search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடிவேரி தடுப்பணையில்"

    • கொடிவேரி தடுப்பணைக்கு வரும் தண்ணீர் வரத்தும் குறைந்தது.
    • சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் குளிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றானது கொடிவேரி அணை. இந்த அணைக்கு ஈரோடு மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநில ங்களில் இருந்தும் ஏராள மான சுற்றுலா பயனிகள் வருவது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பவானி சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை யால் அணைக்கு வரும் உபரிநீர் பவானி ஆற்றில் அதிகளவில் வெளி யேற்ற ப்பட்டு வருகிறது.

    இதனால் கொடிவேரி தடுப்பணையில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்ெகடுத்து சென்றது. இதையொட்டி சுற்றுலா பயணிகளின் நலன் கருதி கொடிவேரியில் நேற்று குளிக்க தடை விதி க்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் கோபி மற்றும் சுற்று மழை குறைந்ததால் கொடிவேரி தடுப்பணைக்கு வரும் தண்ணீர் வரத்தும் குறைந்தது. இதனால் தடுப்பணையில் வழக்கம் போல் தண்ணீர் செல்கிறது.

    இதையடுத்து தடை நீக்கப்பட்டு கொடிவேரி தடுப்பணையில் இன்று முதல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் குளிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனால் இன்று வழக்கம் போல் பொதுமக்கள் பலர் கொடிவேரி தடுப்பணைக்கு வந்து மகிழ்ச்சியுடன் குளித்து ரசித்து விட்டு சென்றனர்.

    • கொடிவேரி அணையில் சுமார் 2 லட்சத்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து குளித்து சென்றனர்.
    • இங்கு அடிப்படை வசதிகள் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் அருகே கொடிவேரி தடுப்ப ணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணையில் கொட்டி செல்கிறது.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பத ற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்பட தமிழகம் முழுவதும் இருந்தும் தினமும் ஏராள மான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்ப த்துடன் வந்து செல்கிறார்கள்.

    மேலும் கொடிவேரி அணையில் நுழைவு கட்டணமாக ரூ.5 வசூலி க்கப்படுகிறது. இதனால் திருவிழா மற்றும் விடுமுறை நாட்க ளில் வழக்கத்தை விட பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்படும்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வருவதால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இதனால் கொடிவேரி உள்பட பல்வேறு நீர்நிலைகளுக்கு சென்று குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.

    மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு ள்ளதால் கொடிவேரி தடுப்பணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    மேலும் சனிக்கி ழமை, ஞாயிற்றுக்கிழ மைகளில் கொடிவேரிக்கு வழக்கத்தை விட அதிகள வில் பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக வந்து செல்கின்றனர்.

    தொடர்ந்து மகிழ்ச்சி அடைந்த பொது மக்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

    மேலும் கோடை வெயிலின் தாக்க த்தை தணிப்பதற்காக இளைஞர்கள் பலர் கொடி வேரி தடுப்பணைக்கு வந்து குளித்து மகிழ்ந்தனர்.

    இதனால் கொடிவேரியில் எங்கு பார்த்தாலும் மக்களின் கூட்டமாகவே காணப்ப ட்டது. இதனால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக கொடிவேரியில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    இந்த நிலையில் கடந்த 1½ மாதங்களில் மட்டும் கொடிவேரி அணையில் சுமார் 2 லட்சத்த 12 ஆயிரத்துக்கும் மேற்ப ட்டோர் வந்து குளித்து சென்றனர்.

    கடந்த ஏப்ரல் மாதம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 731 பேர் வந்து சென்றனர். மேலும் இந்த மாதம் (மே) நேற்று வரை சுமார் 80 ஆயிரம் பேர் குளித்து மகிழ்ந்தனர்.

    கடந்த 1½ மாதங்களில் மட்டும் 2 லட்சத்து 12 ஆயிரத்து 731 பேர் வந்திருந்தனர். இதன் மூலம் ரூ. 10 லட்சத்து 63 ஆயிரத்து 655 வசூலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் கொடி வேரி அணைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கி றார்கள். இங்கு அடிப்படை வசதிகள் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    கொடிவேரி அணை ப்பகுதியில் பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் சுகாதார வளாகம் இல்லாத தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகி றார்கள்.

