search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
    X

    கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

    • இரவு பெய்த கனமழையால் மழை வெள்ளம் கசிவுநீர் ஓடைகளில் கலந்து பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
    • கொடிவேரி அணையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் பொதுபணித்து றையினர் தடை விதித்துள்ளனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் கீழே விழும் தண்ணீர் அருவிபோல் கொட்டுவதால் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் குளித்து விட்டு மகிழ்ச்சியாக செல்வது வழக்கம்.

    இந்நிலையில் சத்தியமங்கலம், கோபி செட்டிபாளையம், நம்பியூர், அரசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இரவு பெய்த கனமழையால் மழை வெள்ளம் கசிவுநீர் ஓடைகளில் கலந்து பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

    இதனால் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்ப ட்டுள்ள கொடிவேரி அணையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் பொதுபணித்து றையினர் தடை விதித்துள்ளனர்.

    மேலும் பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி திறக்கப்பட்டுள்ள நிலையில் மழை வெள்ளம் வினாடிக்கு 4200 கன அடி மேலாக பெருக்கெடுத்து ஓடுவதால் பாலத்தில் நின்று செல்பி எடுக்கவும், ஆற்றில் இறங்கவும் தடை என அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×