search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறிஞ்சி மலர்கள்"

    • குறிஞ்சிச்செடி அல்லது நீலக்குறிஞ்சி என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் பரவலாக வளரும் ஒரு செடியாகும்.
    • கொடைக்கானல் வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் அரியவகை மலரான 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர் பூப்பது அபூர்வ நிகழ்வாக உள்ளது. குறிஞ்சியில் கல் குறிஞ்சி, சிறு குறிஞ்சி, நெடுங்குறிஞ்சி, நீலக்குறிஞ்சி எனப்பல வகைகள் உண்டு. இவற்றில் நீலக்குறிஞ்சி மட்டுமே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலைப்பகுதிகளில் பூக்கும் மலர் ஆகும்.

    குறிஞ்சிச்செடி அல்லது நீலக்குறிஞ்சி என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் பரவலாக வளரும் ஒரு செடியாகும். இதில் பூத்துக்குலுங்கும் நீல மலர்களினால் இம்மலைப் பிரதேசம் நீல நிறத்தில் தோன்றுவதால், தென்னிந்தியாவில் இம்மலைத் தொடர்ச்சிக்கு நீலகிரி மலை என்ற பெயர் வந்தது.

    30-க்கும் மேற்பட்ட இவ்வகை மலர்கள் மேற்கு தொடர்ச்சிமலைகள், நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைகளில் மட்டுமே வளர்கின்றன. பழந்தமிழர்களின் நிலவகை பகுப்பில் மலையும் மலை சார்ந்த நிலமும் "குறிஞ்சி" திணையாகக் குறிக்கப்படுகின்றன. இதன்மூலம் தமிழர்களின் வாழ்வியல் முறை நிலத்தை ஒட்டியே இருந்தது என்பது உறுதியாகும்.

    கடல் மட்டத்திலிருந்து 1300 முதல் 2400 மீ. உயரத்தில் வளரும் இச்செடி, 12 வருடங்களுக்கு ஒரு முறையே பூக்கும். பொதுவாக 30 முதல் 60 செ.மீ. உயரம் வரை வளரும். இதற்கு ஏற்றத் தட்பவெட்ப சூழ்நிலை இருந்தால் 180 செ.மீ. உயரம் வரையிலும் வளரும்.

    1994-ஆம் ஆண்டில் பூத்த இச்செடி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்திலும் கேரளாவிலும் 2006-ஆம் ஆண்டில் பூத்தது. அதன்பிறகு 2018-ம் ஆண்டில் குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்கிய நிலையில் தற்போது மற்றொரு வகையான குறிஞ்சி மலர்கள் 2023-ம் ஆண்டில் கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் பூத்து குலுங்கி வருகிறது.

    மணி போன்ற வடிவம் கொண்ட குறிஞ்சி மலர்கள் மலைச் சரிவுகளில் பூத்துக்குலுங்கி மலைப் பகுதிகளுக்குப் புதிய வண்ணங்களைத் தீட்டி வருகின்றன.

    இயற்கையாக வளரும் இவ்வகை செடிகளை பறித்து தனியார் தோட்டங்களிலும் சிலர் வளர்த்து வருகின்றனர். தற்போது அவ்வகை செடிகளில் பூக்கள் பூத்து குலுங்கி வருகிறது. இதனை கொடைக்கானல் வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

    • ஓடை குறிஞ்சி மலர்களிலேயே தற்போது பூத்துள்ள மலர்கள் மணி வடிவத்தில் உள்ளது.
    • அரிய வகை ஓடை குறிஞ்சி மலர்கள் அருகில் சென்று புகைப்படங்களும் எடுத்து செல்கின்றனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் விண்ணை முட்டும் மரங்களும் பசுமை போர்த்திய புல்வெளிகளும் தனிச்சிறப்பாக இருந்தாலும் இந்த நகருக்கு பல்வேறு அடையாளங்களும் உள்ளன.

