search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேஆர்பி அணை"

    • கே.ஆர்.பி., அணை கட்டி முடிக்கப்பட்டு, 1957-ம் ஆண்டு அணை திறக்கப்பட்டது.
    • அணை நீர்மட்டம் கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் நேற்று வரை, 248 நாட்களாக தொடர்ந்து, 50 அடிக்கு மேல் அணையில் தண்ணீர் இருப்பு இருந்தது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அடுத்த பெரியமுத்துார் அருகே, பெண்ணை ஆற்றின் குறுக்கில், கே.ஆர்.பி., அணை கட்டி முடிக்கப்பட்டு, 1957-ம் ஆண்டு அணை திறக்கப்பட்டது. இதன் மூலம் நேரடியாக, 9,012 ஏக்கர் விவசாய நிலங்களும், மறைமுகமாக, 40,000 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன. அணை கட்டி முடித்து, 66 ஆண்டுகளில் கடந்த, 2017ல் அணையின் பிரதான ஒரு ஷட்டர் உடைந்ததால் முதல்முறையாக இந்த அணை அந்த ஆண்டில் நிரம்பவில்லை. புதிய ஷட்டர் மாற்றும் பணியால் அடுத்த 3 ஆண்டுகளும் அணை நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

    ஆனால், 63 ஆண்டுகளும், இந்த அணை நிரம்பி, எப்போதும் ஆற்றில் தண்ணீர் ஓடுவதால், இந்த அணையை, இம்மாவட்ட மக்கள் வரப்பிரசாதமாக கருதுகின்றனர்.

    இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டின் இறுதியில், 4 மாதங்கள் பரவலாக மழை பெய்ததால், கே.ஆர்.பி., அணைக்கு தொடர்ந்து நீர்வந்து கொண்டிருக்கிறது.

    அணை நீர்மட்டம் கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் நேற்று வரை, 248 நாட்களாக தொடர்ந்து, 50 அடிக்கு மேல் அணையில் தண்ணீர் இருப்பு இருந்தது.

    கடந்த, 2 மாதங்களாக மழை இல்லாததால், 248 நாட்களுக்கு பிறகு நேற்று, அணை நீர்மட்டம் மொத்த உயரமான, 52 அடியில், 49.95 அடியாக குறைந்தது. அணைக்கு, 132 கன அடிநீர் வந்து கொண்டிருந்த நிலையில் அணையில் இருந்து வாய்காலில் 192 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது.

    • கிருஷ்ணகிரி அருகே உள்ள கே.ஆர்.பி டேம் பகுதியில் கனமழை பெய்தது.
    • மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோசன நிலை மாறியதால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக கன மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    அக்டோபர் மாதம் தொடங்கியதில் இருந்து மாவட்டம் முழுவதும் கடும் வெப்பம் நிலவி வந்தது. தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

    அதனடிப்படையில் நேற்று மாலை தருமபுரி, நல்லம்பள்ளி, இண்டூர், அதியமான்கோட்டை, ஜருகு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாகவும், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பென்னாகரம், ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழையும் பெய்தது.

    கோடை வெயிலுக்கு இணையாக மாவட்டத்தில் 90 டிகிரி வெயில் பதிவாகி வந்த நிலையில், நேற்று தருமபுரி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    தருமபுரி-1மி.மீ, பாலக்கோடு-8, மாரண்டஅள்ளி-8, பென்னாகரம்-3, ஒகேனக்கல்-2 என மாவட்டத்தில் மொத்தம் 22. 6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    மேலும் இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோசன நிலை மாறியதால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    மேலும் மானாவாரி நிலங்களில் நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்துள்ள விவசாயிகள் மழை இன்றி தவித்து நிலையில் மாவட்டத்தில் தொடர்ந்து நல்ல மழை பெய்ததால் விவசாயிகளும் தங்களது விவசாய பணிகளை தொடங்குவதற்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

    கிருஷ்ணகிரியில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் குளிர்ந்த காற்று வீச மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் கனமழையாக பெய்ய தொடங்கிய இந்த விடிய விடிய பெய்தது. இதன் காரணமாக கிருஷ்ணகிரியில் உள்ள பஸ் நிலையம், லண்டன் பேட்டை, முல்லை நகர், சேலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது.

    இதேபோன்று கிருஷ்ணகிரி அருகே உள்ள கே.ஆர்.பி டேம் பகுதியிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக கே.ஆர்.பி. அணைக்கு நேற்று நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதேபோன்று மாவட்டத்தில் உள்ள அஞ்செட்டி, பாரூர், தேன்கனிக்கோட்டை, ஓசூர், ராயக்கோட்டை, சூளகிரி, தளி, சின்னார் அணை, கெலவரப்பள்ளி அணை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லிமீட்டரில் வருமாறு:

    அஞ்செட்டி-3, பாரூர்-6.8, தேன்கனிக்கோட்டை-5.0, ஓசூர்-30.1, கிருஷ்ணகிரி-44, ராயக்கோட்டை-13, சூளகிரி-18, தளி-10, சின்னார் அணை-16, கெலவரப்பள்ளி அணை-37, கே.ஆர்.பி அணை-62.4 என மாவட்டம் முழுவதும் மொத்தம்-245.3 மிமீ பதிவாகி உள்ளது.

    மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து வர தொடங்கியது. மேலும், கனமழை காரணமாக கே.ஆர்.பி. அணை மற்றும் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிரிக்க தொடங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • கடந்த 3 நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக உயர்ந்துள்ளது.
    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பகலில் வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.

    கிருஷ்ணகிரி:

    தொடர் மழை எதிரொலியாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை நிரம்பியது. இதனால் தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை நிரம்பியது விடுக்கப்பட்டுள்ளது.

    தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தும், அதிகரித்தும் காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக உயர்ந்துள்ளது.

    அதன்படி கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 645 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை வினாடிக்கு 1066 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 50.65 அடியாக உள்ளது. இதற்கு மேல் அணையில் நீர் தேக்க முடியாது என்பதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் பாசன கால்வாய்கள், மதகுகள் வழியாக திறந்துவிடப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் பெய்யும் மழை பொறுத்து நீர்வரத்து திறக்க அதிகரிக்கக்கூடும் என்பதால், தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீர்வரத்து அதிகமாகும்பட்சத்தில் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கக்கூடும். இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்பும் ஆகிய 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் வசிக்கக்கூடிய மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பகலில் வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி அணையில் 60.20 மில்லி மீட்டரும், போச்சம்பள்ளி 36.20, கிருஷ்ணகிரி 26, பர்கூர் 14.20, நெடுங்கல் 7, ராயக்கோட்டை 5, தேன்கனிக்கோட்டை 5 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    ×