search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றால அருவி"

    • குற்றாலத்தின் முக்கிய அறிவிகளான ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • பழைய குற்றால அருவியில் போதுமான அளவு தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் அங்கு சென்று குளித்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலத்தின் முக்கிய அறிவிகளான ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் குளிப்பதற்கு தடை விதித்திருந்தது. இதனால் நேற்று விடுமுறை தினம் என்பதால் குற்றால அருவியில் குளிக்க வருகை புரிந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இருப்பினும் பழைய குற்றால அருவியில் போதுமான அளவு தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் அங்கு சென்று குளித்தனர். இரவில் மழை இல்லாததால் ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் தண்ணீர் சீற்றம் குறைந்ததை அடுத்து இன்று காலை முதல் மீண்டும் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். வெளியூர் சுற்றுலா பயணிகள் குளிக்கும் அளவிற்கு பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் விழுவதால் அங்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டு வருகிறது.

    • அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் திடீர் தடை விதித்தது.
    • சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் பலர் குற்றால அருவிகளில் புனித நீராடி செல்வது வழக்கம்.

    தென்காசி:

    தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி உள்ள 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் நேற்று காலை முதல் தென்காசி மாவட்டம் முழுவதும் அவ்வப்போது மிதமான சாரல் மழை விட்டு விட்டு பெய்து வந்தது.

    குறிப்பாக நேற்று நள்ளிரவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி,பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் இன்று அதிகாலை முதல் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் திடீர் தடை விதித்தது. சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் பலர் குற்றால அருவிகளில் புனித நீராடி செல்வது வழக்கம்.

    இருப்பினும் தடை உத்தரவால் இன்று அதிகாலை முதல் அய்யப்ப பக்தர்கள் அருவிகளை தூரத்திலிருந்து ரசித்து விட்டு ஏமாற்றத்துடன் சென்றனர்.

    மேலும் பள்ளிகளுக்கு தற்பொழுது தொடர் விடுமுறை என்பதாலும், கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை என்பதாலும் குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகளும் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    ×