் பணப்பரிமாற்றங்களை மிக எளிமையாக்க முடியும் என கூறப்படுகிறது. இதுதவிர ஃபேஸ்புக் நிறுவனம் வங்கிகள் மற்றும் புரோக்கர்களுடன் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



    குளோபல் காயின் க்ரிப்டோகரென்சியை அடுத்த ஆண்டு வணிக ரீதியில் வெளியிட ஃபேஸ்புக் நிறுவனம் ஒழுங்குமுறை மற்றும் தொழில்நுட்ப இடையூறுகளை களைய வேண்டும். ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் க்ரிப்டோகரென்சியில் இருக்கும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் பற்றி விவாதிக்க பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் ஆளுநரை சமீபத்தில் சந்தித்து பேசினார்.

    ஃபேஸ்புக்கின் குளோபல் காயின் க்ரிப்டோகரென்சியை இந்தியாவில் பிரபலப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த சேவையை துவங்கவும் ஃபேஸ்புக் பல்வேறு இடையூறுகளை கடக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஃபேஸ்புக்கின் குளோபல் காயின் அடுத்த ஆண்டு வாக்கில் வர்த்தக ரீதியாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    ஃபேஸ்புக் நிறுவனம் சொந்தமாக க்ரிப்டோகரென்சியை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook #cryptocurrency



    ஃபேஸ்புக் நிறுவனம் தனக்கென க்ரிப்டோகரென்சியை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் வாட்ஸ்அப் போன்ற செயலிகளில் பண பரிமாற்றம் செய்ய இந்த க்ரிப்டோகரென்சியை பயன்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 

    அமெரிக்க டாலர் மதிப்பு ஏற்ற இறக்க சூழ்நிலை காரணமாக நிலையான மதிப்பு கொண்ட காயின்களை ஃபேஸ்புக் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. தற்சமயம் இந்த க்ரிப்டோகரென்சி உருவாக்குவதற்கான ஆயத்த பணிகள் மட்டுமே துவங்கியிருப்பதால், இது வெளியாக இன்னும் சில காலம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    2014 ஆம் ஆண்டு பேபால் நிறுவன தலைவர் டேவிட் மார்கஸ் ஃபேஸ்புக்கின் மெசஞ்சர் செயலியை நிர்வகிக்கும் பணியில் அமர்த்தப்பட்டார். பின் மே மாதத்தில் மார்கஸ் ஃபேஸ்புக்கின் பிளாக்செயின் நடவடிக்கைகளுக்கான தலைவராக நியமிக்கப்பட்டார். ஃபேஸ்புக்கின் பிளாக்செயின் குழுவில் தற்சமயம் வரை சுமார் 40 பேர் உள்ளனர். 

    ஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரென்சி பற்றி இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. அந்த வகையில் உண்மையில் ஃபேஸ்புக் க்ரிப்டோகரென்சியை உருவாக்கி வருகிறதா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

    உலகம் முழுக்க ஃபேஸ்புக் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 250 கோடியாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் ஆண்டு வருவாய் மட்டும் 4000 கோடி டாலர்கள் ஆகும். ஃபேஸ்புக் நிறுவனம் சார்பில் க்ரிப்டோகரென்சி வெளியிடப்படும் பட்சத்தில், இவ்வாறு செய்யும் முதல் மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனமாக இருக்கும். 
    நெதர்லாந்து நாட்டின் சர்வதேச விமான நிலையத்தில் பிட்காயின் ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. இதை கொண்டு யூரோக்களை க்ரிப்டோகரென்சிகளாக மாற்ற முடியும்.




    நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் பிட்காயின் ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, யூரோக்களை க்ரிப்டோகரென்சிக்களாக மாற்றிக் கொள்ள முடியும். ஸ்கிபோல் விமான நிலையம் வரும் பயணிகள் இனி தங்களது ரொக்கத்தை பிட்காயின் மற்றும் எத்திரியம்களாக மாற்ற முடியும்.

    சோதனை அடிப்படையில் ஆறு மாத காலத்திற்கு நிறுவப்பட்டிருக்கும், இந்த ஏடிஎம் பயணாளிகளின் வரவேற்புக்கு ஏற்ற வகையில் நீ்ட்டிப்பது குறித்த முடிவு எடுக்கப்பட இருக்கிறது. ஐரோப்பியாவில் இது போன்ற ஏடிஎம் பெறும் முதல் விமான நிலையம் இது என ஸ்கிபோல் தெரிவித்திருக்கிறது. 

    ஸ்கிபோல் விமான நிலையத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவு தலைவர் தன்ஜா டிக் கூறும் போது, “பயணாளிகளுக்கு தலைசிறந்த சேவையை வழங்க ஸ்கிபோல் தொடர்ந்து புதுவித மற்றும் வித்தியாச வழிமுறைகளை வழங்க முயற்சிக்கிறது என தெரிவித்தார். 
    “பிட்காயின் ஏடிஎம் மூலம் பயணர்கள் தங்களின் யூரோக்களை சர்வதேச க்ரிப்டோகரென்சிக்களாக மாற்றிக் கொள்ள முடியும். இது பலருக்கும் பயன்தரும் வகையில் இருக்கும்.” என அவர் மேலும் தெரிவித்தார். 



    புதிய ஏடிஎம் இயந்திரம் பேலெக்ஸ் டேட்டா சொல்யூஷன்ஸ் பிவி (ByeleX Data Solutions BV) எனும் தட்சு நிறுவனத்துடன் இணைந்து நிறுவப்பட்டிருக்கிறது. இந்நிறுவனம் வியாபாரங்களுக்கு தேவையான க்ரிப்டோகரென்சி சேவைகளை வழங்கி வருகிறது.

