search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோரி"

    • 89-வது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவிற்கு பக்தர்கள் ஒருவாரம் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர்.
    • விழாவின் போது பெண்பார்க்கும் படலமும் நடைபெறும் என பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் முனியாண்டி சுவாமி கோவில் உள்ளது. தமிழகம் மற்றும் வெளி மாநிலம், வெளி நாடுகளில் ஓட்டல்கள் நடத்தும் முனியாண்டி விலாஸ் உரிமையாளர்களுக்கு இந்த கோவில் குலதெய்வ கோவிலாக விளங்கி வருகிறது.

    வருடந்தோறும் முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்கள் குடும்பத்துடன் இங்கு வந்து விமரிசையாக திருவிழா நடத்துவார்கள். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.

    89-வது ஆண்டாக நடை பெறும் இந்த விழாவிற்கு பக்தர்கள் ஒருவாரம் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று காலை விரதம் மேற்கொண்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். மாலை நடைபெற்ற விழாவில் கோவில் நிலைமாலையுடன் பக்தர்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் இருந்து எடுத்துவந்த தேங்காய், பழம், பூதட்டுகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து நிலைமாலையை கோவிலில் வைத்து சுவாமிக்கு தேங்காய் உடைத்து சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த விழாவிற்கு தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பலஇடங்களில் முனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்தி வருபவர்கள் மற்றும் உள்ளுர் மக்கள் உட்டபட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 200 ஆடுகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டு 2500 கிலோ பிரியாணி அரிசியில் அசைவ பிரியாணி 20-க்கும் மேற்பட்ட அண்டாக்களில் தயார்செய்து அதிகாலை ஐந்து மணிக்கு கோவிலில் உள்ள கருப்பசாமிக்கு பிரியாணி படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அசைவ பிரியாணி அன்னதானமாக வழங்கப்பட்டது.

    இந்த அன்னதானத்தில் கள்ளிக்குடி, வில்லூர், அகத்தாபட்டி உள்ளிட்ட அருகில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் சிறுவர் முதல் பெரியவர் வரை ஆயிரக்கணக்கானோர் விடிய விடிய காத்திருந்து பிரியாணி பிரசாதத்தை பெற்று சென்றனர்.

    இந்த பிரியாணியை பிரசாதமாக உண்டால் நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வர் என்பது ஐதீகம். இந்த விழாவின் போது பெண்பார்க்கும் படலமும் நடைபெறும் என பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • கணவாய் புதூர் ஊராட்சி வீராச்சியூர், வேப்பம்பாடி ஆகிய மலை கிராமங்களில் சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • ஆக்கிரமிப்பு செய்த தார்சாலை மற்றும் மன்சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் தீவட்டிப்பட்டி காவல்நிலத்தை முற்றுகையிட்டனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கணவாய் புதூர் ஊராட்சி வீராச்சியூர், வேப்பம்பாடி ஆகிய மலை கிராமங்களில் சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சாலை வீராச்சியூர் பகுதி மக்கள் பொம்மிடி செல்ல ஏதுவாக இருந்தது .

    இந்த தார் சாலை குறிப்பிட்ட தூரம் வரை வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.இதற்கு இணையாக மண் சாலை செல்கிறது.

    இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி ப்பட்டி மோளையானூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சுந்தர மூர்த்தி மற்றும் சிலர் வீராச்சியூர் பகுதியில் கோல்டன் வேலி எஸ்டேட் என்பவரிடமிருந்து சுமார் 70 ஏக்கர் நிலத்தை வாங்கியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலத்தை ஒட்டி வனத்துறை மற்றும் வருவாய் துறைக்கு சொந்த மான சுமார் 15 ஏக்கர் நிலம் உள்ளது. 70 ஏக்கர் நிலத்தை வாங்கியவர்கள் இந்த 15 ஏக்கர் அரசு நிலத்தையும் அனுபவித்து அருகில் உள்ள தார் சாலை மற்றும் மன்சாலை அனைத்தையும் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

    இதையடுத்து ஆக்கிரமிப்பு செய்த தார்சாலை மற்றும் மன்சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் தீவட்டிப்பட்டி காவல்நிலத்தை முற்றுகையிட்டனர்.

    இது சம்பந்தமாக காடையாம்பட்டி வட்டாட்சியர் அருள் பிரகாஷ் கூறுகையில், ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ×