search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடிவேரி அணையில்"

    • கொடிவேரி தடுப்பணைக்கு வந்து கொட்டும் தண்ணீர் குளித்து மகிழ்ந்தனர்.
    • கொடிவேரி அணையில் கூட்டம அதிகரித்து காணப்பட்டது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் விடுமுறை தினங்களில் அதிகளவில் வருகை தந்து குளித்து மகிழ்ந்து சென்று வருகிறார்கள்.

    ஏப்ரல், ேம மாதங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததால் ஏராளமான பேர் தினமும் கொடிவேரி தடுப்பணைக்கு வந்து கொட்டும் தண்ணீர் குளித்து மகிழ்ந்தனர்.

    இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் கடந்த சில நாட்களாக கொடிவேரி தடுப்பணை பொதுமக்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது. அவ்வ ப்போது சனி, ஞாயிற்றுக்கி ழமைகளில் மட்டுமே கூட்டம் ஓரளவுக்கு வந்தது.

    இந்நிலையில் இன்று பக்ரீத் பண்டிகை விடு முறையையொட்டி ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பேர் கொடி தடுப்பணைக்கு வந்தனர். அவர்கள் அருவி யில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

    இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு கொடிவேரி அணையில் கூட்டம அதிகரித்து காண ப்பட்டது. சுற்றுலா பயணி கள் கொடிவேரி அணை பகுதியில் விற்பனையாகும் மீன்களை சுடச்சுட வாங்கி சாப்பிட்டனர்.

    • கொடிவேரி தடுப்பணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    • கொடிவேரிக்கு அணைக்கு கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர்.

    கோபி, 

    கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள்.

    இதனால் கொடிவேரி அணையில் எப்போதும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். மேலும் விடுமுறை நாட்களில் அதிகளவில் மக்கள் வருவார்கள்.

    இந்த நிலையில் கோடை விடுமுறை மற்றும் வெயி லின் தாக்கத்தால் கடந்த 2 மாதமாக கொடிவேரி தடுப்பணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் கொடிவேரிக்கு அணைக்கு கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணி கள் அதிகளவில் வந்தனர். இதே போல் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) கொடிவேரி தடுப்பணைக்கு அதிகளவில் பொதுமக்கள் வந்திருந்தனர்.

    மேலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொடிவேரி தடுப்பணைக்கு வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. பொது மக்கள் பலர் கார், வேன், இருசக்கர வாகன ங்களில் வந்திருந்தனர்.

    மேலும் ஈரோடு மாவட்ட பொது மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் கொடிவேரி தடுப்பணைக்கு சுற்றுலா பயணிகள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் வந்திரு ந்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் மக்களின் கூட்டம் அலை மோதியது.

    கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் குளிர்ச்சியாக காணப்பட்டது. கடும் வெயிலின் தாக்கத்தால் அவதிபட்டு வந்த பொதுமக்கள் கொடிவேரி பகுதி யில் குளிர்ந்த காற்று வீசியதால் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தொடர்ந்து மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

    இதனால் கடந்த 2 நாட்க ளில் மட்டும் 20 ஆயிரத்து க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நேற்று முன்தினம் சனி க்கிழமை 6 ஆயிரத்து 500 பேரும், நேற்று ஞாயிற்றுக் கிழமை 14 ஆயிரம் பேர் என மொத்தம் 20 ஆயிரத்து 500 பேர் கொடிவேரி தடுப்பணையில் குவிந்தனர். இதன் மூலம் கடந்த 2 நாட்களில் மட்டும் நுழைவு கட்டணமாக ரூ.72 ஆயிரத்து 500 வசூலானதாக அதிகாரி கள் தெரிவித்தனர்.

    • கொடிவேரியில் எங்கு பார்த்தாலும் மக்களின் கூட்டமாகவே காணப்பட்டது.
    • இதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் அருகே கொடிவேரி தடுப்ப ணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடி வேரி தடுப்பணையில் கொட்டி செல்கிறது.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பத ற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்ப த்துடன் வந்து செல்கிறார்கள்.

    மேலும் திருவிழா மற்றும் விடுமுறை நாட்க ளில் வழக்கத்தை விட பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்படும்.

