search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறுவை"

    • காவிரி ஆற்றில் இருந்த தண்ணீரில் பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனர்.
    • நடவு செய்த குறுவை பயிர்களுக்கு இன்னும் 25 நாட்களுக்கு தண்ணீர் தேவைப்படும்.

    பூதலூர்:

    மேட்டூர் அணையில் நீர் இருப்பு நிலவரம் நாளுக்கு நாள் கவலை அளிப்பதாக உள்ளது.

    இன்றுகாலை நிலவரப்படி மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு 40.38டிஎம்சி ஆக இருந்தது.

    நீர்வரத்து 2556கன அடி, தண்ணீர் 6503 கன அடிதிறந்து விடப்படுகிறது.

    கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

    இதனால் காவிரி ஆற்றின் கிளை ஆறான குடமுருட்டி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை.

    வெண்ணாற்றில் 2402 கன அடியும், கல்லணை கால்வாயில் 1011 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    வெண்ணாற்றில் 2601 கன அடி திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது மேலும் தண்ணீர் திறப்பு குறைக்கபட்டுள்ளது.

    விடுமுறை நாளான நேற்று கல்லணையில் சுற்றுலா பயணிகள் கூடி மிக சிறிய அளவில் காவிரி ஆற்றில் இருந்த தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

    காவிரி பாசன பகுதிகளில் பல இடங்களில் குறுவை பயிர் கதிர் வந்து காணப்படுகிறது.

    முன்னதாக நடவு செய்த குறுவை இன்னும் ஒரு வாரத்தில் அறுவடை செய்யப்படும்.கால்வாய்களில் தண்ணீர் வந்து நடவு செய்த குறுவை பயிர்களுக்கு இன்னும் 25 நாட்களுக்கு தண்ணீர் தேவைப்படும்.

    தற்போதயசூழலில் மேட்டூர் அணையில் இருக்கும் தண்ணீர் குறுவை பயிரை காப்பாற்ற போது மானதாக இருக்காது என்று விவசா யிகள் கருதுகின்றனர்.

    குறுவை பயிர் செய்துள்ள பகுதியில் மழை பெய்தால் குறுவை தப்பிக்கும்.

    இல்லை என்றால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்று முன்னோடி விவசாயகள் தெரிவித்தனர்.

    • என்.எல்.சி. வாய்க்கால் வெட்டி மண்ணை போட்டு நெல்மணி முளைத்த வயல்களை சேதப்படுத்தியது.
    • குறுவை நேரடி மற்றும் நடவு பயிர்கள் 75 சதவீதம் அழிந்துவிட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரத்தில் திமுக, மதிமுக, பா.ம.க. உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி 800-க்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவில் இணையும் விழா நடந்தது.

    அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் பி.வி. பாரதி, முன்னாள் எம்.எல்.ஏ., ம.சக்தி, ஒன்றிய செயலாளர்கள் ஏ.கே.சந்திரசேகரன், ரவிச்சந்திரன், நகர செயலாளர் வினோத் முன்னிலை வகித்தனர். விழாவில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்து கொண்டு மாற்று கட்சியிலிருந்து விலகி வந்தவர்களை சால்வை அணிவித்து வரவேற்றார். மதிமுகவிலிருந்து அண்மையில் விலகி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மார்கோனி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    விழாவில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:

    நீர் முறையாக வராததால் கடைமடைப் பகுதிகளில் குறுவைப் பயிர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேராததால் நேரிடை விதைப்பு மற்றும் நடவு செய்த குறுவை பயிர்கள் செத்து மடியும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அரசு இதனை காக்க எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

    குறுவை நேரடி மற்றும் நடவு பயிர்கள் 75 சதவீதம் அழிந்துவிட்டது. மீதமுள்ள பயிர்களை காப்பாற்ற முறை வைக்காமல் பாசனத்திற்கு அரசு போதிய தண்ணீர் வழங்க வேண்டும்.

    என்.எல்.சி விவகாரத்தில் கதிர்கள் வந்த பயிர்கள் 10, 15 தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்தது. என்எல்சி வாய்க்கால் வெட்டி மண்ணை போட்டு நெல்மணி முளைத்த வயல்களை சேதப்படுத்தியது. இதனால் பயிர்களை இழந்து விவசாயிகள் தவிக்கின்றனர். என்எல்சி நிறுவனம் அறுவடை முடியும் வரை பணியை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சில இடங்களில் பாதாள சக்கடைக்காக சாலைகள் தோண்டப்பட்டுள்ளன.
    • ஈரப்பதம் அளவை தளர்த்தி உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் தஞ்சையில் நேற்று பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்தது.

    மாலையில் திடீரென குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. இரவு 7 மணிக்கு இடி- மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து 3 மணி நேரம் இடைவிடாது கனமழை கொட்டியது.