    மேலும் உடை மாற்றும் அறையும் இங்கு இல்லை. இதனால் தடுப்பணையில் குளிக்கும் பொதுமக்கள் உடை மாற்ற முடியாமல் தவிக்கிறார்கள். மேலும் பெண்கள் கடும் அவதி அடைந்து வருகி றார்கள.

    இதனால் பொது மக்கள் மறைவான பகுதி களிலும், கார் மற்றும் அவர்கள் வந்த வாகன ங்களிலும் உடை மாற்றும் அவல நிலை உள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் கொடிவேரி அணை பகுதியில் ஆய்வு செய்து சுகாதார வளாகம், ஆண்கள் மற்றும் பெண்கள் உடை மாற்றும் அறைகள் தனித்தனியாக அமைத்து தர வேண்டும்.

    மேலும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • கொடிவேரி தடுப்பணைக்கு சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர்.
    • அணையில் கொட்டும் தண்ணீரை ரசித்தப்படி சென்றனர்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடி வேரி தடுப்பணையில் கொட்டி செல்கிறது.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பத ற்கும் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்ப த்துடன் வந்து செல்கிறார்கள்.

    மேலும் விழா, விசேஷம் மற்றும் விடுமுறை நாட்க ளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகளவில் இருக்கும்.

    இந்த நிலையில் தற்போது கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கத்தால் அனல் காற்று வீசுகிறது.

    வெயிலின் வெப்பத்தில் இந்து தப்பிக்க பொதுமக்கள் நீர்நிலைகளில் குளித்து மகிழ்ந்து வருகிறார்கள். மேலும் சுற்றுலா தலங்களிலும் குவிந்து வருகிறார்கள்.

    இதே போல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் கொடிவேரி தடுப்பணைக்கு சுற்றுலாபயணிகள் பலர் தங்கள் குடும்ப த்தினருடன் வந்தி ருந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால் சிறுவர், சிறுமிகள், இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் என பலர் கொடி வேரி தடுப்பணைக்கு வந்து குளித்து மகிழ்ந்தனர்.

    காலை பொதுமக்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டது. ஆனால் நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    தொடர்ந்து குடும்ப த்துடன் வந்த பொதுமக்கள் தங்கள் கொண்டு வந்த உணவுகளை அந்த பகுதியில் அமர்ந்து சாப்பிட்டனர். மேலும் அங்கு விற்பனை செய்யப்படும் மீன்களையும் ருசித்து சாப்பிட்டனர்.

    இதே போல் பவானிசாகர் அணை பூங்காவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏராளமான சுற்றுலா பயணிகள் சிறுவர் மற்றும் சிறுமிகளுடன் வந்திருந்தனர்.

    அவர்கள் அங்கு ஊஞ்சல், சறுக்கு விளையாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து அணையில் கொட்டும் தண்ணீரை ரசித்தப்படி சென்றனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
    • பொதுமக்கள் கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடி வேரி தடுப்பணையில் கொட்டி செல்கிறது.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள்.

    மேலும் விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் இருக்கும்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் நீர்நிலைகளில் குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.

    இதே போல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் கொடிவேரி தடுப்பணைக்கு பொது மக்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் பலர் வந்திருந்தனர். பவானிசாகர் அணையில் இருந்து தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் கோடை வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக இளைஞர்கள் பலர் கொடி வேரி தடுப்பணைக்கு வந்து குளித்து மகிழ்ந்தனர்.

    காலை பொதுமக்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டது. ஆனால் நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    தொடர்ந்து குடும்பத்துடன் வந்த பொதுமக்கள் தங்கள் கொண்டு வந்த உணவுகளை தடுப்பணையின் வெளிபகுதியில் அமர்ந்து சாப்பிட்டனர்.

    • கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கு அனுமதி
    • கொடிவேரி அணை க்கு குறைந்த அளவே பொதுமக்கள் வந்திருந்தினர்

    கோபி,

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்வார்கள்.

    இந்த நிலையில் கடந்த வாரம் நீர்ப்பிடிப்பு பகுதி களில் பரவலாக பலத்த மழை பெய்து வந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இதனால் அணையில் இருந்து பவானி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதையொட்டி கடந்த 5 நாட்களுக்கு முன்பு கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்ப ணையில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    இதனால் தடுப்பணையில் பொதுமக்கள் குளிக்கவும், ரசிப்பதற்கும் தடை் விதிக்க ப்பட்டது.