    இந்த நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது.

    மேலும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் தொழிலாளர் தினம் (மே-1) என தெடர்ந்து 3 நாட்கள் விடுமுறை நாட்கள் வந்ததால் கொடிவேரி தடுப்பணைக்கு வழக்கத்தை விட பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    கடந்த 3 நாட்களாக கொடிவேரி அணைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

    இதே போல் கடந்த சனிக்கிழக்கிழமை பொதுமக்களின் கூட்டம் ஓரளவுக்கு இருந்தது.ஆனால் ஞாயிற்றுக்கிழமை கொடிவேரி தடுப்பணைக்கு ஆயிரக்கணக்காக பொது மக்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர்

    காலை நேரத்தில் கூட்டம் குறைந்த காணப்பட்டாலும் நேரம் செல்ல செல்ல மக்களின் கூட்டம் அலைமோதியது.

    மேலும் நேற்று மே தினம் என்பதால் பெரும்பாலான கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் நேற்று கொடிவேரி அணைக்கு ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக் கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக கார், வேன், இரு சக்கர வாகனங்களில் வந்த வண்ணம் இருந்தனர்.

    தொடர்ந்து மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் சிறுவர்- சிறுமிகள், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

    இதனால் இன்று கொடிவேரியில் எங்கு பார்த்தாலும் மக்களின் கூட்டமாகவே காணப்பட்டது.

    இதனால் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம், நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் கொடிவேரி அணைக்கு செல்லும் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதனால் வாகனங்கள் அணி வகுத்து சென்றன. இதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    குடும்பத்துடன் வந்த பொதுமக்கள் தங்கள் கொண்டு வந்த உணவுகளை தடுப்பணை யின் வெளிபகுதியில் அமர்ந்து சாப்பிட்டனர். மேலும் அங்கு விற்பணை செய்யப்படும் மீன்களையும் ருசித்து சாப்பிட்டு சென்றனர்.

    கெடிவேரி அணைக்கு கடந்த 3 நாட்களாக சுமார் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து குளித்து மகிழ்ந்தனர். கடந்த சனிக்கிழமை 7 ஆயிரம் பேரும், ஞாயிற்றுக்கிழமை 12 ஆயிரத்து 500 பேரும்,

    நேற்று திங்கட்கிழமை 14 ஆயிரத்து 500 பேர் என மொத்தம் 34 ஆயிரம் பேர் வந்திருந்தனர். இதன் மூலம் கடந்த 3 நாட்களில் கொடிவேரி அணை மூலம் ரூ1 லட்சத்து 70 ஆயிரம் வசூலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இரவிலும் வெப்பத்தின் தாக்கம் இருப்பதால் பொதுமக்கள் தூக்கமின்றி தவித்து வருகிறார்கள்.
    • அதிகளவில் கூட்டம் திரண்டதால் பாதுகாப்பு க்காக போலீசாரும் நிறுத்தப்பட்டு இருந்தனர்

    கோபி, மார்ச். 19-

    ஈரோடு மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்கும் முன்பே கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    பகலில் அனல் காற்று வீசிவருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். இரவிலும் வெப்பத்தின் தாக்கம் இருப்பதால் பொதுமக்கள் தூக்கமின்றி தவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாலை நேரத்தில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசிவருகிறது. ஆனாலும் பகல் நேரத்தில் வழக்கம் போல் அனல் காற்று வீசி வருகிறது.

    இதனால் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து விட்டது. அத்தியா வசிய தேவை–களுக்காக மட்டுமே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து செல்கிறார்கள்.

    அதுவும் குடைபிடித்துக் கொண்டு வருகிறார்கள். மேலும் வெப்பத்தை தணிக்க தர்பூசணி, இளநீர், நுங்கு, மற்றும் வெள்ளரி பிஞ்சுகள், பழச்சாறு, கரும்புசாறு குடித்து வருகிறார்கள்.

    கோடை காலம்தொடங்கும் முன்பே ஈரோட்டில் 100 டிகிரி வெயில் பதிவானது. இனி வரும் காலங்களில் வெப்பத்தின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி தடுப்பணையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர்.

