search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடிவேரி அணையில்  வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கான்கிரீட் தளம்
    X

    கொடிவேரி அணையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கான்கிரீட் தளம்

    • பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்ட 25 ஆயிரம் கன அடி உபரி நீரால் கொடிவேரி அணை பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி பெருக்கெடுத்து சென்றது.
    • இதனால் கொடிவேரி தடுப்பணையில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் போடப்பட்ட கான்கிரீட் தளம் கடந்த சில நாட்களுக்கு முன்பு முற்றிலும் அடித்து செல்லப்பட்டது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையாகும். இந்த அணையில் அருவி போல் தண்ணீர் கொட்டுவதால் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கொடிவேரி அணைக்கு வருவது வழக்கம்.

    இந்நிலையில் கொடிவேரி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதியும் மற்றும் பொதுமக்களின் உயிரிழப்புகளை தடுக்க கடந்த 2021-ம் ஆண்டு சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில் அணையை சீரமைக்க 2.65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதில் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில்அணையின் கீழ் பகுதியில் ஆழமுள்ள இடங்களில் சுமார் 100 மீட்டர் சுற்றளவில் கான்கிரீட் தளம் அமைக்க ப்பட்டு, பாதுகாப்பாக குளிக்க தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    அணை பகுதியில் கான்கிரீட் தளம் போட ப்பட்டதால் உயிர் பலி தடுக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் தைரி யமாக அணையில் குளித்து மகிழ்ந்தனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கன மழை காரணமாக அணை க்கு வந்த 25 ஆயிரம் கன அடி உபரி நீர் முழுமை யாக வெளியேற்றப்பட்டது.

    இதனால் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்ட 25 ஆயிரம் கன அடி உபரி நீரால் கொடிவேரி அணை பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி பெருக்கெடுத்து சென்றது.

    இதனால் கொடிவேரி தடுப்பணையில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் போடப்பட்ட கான்கிரீட் தளம் கடந்த சில நாட்களுக்கு முன்பு முற்றிலும் அடித்து செல்லப்பட்டது. இதனால் அணை பகுதியில் மீண்டும் குழிகள் ஏற்பட்டுள்ளது.

    இதனால் கொடிவேரி அணையில் ஆங்காங்கே உடைந்த கான்கிரீட் துண்டுகளும், கம்பிகளும் இருப்பதால் சுற்றுலா பயணிகள் அணைக்குள் இறங்கி குளிக்க முடியாத நிலையில் அணையின் ஒரு ஓரமாக குளித்து வரு கின்றனர்.

    பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் போடப்பட்ட கான்கிரீட் தளம் மழை வெள்ளத்திலேயே அடித்து செல்லப்பட்டது சுற்றுலா பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதையடுத்து கானகிரீட் தளம் மற்றும் சேதமான பகுதிகளை நவீன எந்திரங்கள் மூலம் பொது ப்பணித்துறையினர் அப்புறப்படுத்தி வரு கின்றனர்.

    மேலும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதில் விரைவில் அப்பகுதியில் புதிதாக கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×