    அரிய வகை தாவரங்களில் தொடங்கி மலைத்தேன், குறிஞ்சி மலர் வரை அடங்கும். மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் குறிஞ்சி மலர்களில் ஒருவகையான ஓடைக்குறிஞ்சி தற்போது கொடைக்கானலில் பூக்க தொடங்கி உள்ளது. குறிஞ்சி மலர்கள் குடும்பத்தில் ஏறக்குறைய 200 வகை செடிகள் காணக் கிடைக்கின்றன.

    இதில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டும் 30 வகைகளுக்கும் மேலான குறிஞ்சி மலர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    நீல நிறத்தில் பூக்கும் இதுபோன்ற குறிஞ்சி மலர்கள் மலைகளுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. குறிஞ்சி பூவிலேயே ஏராளமான வகைகள் உண்டு. இதில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கக்கூடிய குறிஞ்சி மலர் நீலக்குறிஞ்சி என்று அழைக்கப்படுகிறது. தற்போது பூத்துள்ள இந்த ஓடை குறிஞ்சிகள் வருடம்தோறும் பூக்கும் மலர் என்றும் கூறப்படுகிறது.

    12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கக்கூடிய குறிஞ்சி மலர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு கொடைக்கானலில் பூத்தது. அதன் பிறகு 2030ல் இந்த நீல குறிஞ்சி மலர்கள் பூக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் தற்போது நீரோடைகளை ஒட்டி உள்ள பகுதிகளில் குறிஞ்சி மலர்களில் ஒருவகையாக உள்ள ஓடை குறிஞ்சிகள் பூக்க தொடங்கி இருக்கிறது. மேலும் ஓடை குறிஞ்சி மலர்களிலேயே தற்போது பூத்துள்ள மலர்கள் மணி வடிவத்தில் உள்ளது. அதுவும் மிகச்சிறிய பூக்களாக உள்ளதால் ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது.

    நீரோடைகளில் தற்போது பூத்துள்ள ஓடை குறிஞ்சிகள் ஓடை குறிஞ்சிகளா அல்லது ஓடைக்குறிஞ்சிகளிலேயே வேறு ஏதும் வகைகளா? என தோட்டக்கலை துறையினர் ஆய்வுகளுக்கு உட்படுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியவகை ஓடை குறிஞ்சி மலர்கள் அருகில் சென்று புகைப்படங்களும் எடுத்து செல்கின்றனர்.

    • தமிழகத்தில் கொடைக்கானல், நீலகிரி பகுதிகளில் குறிஞ்சி பூக்கள் பூப்பது வழக்கம்.
    • இடுக்கிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும் நீல குறிஞ்சி மலர்களை பார்த்து மனதை பறிகொடுத்து செல்கின்றனர்.

    திருவனந்தபுரம்:

    அதிகாலை பொழுதில் தோட்டங்களில் பூத்து குலுங்கும் மலர்களை பார்த்தால் மனம் குதூகலிக்கும்.

    இதிலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குறிஞ்சி மலர்களை பார்த்தால் அது தரும் பரவசத்திற்கு இணை ஏதும் இல்லை.

    இயற்கையின் அருங்கொடைகளில் ஒன்றான இத்தகைய மலர்கள் மலையோர பகுதிகளில் மட்டுமே காணப்படும். அந்த வகையில் தமிழகத்தில் கொடைக்கானல், நீலகிரி பகுதிகளில் குறிஞ்சி பூக்கள் பூப்பது வழக்கம்.

    இதில் கேரளாவின் இடுக்கி மலை பகுதியில் தற்போது நீல குறிஞ்சி பூக்கள் பூத்து குலுங்குகின்றன. சாலையோரம் மனதை மயக்கும் வண்ணம் பூத்து கிடக்கும் இப்பூக்கள் அந்த வழியாக செல்வோரை சில நிமிடங்கள் நிற்க வைத்து விடுகிறது.

    இடுக்கிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும் நீல குறிஞ்சி மலர்களை பார்த்து மனதை பறிகொடுத்து செல்கின்றனர்.

    அவர்களில் பலரும் இதனை செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது இந்த காட்சிகள் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

    இதையடுத்து இடுக்கியின் சந்தனபாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் படை எடுத்து வருகிறார்கள்.

    ×