search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோரிக்கை மனுக்கள்"

    • அக்காள்மடம் பகுதியில் மீனவர் குடியிருப்புக்கு சென்று முதல்-அமைச்சர் கலந்துரையாடினார்.
    • சிறுவர், சிறுமிகளுடன் படிப்பு பற்றி கேட்டறிந்தார்.

    ராமநாதபுரம்

    ராநாதபுரம் மாவட்டம், அக்காள்மடம் மீனவர் குடி யிருப்பு பகுதிக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மீனவ குடும்பத்தை சேர்ந்த வர்களிடம் கலந்துரையாடினார்.

    ராமநாதபுரம் பேராவூர் பகுதியில் நடந்த தி.மு.க. தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு ராமேசுவரம் புறப்பட்டு சென்றார்.

    மண்டபத்தில் இன்று தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணை யம் மற்றும் மீனவ சங்கங்கள் இணைந்து நடத்தும் மீனவர் நல மாநாடு மற்றும் மீனவர் களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது.

    இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ராமநாதபு ரத்திலிருந்து ராமேசுவரம் செல்லும் வழியில் அக்காள் மடம் மீனவர் குடியிருப்பு பகுதிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சென்று மீனவப் பெருமக்களிடம் அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

    அப்போது அப்பகுதி மக்கள் குடியிருப்பு பட்டா வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். பட்டா வழங்குவ தற்கு தேவையான நடவ டிக்கைகள் எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்து இருக்கிறீர்களா? என்று அங்குள்ள பெண்களிடம் கேட்டறிந்தார். அத்துடன் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களையும் அவர் பெற்றுக் கொண்டார்.

    அதேபோல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அக்காள்மடம் மீனவர் குடி யிருப்பு பகுதியில் உள்ள மாணவர்களுடன் கலந்துரை யாடி அவர்களது படிப்பு விவரங்கள் குறித்து கேட்ட றிந்தார். இந்த நிகழ்வின் போது, அமைச்சர்கள் துரை முருகன், தங்கம் தென்னரசு, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராம லிங்கம், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் மற்றும் அதிகாரி கள், கட்சியினர் உடனிருந்தனர்.

    • மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் வருகிற 8-ந்தேதி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
    • காலை 10மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர், ஆணையாளர் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்கிழமை வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

    அதன்படி வருகிற 8-ந்தேதி (செவ்வாய்கிழமை) ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலம்-2 அலுவலகத்தில் காலை 10மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர், ஆணையாளர் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது.

    இதில் வடக்கு மண்டலத்துக்குட்பட்ட விளாங்குடி, கரிசல்குளம், ஜவகர்புரம், விசாலாட்சி நகர், அருள்தாஸ்புரம், தத்தனரி மெயின் ரோடு, அய்யனார்கோவில், மீனாட்சிபுரம், பீ.பீ.குளம், நரிமேடு, அகிம்சாபுரம், கோரிப்பாளையம், தல்லாகுளம், சின்னசொக்கிக்குளம், கே.கே.நகர், அண்ணா நகர், சாத்தமங்கலம், பாத்திமா நகர், பெத்தானியாபுரம், பி.பி.சாவடி, கோச்சடை ஆகிய பகுதி பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம்.

    ×