    ஈரோடு, நாமக்கல், சேலம், கோவை, மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பலர் குடும்பம், குடும்பாக வந்து அருவியில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். இதே போல் கர்நாடகா, கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து இருந்தனர்.

    அனல் காற்றில் இருந்து தப்பிக்கும் வகையில் ஆனந்தமாக அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

    அதிகளவில் கூட்டம் திரண்டதால் பாதுகாப்பு க்காக போலீசாரும் நிறுத்தப்பட்டு இருந்தனர். மேலும் கொடிவேரி பகுதி முழுவதும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    • இரவு பெய்த கனமழையால் மழை வெள்ளம் கசிவுநீர் ஓடைகளில் கலந்து பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
    • கொடிவேரி அணையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் பொதுபணித்து றையினர் தடை விதித்துள்ளனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் கீழே விழும் தண்ணீர் அருவிபோல் கொட்டுவதால் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் குளித்து விட்டு மகிழ்ச்சியாக செல்வது வழக்கம்.

    இந்நிலையில் சத்தியமங்கலம், கோபி செட்டிபாளையம், நம்பியூர், அரசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இரவு பெய்த கனமழையால் மழை வெள்ளம் கசிவுநீர் ஓடைகளில் கலந்து பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

    இதனால் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்ப ட்டுள்ள கொடிவேரி அணையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் பொதுபணித்து றையினர் தடை விதித்துள்ளனர்.

    மேலும் பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி திறக்கப்பட்டுள்ள நிலையில் மழை வெள்ளம் வினாடிக்கு 4200 கன அடி மேலாக பெருக்கெடுத்து ஓடுவதால் பாலத்தில் நின்று செல்பி எடுக்கவும், ஆற்றில் இறங்கவும் தடை என அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    • கடந்த 28 நாட்களுக்கு பிறகு இன்று முதல் கொடிவேரி தடுப்பணையில் பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
    • சுற்றுலா பயணிகள் வழி முறைகளை கடை பிடித்து பாதுகாப்புடன் தடுப்பணை யில் குளிக்க வேண்டும்

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப் பணைக்கு ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்ப த்துடன் வருவார்கள். அவர்கள் தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வார்கள்.

    இந்த நிலையில் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அணையில் இருந்து ஆற்றில் அதிகமாக தண்ணீர் திறந்து விட ப்பட்டது. இதனால் கொடி வேரி தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது. மேலும் பொது மக்கள் குளிக்கும் இடங்க ளிலும் தண்ணீர் அதிகளவு சென்றது.

    இதையொட்டி கொடி வேரி தடுப்பணையில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் அணைக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது. ஆற்றிலும் குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கொடி வேரி தடுப்பணைக்கு நீர்வரத்து குறைந்தது.

    இதையொட்டி கடந்த 28 நாட்களுக்கு பிறகு இன்று முதல் கொடிவேரி தடுப்பணையில் பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறும் போது, கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் குறைந்து உள்ளதால் இன்று முதல் பொது மக்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    எனவே சுற்றுலா பயணிகள் வழி முறைகளை கடை பிடித்து பாதுகாப்புடன் தடுப்பணை யில் குளிக்க வேண்டும் என்றனர்.

    இதையொட்டி இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே பொதுமக்கள் பலர் குடும்பத்துடன் வந்து கொடிவேரி தடுப்பணைக்கு வந்து பார்த்து ரசித்தனர்.

    மேலும் பலர் குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து பொதுமக்கள் அங்கு விற்பனை செய்யப்பட்ட மீன்களை ருசித்து விட்டு சென்றனர்.

    • பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்ட 25 ஆயிரம் கன அடி உபரி நீரால் கொடிவேரி அணை பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி பெருக்கெடுத்து சென்றது.
    • இதனால் கொடிவேரி தடுப்பணையில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் போடப்பட்ட கான்கிரீட் தளம் கடந்த சில நாட்களுக்கு முன்பு முற்றிலும் அடித்து செல்லப்பட்டது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையாகும். இந்த அணையில் அருவி போல் தண்ணீர் கொட்டுவதால் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கொடிவேரி அணைக்கு வருவது வழக்கம்.