    பலத்த காற்றுடன் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு இடையே ஊர்ந்து சென்றனர்.

    பலர் ஒதுக்குப்புறமான இடத்தில் நின்று கொண்டனர்.

    சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தஞ்சை சீனிவாசன் பிள்ளை சாலை ரவுண்டானாவில் உள்ள ரயில்வே கீழ் பாலத்தில் தண்ணீர் பெருமளவில் தேங்கி நின்றதால் அந்த வழியே கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். தஞ்சை நகரில் சில இடங்களில் பாதாள சக்கடைக்காக சாலைகள் தோண்டப்பட்டுள்ளன.

    அந்த இடங்களிலும் மழை நீர் தேங்கி நின்றது. தஞ்சை காந்திஜி சாலை, அண்ணா சாலை, பழைய பஸ் நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடம் போன்றவற்றில் புத்தாடைகள் விற்பனை செய்வதற்காக அமைக்கப்பட்டிருந்த தரைக்கடை வியாபாரம் கனமழையால் பாதிக்கப்பட்டது.

    தள்ளுவண்டி, தரைக்கடை மூலம் நடைபெற்ற வியாபாரமும் பாதிக்கப்பட்டது.

    தஞ்சை மாவட்டத்தில் தஞ்சையில் தான் அதிகபட்சமாக 73 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது.

    இதேபோல் திருவையாறு, வல்லம், பூதலூர், ஒரத்தநாடு, நடுக்காவேரி, திருக்காட்டுப்பள்ளி, குருங்குளம், கும்பகோணம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது.

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெரிய அளவில் மழை இன்றி காணப்பட்டதால் குறுவை இறுதி கட்ட அறுவடை பணிகள்‌ மும்முரமாக நடந்து வந்தன.

    தற்போது மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளதால் ஏற்கனவே அறுவடை செய்து விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த குறுவை நெல் நனைந்தது.

    சாலைகளில் தர்பை போட்டு மூடி வைக்கப்பட்டிருந்த நெல் மணிக்குள்ளும் மழைநீர் ஊடுருவி சென்றதால் ஈரப்பதமானது.

    இதே போல் அறுவடைக்காக காத்திருக்கும் குறுவை நெற்பயிர்களும் பாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகள் மேலும் நனையும் அபாயம் உள்ளது என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

    ஈரப்பதம் அளவை தளர்த்தி உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை 9 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    தஞ்சாவூர்-73, வல்லம் -38, பாபநாசம் -29, மதுக்கூர் - 18, மஞ்சளாறு -9.20, அய்யம்பேட்டை-8, பூதலூர் -7.40, கும்பகோணம் -6.

    தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 228.20 மி.மீ. மலை அளவு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கல்லணையில் இருந்து இந்த பருவத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வெண்ணாற்றில் 9 ஆயிரத்து 8 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
    • திருக்காட்டுப்பள்ளி பகுதியில் நல்ல வெயில் அடித்து வருவதால் விவசாயிகள் முன்பட்ட குறுவை அறுவடை பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    பூதலூர்:

    மேட்டூர் அணைக்கு கர்நாடகத்திலிருந்து வரும் உபரி நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 89,599 கன அடியாக உள்ளது.மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 88 ஆயிரத்து 887 கனஅடியாக பராமரிக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 93. 470 டிஎம்சி ஆகவும் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் உள்ளது.

    திருச்சி மாவட்டம் முக்கொம்பு அணையில் இருந்து காவிரியில் 41 ஆயிரத்து 112 கனஅடியும், கொள்ளிடத்தில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 693 கன அடியும் திறந்து விடப்படுகிறது.கல்லணையில் இருந்து இந்த பருவத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வெண்ணாற்றில் 9 ஆயிரத்து 8 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.காவிரியில் 8,506 கன அடி, கல்லணை கால்வாயில் 3221 கன அடியும், கொள்ளிடத்தில் 23890 கன அடியும் திறந்து விடப்படுகிறது.

    கொள்ளிடத்தில் நேற்று மாலை 1.36 லட்சம் கன அடி தண்ணீர் ஓடிக்கொண்டுள்ளது. இதனால் வடுவகுடி, மரூர், ஆச்சனூர் உள்ளிட்ட தாழ்வான பகுதியில் உள்ள நெல்வயல்கள், வாழையில் புகுந்த தண்ணீர் வடிய வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. திருக்காட்டுப்பள்ளி பகுதியில் நல்ல வெயில் அடித்து வருவதால் விவசாயிகள் முன்பட்ட குறுவை அறுவடை பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    திருக்காட்டுப்பள்ளி பகுதியில் முன்பட்டகுறுவை சாகுபடி செய்து உள்ள கிராமங்களில் அறுவடை எந்திரங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மழை இல்லாமல் இருந்தால் இன்னும் சில நாட்களில் முன்பட்ட அறுவடை நிறைவடையும் நிலையில் அறுவடை இயந்திரங்கள் குவிந்து உள்ளன. அறுவடை இயந்திரங்கள் குவிந்து அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த போதிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பது, விரைந்து கொள்முதல் செய்வது என்பதில் மந்த நிலைமையே நிலவுகிறது.

