என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கோர்ட் ஊழியர்"
- மாலதி திண்டிவனம் கோர்ட்டில் தட்டச்சு பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
- மர்ம நபர்கள் மாலதியின் தங்கச் செயினை பறிக்க மீண்டும் முயற்சி செய்தனர்.
விழுப்புரம்:
திண்டிவனம் கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் மாலதி,அவரது சகோதரி மனோ சித்ரா. மாலதி திண்டிவனம் கோர்ட்டில் தட்டச்சு பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.இவரது சகோதரி மனோ சித்ரா குழந்தைகள் நல அலுவலராக உள்ளார்.இந்த நிலையில் 2 பேரும் பணியை முடித்துவிட்டு இரவு 8.30 மணி அளவில் திண்டிவனம் மேம்பாலம் கீழ்ப்பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் கோபாலபுரம் சென்று கொண்டிருந்தனர்.
அப்பொழுது இவர்களை மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் திண்டிவனம் தீயணைப்பு நிலையம் அருகே வரும்போது மாலதி அணிந்திருந்த தங்கச் செயினை பறிக்க முயற்சி செய்தனர்.மாலதி மற்றும் மனோ சித்ரா 2 பேரும் இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தனர். தொடர்ந்து மர்ம நபர்கள் மாலதியின் தங்கச் செயினை பறிக்க மீண்டும் முயற்சி செய்தனர்.மாலதி தங்கச் செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டு கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் இவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு ஓடி வந்தனர். அப்போது அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர். இதில் மாலதிக்கு காயம் ஏற்பட்டது.
இது குறித்து திண்டிவனம் போலீஸ் நிலையம் மற்றும் 108 ஆம்புலன்ஸ்க்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவம் நடந்து அரை மணி நேரம் கழித்து தாமதமாக வந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.திண்டிவனம் பகுதியில் தொடர்ந்து வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- கோர்ட் ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
- கையெழுத்து வாங்க முருகன் என்பவரை பற்றி விசாரித்து கொண்டு இருந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வெங்கடேசன் இளநிலை கட்டளை நிறை வேற்றுபவராக வேலை செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று வழக்கு தொடர்பாக நோட்டீஸ் வழங்குவதற்காக கடலூர் தென்னம்பாக்கத்தை சேர்ந்த செல்வி என்பவரிடம் நோட்டீசை கொடுத்து அசலில் கையெழுத்து வாங்க, முருகன் என்பவரை பற்றி விசாரித்து கொண்டு இருந்தார்.
அப்போது செல்வியின் கணவர் விஸ்வநாதன், வெங்க டேசனை வழி மறித்து அவரது மனைவி கையெழுத்து போட்டு கொடுத்த நகலை பிடுங்கி கொண்டதுடன் அவர் கையில் வைத்திருந்த நீதிமன்ற செல்போன் மற்றும் அவருடைய மோட்டார் சைக்கிள் சாவியினையும் பிடுங்கி மிரட்டி நீதிமன்ற பணியை செய்யவிடாமல் தடுத்து ள்ளார். இதுகுறித்து வெங்கடேசன் தூக்கணா ம்பாக்கம் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்ததன் பேரில் விஸ்வநாதன் (வயது 55) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்