    இந்த நிலையில் மழை குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது. இதனால் அணையில் இருந்து குைறந்த அளவே தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதையொட்டி கொடி வேரி தடுப்பணையில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டி வருகிறது. தடுப்ப ணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்ததால் கடந்த 5 நாட்களுக்கு பிறகு கொடி வேரி தடுப்பணையில் இன்று முதல் பொதுமக்க ளுக்கு அனுமதி வழங்க ப்பட்டு உள்ளது.

    இதையொட்டி இன்று காலை கொடிவேரி அணை க்கு குறைந்த அளவே பொதுமக்கள் வந்திருந்தினர். தொடர்ந்து அவர்கள் அணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

    • பவானிசாகர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் கொடிவேரி தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • இதையொட்டி கொடிவேரி தடுப்பணை நுழைவு வாயில் அடைக்கப்பட்டது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடு ப்பணைக்கு ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.

    மேலும் விடுமுறை மற்றும் விேசஷ நாட்களில் வழக்கத்தை விட அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வார்கள்.

    இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு சுமார் 5 ஆயிரம் கன அடியாக அதி கரித்தது. இதனால் அணை யின் நீர்மட்டம் அதிகரித்து 105 அடியை எட்டும் நிலை யில் உள்ளது.

    இதையொட்டி பவானிசாகர் அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வரு கிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பெருக் கெடுத்து செல்கிறது.

    இதே போல் கொடிவேரி தடுப்பணையிலும் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் குளிக்கும் இடத்தில் தண்ணீர் அதி களவு செல்கிறது.

    இந்த நிலையில் தடுப்பணையில் அதிகளவு தண்ணீர் செல்வதால் பாது காப்பு கருதி கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் ரசிப்பதற்கும் தடை விதிக்க பட்டுள்ளது.

    இது குறித்து அதிகாரிகள் கூறும் போது, மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் பவானி சாகர் அணை முழு கொள்ள ளவை எட்டும் நிலையில் உள்ளது.

    இதனால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் கொடிவேரி தடுப்பணையில் அதிகளவு தண்ணீர் செல்கிறது. இதனால் பாதுகாப்பு கருதி தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    எனவே பாதுகாப்பு கருதி பொதுமக்கள் தடுப்ப ணைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றனர்.

    இதையொட்டி கொடிவேரி தடுப்பணை நுழைவு வாயில் அடைக்கப்பட்டது. மேலும் தடுப்பணைக்கு செல்லும் வழியில் தடுப்புகள் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    • கொடிவேரி தடுப்பணைக்கு ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை முதலே பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து இருந்தனர்.
    • இதேபோல் பவானிசாகர் அணை பூங்கா பகுதியில் இன்று காலை ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி திருப்பூர், கோவை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் குடும்பத்துடன் தினமும் வந்து செல்கிறார்கள்.

    தடுப்பணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வார்கள். தொடர்ந்து அவர்கள் அணை பகுதியில் விற்பனை செய்யப்படும் மீன் வகைகளை சாப்பிட்டு செல்வார்கள். மேலும் விடுமுறை நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் வழக்கத்தை விட பொது மக்களின் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    இந்த நிலையில் பள்ளி களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டு உள்ளது. மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை முதலே பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து இருந்தனர். தொடர்ந்து ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் தடுப்பணையில் கொட்டும் தண்ணீ ரில் குளித்து மகிழ்ந்தனர்.

    மேலும் அவர்கள் கொண்டு வந்த உணவு வகைகளை குடும்பத்துடன் சாப்பிட்டனர். மேலும் பலர் தடப்பணையின் வெளியில் விற்கப்படும் மீன் வகைகளை ருசித்து விட்டு சென்றனர்.

    இதேபோல் பவானிசாகர் அணை பூங்கா பகுதியில் இன்று காலை ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். பூங்காவுக்கு வந்த சிறுவர்- சிறுமிகள் ஊஞ்சல் விளை யாடினர். மேலும் பெண்கள், ஆண்கள் என பலர் பூங்கா வில் விளை யாடி மகிழ்ந்த னர். இன்று விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகளவில் காண ப்பட்டது.

    ×