    இந்நிலையில் கொடிவேரி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதியும் மற்றும் பொதுமக்களின் உயிரிழப்புகளை தடுக்க கடந்த 2021-ம் ஆண்டு சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில் அணையை சீரமைக்க 2.65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதில் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில்அணையின் கீழ் பகுதியில் ஆழமுள்ள இடங்களில் சுமார் 100 மீட்டர் சுற்றளவில் கான்கிரீட் தளம் அமைக்க ப்பட்டு, பாதுகாப்பாக குளிக்க தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    அணை பகுதியில் கான்கிரீட் தளம் போட ப்பட்டதால் உயிர் பலி தடுக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் தைரி யமாக அணையில் குளித்து மகிழ்ந்தனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கன மழை காரணமாக அணை க்கு வந்த 25 ஆயிரம் கன அடி உபரி நீர் முழுமை யாக வெளியேற்றப்பட்டது.

    இதனால் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்ட 25 ஆயிரம் கன அடி உபரி நீரால் கொடிவேரி அணை பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி பெருக்கெடுத்து சென்றது.

    இதனால் கொடிவேரி தடுப்பணையில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் போடப்பட்ட கான்கிரீட் தளம் கடந்த சில நாட்களுக்கு முன்பு முற்றிலும் அடித்து செல்லப்பட்டது. இதனால் அணை பகுதியில் மீண்டும் குழிகள் ஏற்பட்டுள்ளது.

    இதனால் கொடிவேரி அணையில் ஆங்காங்கே உடைந்த கான்கிரீட் துண்டுகளும், கம்பிகளும் இருப்பதால் சுற்றுலா பயணிகள் அணைக்குள் இறங்கி குளிக்க முடியாத நிலையில் அணையின் ஒரு ஓரமாக குளித்து வரு கின்றனர்.

    பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் போடப்பட்ட கான்கிரீட் தளம் மழை வெள்ளத்திலேயே அடித்து செல்லப்பட்டது சுற்றுலா பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதையடுத்து கானகிரீட் தளம் மற்றும் சேதமான பகுதிகளை நவீன எந்திரங்கள் மூலம் பொது ப்பணித்துறையினர் அப்புறப்படுத்தி வரு கின்றனர்.

    மேலும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதில் விரைவில் அப்பகுதியில் புதிதாக கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • இந்த அணையில் குளிப்பதற்கும் அணையை கண்டு ரசிப்ப தற்கும் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.
    • இதையொட்டி 12 நாட்களுக்கு பிறகு இன்று (புதன்கிழமை) முதல் கொடி வேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிப்ப தற்கும் கண்டு ரசிப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. இந்த அணையில் குளிப்பதற்கும் அணையை கண்டு ரசிப்ப தற்கும் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.

    மேலும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் ஈரோடு மாவட்ட பொது மக்கள் மட்டுமின்றி தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதையொட்டி கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்ப ணையில் தண்ணீர் ஆர்ப்ப ரித்து கொட்டியது. இதனால் 5-ந் தேதி முதல் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணி கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    தினமும் தடுப்பணையில் தண்ணீர் அதிமாக கொட்டி யதால் தொடர்ந்து பொது மக்கள் அணைக்கு செல்ல கடந்த 12 நாட்களாக தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் தினமும் பொது மக்கள் வந்து ஏமாற்ற த்துடன் திரும்பி சென்றனர்.

    இந்த நிலையில் நீர்வரத்து குறைந்ததால் பவானி சாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் படிப்படியாக குறைந்தது. இதனால் கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரின் அளவும் குறை ந்தது.

    இதையொட்டி 12 நாட்களுக்கு பிறகு இன்று (புதன்கிழமை) முதல் கொடி வேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிப்ப தற்கும் கண்டு ரசிப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

    இதனால் இன்று காலை குறைந்த அளவே பொது மக்கள் வந்திருந்தனர். ஆனால் நேரம் செல்ல செல்ல சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்தனர். அவர்கள் தடுப்பணையில் குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து அவர்கள் அங்கு விற்பனை செய்யப்பட்ட மீன் வகைகளை வாங்கி சாப்பிட்டு விட்டு சென்றனர்.

    ×