    விவசாயிகள் தங்கள் விளைவித்த நெல்லை வெயில் அடிக்கும் சமயத்தில் அறுவடைக்கு முனைப்பு காட்டும் போது, அதே அளவில் ஈரப்பதம் காரணம் காட்டி கொள்முதல் செய்வதில் தாமதம் செய்யாமல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முனைப்பு காட்டி முன்பட்ட குறுவை நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    • ஒருவருக்கு அரை ஏக்கருக்கு மட்டுமே வழங்க இயலும் என்று கூறியதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • சில கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் குறுவை நடவு செய்த பின்னரே சான்று தருவதாக கூறியதால் இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம், பூதலூர் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகள் நேற்று குறுவை தொகுப்பு திட்டத்தில் உரங்கள் பெறுவதற்கு ஆணை வாங்க காத்திருந்தனர். அரசு அறிவிப்பின்படி குறுவை தொகுப்பு திட்டம் ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர் பரப்பிற்கு வழங்கப்பட வேண்டும். இதற்காக விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர்களிடம் சான்றுகள் பெற்று வந்திருந்தனர்.

    நேற்று திடீரென விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு குறுவை தொகுப்பு திட்டம் வழங்க இயலாது, ஒருவருக்கு அரை ஏக்கருக்கு மட்டுமே வழங்க இயலும் என்று கூறியதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.பூதலூர் வட்டாரத்தில் வலிமையான விவசாயிகள் துணிவான கிராம நிர்வாக அலுவலர்கள மூலம் முன் கூட்டியே சான்றிதழ்களை பெற்று குறுவை தொகுப்பு திட்ட உரங்களை பெற்றுள்ளனர்.

    சில கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் குறுவை நடவு செய்த பின்னரே சான்று தருவதாக கூறியதால் இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது. பூதலூரில் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும் பயன் பெறும் வகையில் வேளாண்துறை அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து விவசாயிகளுக்கு அரசு அறிவித்த திட்ட பயன்கள் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுகின்றனர்.

    • குறுவைக்கான பயிர் இன்சூரன்ஸ் அறிவிப்பு செய்வதுடன் கால நீட்டிப்பு செய்து பயிர் காப்பீடு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • குறுவை காப்பீடு செய்ய 31ஆம் தேதி உடன் கெடு முடிவடைய உள்ள நிலையில் இதுவரை தமிழக அரசு அறிவிப்புகளையும் வெளியிடவில்லை.

    தரங்கம்பாடி:

    மின் கட்டணஉயர்வை கண்டித்து மயிலாடுதுறையில் த.மா.கா. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறும்போது:-

    மின் கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும். குறுவை காப்பீடு செய்ய 31ஆம் தேதி உடன் கெடு முடிவடைய உள்ள நிலையில் இதுவரை தமிழக அரசு அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. குறுவைக்கான பயிர் இன்சூரன்ஸ் அறிவிப்பு செய்வதுடன் கால நீட்டிப்பு செய்து பயிர் காப்பீடு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இந்நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் சிங்காரவேலன், மாநில இளைஞரணி துணை பொதுச் செயலாளர் கார்த்திக், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன், செம்பை வட்டாரத் தலைவர் சார்லஸ் உள்ளிட்ட ஏராளமான கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • பூதலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னல் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
    • குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு இல்லை என்பது விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னல் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளமாக ஓடியது. மழை தொடங்கியவுடன் மின்சாரம் தடைபட்டு பின் நீண்ட நேரம் கழித்து மின்சாரம் மீண்டும் வந்தது.

    இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதியடைந்தனர். நேற்று பெய்த மழை தற்போது நடவு செய்யப்பட்டுள்ள குறுவை பயிர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்றும் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள முன்பட்ட குறுவை பயிர்கள் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கி ன்றனர்.

