search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "enjoyed bathing in"

    • கொடிவேரி தடுப்பணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    • கொடிவேரிக்கு அணைக்கு கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர்.

    கோபி, 

    கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள்.

    இதனால் கொடிவேரி அணையில் எப்போதும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். மேலும் விடுமுறை நாட்களில் அதிகளவில் மக்கள் வருவார்கள்.

    இந்த நிலையில் கோடை விடுமுறை மற்றும் வெயி லின் தாக்கத்தால் கடந்த 2 மாதமாக கொடிவேரி தடுப்பணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் கொடிவேரிக்கு அணைக்கு கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணி கள் அதிகளவில் வந்தனர். இதே போல் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) கொடிவேரி தடுப்பணைக்கு அதிகளவில் பொதுமக்கள் வந்திருந்தனர்.

    மேலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொடிவேரி தடுப்பணைக்கு வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. பொது மக்கள் பலர் கார், வேன், இருசக்கர வாகன ங்களில் வந்திருந்தனர்.

    மேலும் ஈரோடு மாவட்ட பொது மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் கொடிவேரி தடுப்பணைக்கு சுற்றுலா பயணிகள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் வந்திரு ந்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் மக்களின் கூட்டம் அலை மோதியது.

    கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் குளிர்ச்சியாக காணப்பட்டது. கடும் வெயிலின் தாக்கத்தால் அவதிபட்டு வந்த பொதுமக்கள் கொடிவேரி பகுதி யில் குளிர்ந்த காற்று வீசியதால் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தொடர்ந்து மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

    இதனால் கடந்த 2 நாட்க ளில் மட்டும் 20 ஆயிரத்து க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நேற்று முன்தினம் சனி க்கிழமை 6 ஆயிரத்து 500 பேரும், நேற்று ஞாயிற்றுக் கிழமை 14 ஆயிரம் பேர் என மொத்தம் 20 ஆயிரத்து 500 பேர் கொடிவேரி தடுப்பணையில் குவிந்தனர். இதன் மூலம் கடந்த 2 நாட்களில் மட்டும் நுழைவு கட்டணமாக ரூ.72 ஆயிரத்து 500 வசூலானதாக அதிகாரி கள் தெரிவித்தனர்.

    • கொடிவேரியில் எங்கு பார்த்தாலும் மக்களின் கூட்டமாகவே காணப்பட்டது.
    • இதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் அருகே கொடிவேரி தடுப்ப ணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடி வேரி தடுப்பணையில் கொட்டி செல்கிறது.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பத ற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்ப த்துடன் வந்து செல்கிறார்கள்.

    மேலும் திருவிழா மற்றும் விடுமுறை நாட்க ளில் வழக்கத்தை விட பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்படும்.

    இந்த நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது.

    மேலும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் தொழிலாளர் தினம் (மே-1) என தெடர்ந்து 3 நாட்கள் விடுமுறை நாட்கள் வந்ததால் கொடிவேரி தடுப்பணைக்கு வழக்கத்தை விட பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    கடந்த 3 நாட்களாக கொடிவேரி அணைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

    இதே போல் கடந்த சனிக்கிழக்கிழமை பொதுமக்களின் கூட்டம் ஓரளவுக்கு இருந்தது.ஆனால் ஞாயிற்றுக்கிழமை கொடிவேரி தடுப்பணைக்கு ஆயிரக்கணக்காக பொது மக்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர்

    காலை நேரத்தில் கூட்டம் குறைந்த காணப்பட்டாலும் நேரம் செல்ல செல்ல மக்களின் கூட்டம் அலைமோதியது.

    மேலும் நேற்று மே தினம் என்பதால் பெரும்பாலான கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் நேற்று கொடிவேரி அணைக்கு ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக் கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக கார், வேன், இரு சக்கர வாகனங்களில் வந்த வண்ணம் இருந்தனர்.

    தொடர்ந்து மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் சிறுவர்- சிறுமிகள், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

    இதனால் இன்று கொடிவேரியில் எங்கு பார்த்தாலும் மக்களின் கூட்டமாகவே காணப்பட்டது.

    இதனால் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம், நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் கொடிவேரி அணைக்கு செல்லும் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதனால் வாகனங்கள் அணி வகுத்து சென்றன. இதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    குடும்பத்துடன் வந்த பொதுமக்கள் தங்கள் கொண்டு வந்த உணவுகளை தடுப்பணை யின் வெளிபகுதியில் அமர்ந்து சாப்பிட்டனர். மேலும் அங்கு விற்பணை செய்யப்படும் மீன்களையும் ருசித்து சாப்பிட்டு சென்றனர்.

    கெடிவேரி அணைக்கு கடந்த 3 நாட்களாக சுமார் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து குளித்து மகிழ்ந்தனர். கடந்த சனிக்கிழமை 7 ஆயிரம் பேரும், ஞாயிற்றுக்கிழமை 12 ஆயிரத்து 500 பேரும்,

    நேற்று திங்கட்கிழமை 14 ஆயிரத்து 500 பேர் என மொத்தம் 34 ஆயிரம் பேர் வந்திருந்தனர். இதன் மூலம் கடந்த 3 நாட்களில் கொடிவேரி அணை மூலம் ரூ1 லட்சத்து 70 ஆயிரம் வசூலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×