    உலகில் முதல் முறையாக க்ரிப்டோகரென்சி பரிமாற்றங்களை மேற்கொள்ளும் வசதியை ஆஸ்திரேலிய விமான நிலையம் அறிமுகம் செய்தது. மே மாத வாக்கில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் விமான நிலையத்தில் முதல் முறையாக க்ரிப்டோகரென்சி ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டது. 

    பல்வேறு வியாபார நிறுவனங்களும் விர்ச்சுவல் கரென்சிக்களை பரிமாற்றங்களுக்கு பயன்படுத்த துவங்கிவிட்ட நிலையில், க்ரிப்டோகரென்சிக்களை கொண்டே உலகை சுற்றி வருவது மிகவும் எளிமையாகிவிட்டது.
    ஆப்பிள் இயங்குதளங்களில் ஆப் உருவாக்குவோர் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை ஆப்பிள் நிறுவனம் மேம்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    கலிஃபோர்னியா:

    ஆப்பிள் நிறுவன சாதனங்களில் க்ரிப்டோகரென்சிக்களை மைனிங் செய்யும் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப் ஸ்டோர் நெறிமுறைகளை சமீபத்தில் அப்டேட் செய்து புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. புதிய தடை ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து தளங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக மார்ச் மாத வாக்கில் காலென்டர் 2 செயலியை மேக் ஆப் ஸ்டோரில் இருந்து ஆப்பிள் நிறுவனம் நீக்கியது. இந்த ஆப் பயனர்களின் சாதனங்களை க்ரிப்டோகரென்சிக்களை மைன் செய்ய பயன்படுத்திக் கொண்டு, மாற்றாக பிரீமியம் அம்சங்களை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

    க்ரிப்டோகரென்சி செயலிகளுக்கு எதிராக ஆப்பிள் மேற்கொண்ட முதல் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. முன்னதாக இதுபோன்ற செயலிகளுக்கு எதிராக ஆப்பிள் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொண்டது கிடையாது. ஆப்பிள் ஆப் ஸ்டோர் விதிமுறைகளை மீறியதால் காலென்டர் 2 செயலி நீக்கப்பட்டதாக ஆப்பிள் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    தற்சமயம் ஆப்பிள் நிறுவனம் க்ரிப்டோகரென்சிக்களுக்கு எதிரான புதிய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. புதிய நெறிமுறைகள் ஐஓஎஸ், மேக் ஓஎஸ், வாட்ச் ஓஎஸ் மற்றும் டிவி ஓஎஸ் செயலிகளுக்கும் பொருந்தும். அந்த வகையில் ஆப்பிள் அறிவித்திருக்கும் புதிய நெறிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம்.


    கோப்பு படம்

    - ஆப்பிள் இனி விர்ச்சுவல் கரென்சி வாலெட் செயலிகளை அனுமதிக்கும், எனினும் இதற்கு டெவலப்பர்கள் தங்களை நிறுவனங்களாக பதிவு செய்திருக்க வேண்டும்.

    - க்ரிப்டோகரென்சி மைனிங்-ஐ சாதனத்துக்கு வெளியே செய்யும் செயலிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அதாவது கிளவுட்-சார்ந்த மைனிங் செய்யும் செயலிகள் அனுமதிக்கப்படுகின்றன.

    - செயலிகளை கொண்டு பயனர்கள் பணம் செலுத்துவது, பண பரிமாற்றம் அல்லது அனுமதிக்கப்பட்ட எக்சேஞ்ச்களில் க்ரிப்டோகரென்சிக்களை பெறவும் முடியும்.

    - இதேபோன்று காயின்களை வழங்கும் செயலிகள், பிட்காயின் பரிமாற்றங்கள், இதர க்ரிப்டோகரென்சி பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் இதர அதிகாரப்பூர்வ நிதி நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் அவை சட்டரீதியாகவும் இருக்க வேண்டும்.

    - பயனர்களை சமூக வலைத்தள நடவடிக்கை, மற்றவர்களை குறிப்பிட்ட செயலிகளை டவுன்லோடு செய்ய தூண்டுவது மற்றும் செயலிகளை டவுன்லோடு செய்வது உள்ளிட்டவற்றுக்கு க்ரிப்டோகரென்சி செயலிகள் அதன் பயனர்களுக்கு விர்ச்சுவல் காயின்களை வழங்க கூடாது.


    கோப்பு படம்

    புதிய விதிமுறைகளால் சில மூன்றாம் தரப்பு க்ரிப்டோகரென்சி செயலிகள் தடை செய்யப்படும் சூழலில் இருக்கும் நிலையில், ஆப்பிள் க்ர்ப்டோகரென்சி செயலிகளின் போக்கு முற்றிலும் மாற்றியமைக்கும். புதிய விதிமுறைகளால் எத்தனை செயலிகள் நீக்கப்படும் என்ற தகவல்கள் இனி வரும் நாட்களில் தெரியவரும்.

    ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருக்கும் அனைத்து செயலிகளுக்கும் புதிய விதிமுறை பொருந்தும் என்பதால், மேக் மற்றும் ஜெயில்பிரேக் செய்யப்பட்ட ஐபோன்களில் தொடர்ந்து க்ரிப்டோகரென்சிக்களை மைன் செய்ய முடியும்.
    ×