search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Court Officer"

    • கோர்ட் ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
    • கையெழுத்து வாங்க முருகன் என்பவரை பற்றி விசாரித்து கொண்டு இருந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வெங்கடேசன் இளநிலை கட்டளை நிறை வேற்றுபவராக வேலை செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று வழக்கு தொடர்பாக நோட்டீஸ் வழங்குவதற்காக கடலூர் தென்னம்பாக்கத்தை சேர்ந்த செல்வி என்பவரிடம் நோட்டீசை கொடுத்து அசலில் கையெழுத்து வாங்க, முருகன் என்பவரை பற்றி விசாரித்து கொண்டு இருந்தார்.

    அப்போது செல்வியின் கணவர் விஸ்வநாதன், வெங்க டேசனை வழி மறித்து அவரது மனைவி கையெழுத்து போட்டு கொடுத்த நகலை பிடுங்கி கொண்டதுடன் அவர் கையில் வைத்திருந்த நீதிமன்ற செல்போன் மற்றும் அவருடைய மோட்டார் சைக்கிள் சாவியினையும் பிடுங்கி மிரட்டி நீதிமன்ற பணியை செய்யவிடாமல் தடுத்து ள்ளார். இதுகுறித்து வெங்கடேசன் தூக்கணா ம்பாக்கம் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்ததன் பேரில் விஸ்வநாதன் (வயது 55) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ×