search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் 248 நாட்களுக்கு பிறகு 49.95 அடியாக சரிவு
    X

    கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் 248 நாட்களுக்கு பிறகு 49.95 அடியாக சரிவு

    • கே.ஆர்.பி., அணை கட்டி முடிக்கப்பட்டு, 1957-ம் ஆண்டு அணை திறக்கப்பட்டது.
    • அணை நீர்மட்டம் கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் நேற்று வரை, 248 நாட்களாக தொடர்ந்து, 50 அடிக்கு மேல் அணையில் தண்ணீர் இருப்பு இருந்தது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அடுத்த பெரியமுத்துார் அருகே, பெண்ணை ஆற்றின் குறுக்கில், கே.ஆர்.பி., அணை கட்டி முடிக்கப்பட்டு, 1957-ம் ஆண்டு அணை திறக்கப்பட்டது. இதன் மூலம் நேரடியாக, 9,012 ஏக்கர் விவசாய நிலங்களும், மறைமுகமாக, 40,000 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன. அணை கட்டி முடித்து, 66 ஆண்டுகளில் கடந்த, 2017ல் அணையின் பிரதான ஒரு ஷட்டர் உடைந்ததால் முதல்முறையாக இந்த அணை அந்த ஆண்டில் நிரம்பவில்லை. புதிய ஷட்டர் மாற்றும் பணியால் அடுத்த 3 ஆண்டுகளும் அணை நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

    ஆனால், 63 ஆண்டுகளும், இந்த அணை நிரம்பி, எப்போதும் ஆற்றில் தண்ணீர் ஓடுவதால், இந்த அணையை, இம்மாவட்ட மக்கள் வரப்பிரசாதமாக கருதுகின்றனர்.

    இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டின் இறுதியில், 4 மாதங்கள் பரவலாக மழை பெய்ததால், கே.ஆர்.பி., அணைக்கு தொடர்ந்து நீர்வந்து கொண்டிருக்கிறது.

    அணை நீர்மட்டம் கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் நேற்று வரை, 248 நாட்களாக தொடர்ந்து, 50 அடிக்கு மேல் அணையில் தண்ணீர் இருப்பு இருந்தது.

    கடந்த, 2 மாதங்களாக மழை இல்லாததால், 248 நாட்களுக்கு பிறகு நேற்று, அணை நீர்மட்டம் மொத்த உயரமான, 52 அடியில், 49.95 அடியாக குறைந்தது. அணைக்கு, 132 கன அடிநீர் வந்து கொண்டிருந்த நிலையில் அணையில் இருந்து வாய்காலில் 192 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×