என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடூரக்கொலை"

    • மதுரையில் கொத்தனார் கல்வீசி தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
    • இந்த சம்பவத்தில் தொடர்புடைய கணவன்-மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை பி.பி.குளம் இந்திரா நகரை சேர்ந்தவர் மோகன் (வயது 61), கொத்தனார். இவரது மனைவி சிவகாமி. மோகனும், ஆட்டோ டிரைவர் வடிவேல் (43) என்பவரும் ஒரே பகுதியில் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அவர்களுக்கு இடையே வாகனம் நிறுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று வடிவேல் ஓட்டி வந்த ஆட்டோ நிலை தடுமாறி மோகன் வீட்டின்மீது மோதியது.

    இதனை மோகன் தட்டி கேட்டார். அப்போது அங்கு வந்த வடிவேல் மனைவி விஜி கணவருக்கு ஆதரவாக பேசினார். இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வடிவேல், அவரது மனைவி விஜி ஆகியோர் கல்வீசி மோகனை கொடூரமாக தாக்கினர். இந்த சம்பவத்தில் மோகன் படுகாயம் அடைந்தார்.

    அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக மோகன் மனைவி சிவகாமி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் மோகனை ஆட்டோ டிரைவர் வடிவேல், அவரது மனைவி விஜி ஆகிய 2 பேரும் கல்வீசி தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

    போலீசார் மோகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொத்தனாரை கொடூரமாக கொலை செய்த கணவன்-மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.

    • மதுரை அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
    • மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்து முட்புதரில் வீசிச்சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    மதுரை

    மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டையை அடுத்த காலாங்கரையில் உள்ள முட்புதரில் இன்று காலை 55 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அந்தப்பகுதி மக்கள் உடனே நாகமலை புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரி வித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண்ணின் கை, கால்கள் கட்டப்பட்டிருந்தது. உடலில் பல்வேறு பாகங்களில் ரத்தக்காயங்கள் இருந்தன. எனவே மர்ம நபர்கள் அந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்து விட்டு முட்புதரில் வீசிச்சென்றி ருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து அந்த பெண்ணின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோத னைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது கண்டறியப்பட்டால் அவரை கொலை செய்து வீசி சென்றவர்கள் யார்? என்பது தெரியவரும். ஆகவே பிணமாக கிடந்த பெண்ணை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    ×