    கடந்த ஆண்டு மழையால் குறுவை அறுவடையின் போது விவசாயிகள் இழப்பை சந்தித்தனர். குறுவைக்கு காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படாததால் பேரிழப்பு ஏற்பட்டது. மத்திய அரசு காப்பீட்டு நிறுவனம் மாநில அரசின் பங்கு தொகையை உயர்த்தியது காப்பீடு செய்ய இயலாமல் போனதற்கு காரணம் என்று கூறப்பட்டது.ஒரு ஆண்டுக்கு மேலாக முடிவேதும் எடுக்காமல் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு இல்லை என்பது விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே, இனியும் காலம் தாழ்த்தாது டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர்களுக்கு காப்பீடு செய்வது குறித்து இறுதி முடிவை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்ட நிலையில் கல்லணையில் இருந்து காவிரியில் 9,006 கன அடி, வெண்ணாற்றில் 9001 கன அடி, கல்லணை கால்வாயில் 2804 கனஅடி, கொள்ளிடத்தில் 4494 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    • உழவு பணிகள் நடைபெற்ற வயல்களில் ஆங்காங்கே களைகளை அகற்றும் பணியில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    • கடந்த ஆண்டு பூதலூர் பகுதியில் குறுவை நடவு செய்யாமலேயே சான்று பெற்று உரங்களை வலிமை வாய்ந்த விவசாயிகள் பெற்று சென்று விட்டதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    பூதலூர்:

    பூதலூர் பகுதியில் மேட்டூர் அணை திறந்து அதில் இருந்து வந்த தண்ணீர் கல்லணைவந்தடைந்து, கல்லணையில் இருந்து பிரதான ஆறுகளில் திறக்கப்பட்டது. அதன் பின்னர் கிளை ஆறுகளில் மற்றும் வாய்க்கால்களில் திறக்கப்பட்டு, குறுவை சாகுபடிக்காக நாற்றங்கால் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

    குறுவை சாகுபடியை சிலர் பாய் நாற்றங்கால் மூலம் இயந்திர நடவு பணிகளிலும், பலர் நாற்றங்காலில் விதைப்பு செய்து அதை பறித்து நடவு செய்யும் பணிகளிலும் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பூதலூர் ஆனந்த காவேரி பாசனப்பகுதியில் உள்ள விவசாயிகள் முன்கூட்டியே நாற்றுவிட்டவர்கள் நடவு பணிகளைமுடித்துள்ளனர்.கிளை வாய்க்கால்களில் தண்ணீர் வந்து நாற்று விட்டவர்கள்

    தற்போது தங்கள் வயல்களை நடவு செய்வதற்கு ஏற்றவாறு பண்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனந்த காவேரி பாசனப்பகுதியில் உள்ள வயல்களில் எங்கு நோக்கினும் டிராக்டர்கள் மூலம் உழவு பணிகள் நடைபெற்று வருகின்றன.உழவு பணிகள் நடைபெற்ற வயல்களில் ஆங்காங்கே களைகளை அகற்றும் பணியில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர. வயல்வரப்புகளை சீரமைக்கும் பணிகளில் ஆண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கப்பட்டுள்ளதாகவும். இன்னமும் உரம் வழங்கபடவில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    இதிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் குறுவை நடவு செய்த பின்னரே சான்று வழங்க முடியும் என்று சொல்வதால் உரம் கிடைக்காத நிலை ஏற்படும் என்று கூறுகின்றனர். கடந்த ஆண்டு பூதலூர் பகுதியில் குறுவை நடவு செய்யாமலேயே சான்று பெற்று உரங்களை வலிமை வாய்ந்த விவசாயிகள் பெற்று சென்று விட்டதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    தஞ்சை மாவட்ட கலெக்டர், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி குறுவை தொகுப்பு திட்ட பயன்கள் குறுவை சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கேட்டுக்கொண்டுள்ளனர். யூரியா உரம் கிடைப்பது சிரமமாக உள்ளது என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    காம்ளக்ஸ் உரம் வாங்கினால் யூரியா தருவதாக தனியார் வியாபாரிகள் தெரிவிப்பதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். உர விற்பனை யாளர்கள்மொத்தமாக யூரியா கொள்முதல் செய்ய முற்படும் போது காம்ளக்ஸ் உரம் வாங்க வேண்டும் என்று உர நிறுவனங்கள் நிர்பந்தம் செய்வதாக கூறுகின்றனர்.

    இது போன்ற சூழ்நிலையில் விவசாயிகளை நிம்மதியாக விவசாயம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.இதற்கிடையே ஜுன் 15ம் தேதி காவிரி மற்றும் வெண்ணாற்றில் 6நாட்களுக்கு மாறி மாறி தண்ணீர் குறைந்த அளவில் திறக்கப்படுகிறது. இன்றைய நிலவரப்படி காவிரியில் குறைந்த அளவு 714கன அடியும் வெண்ணாற்றில் 6514கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் கிளை வாய்க்கால்கள் கடைமடை பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

    இதனால் குறுவை நடவு பணிகள் தாமதம் அடையும் வாய்ப்பு உள்ளது. கல்லணை கால்வாயில் தற்போது வரை முழு அளவில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை.தற்போது 1901கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. குறுவை நடவு முடியும் வரை அனைத்து ஆறுகளிலும் முழு அளவில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    ×