search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குருகிராம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வீடியோ பார்த்த காவல் துறையினர், காரின் பதிவு எண் கொண்டு புஷ்அப் எடுத்த நபரை பிடித்தனர்.
    • வைரல் வீடியோவில் விதிமீறலில் ஈடுபட்ட காரை காவல் துறை பறிமுதல் செய்தது.

    ஓடும் காரின் மீது மர்ம நபர் ஒருவர் புஷ்அப் எடுக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. வைரல் வீடியோவில் உள்ள நபர் எவ்வித தயக்கமும், பயமும் இன்றி சர்வசாதாரணமாக ஓடும் காரின் மீது புஷ்அப் எடுக்கிறார்.

    அதே காரில் இவருடன் பயணம் செய்தவர்கள் கார் ஜன்னலின் வெளியே தங்களது தலையை நீட்டுவது போன்ற காட்சிகளும் வைரல் வீடியோவில் இடம்பெற்று இருந்தன. வைரல் வீடியோவினை டுவிட்டரில் பகிர்ந்த பயனர் ஒருவர், அதனை குருகிராம் போக்குவரத்து காவல் துறை, குருகிராம் காவல் துறை துணை ஆய்வாளர் மற்றும் குருகிராம் காவல் துறையினரை டேக் செய்தார்.

    இவரது செய்கை புஷ்அப் எடுத்த நபருக்கு வினையாக அமைந்து இருக்கிறது. வைரல் வீடியோவை பார்த்த காவல் துறையினர், அதில் உள்ள காரின் பதிவு எண் கொண்டு புஷ்அப் எடுத்த நபரை பிடித்தனர். பொது இடத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட நபருக்கு போக்குவரத்து காவல் துறையினர் ரூ. 6 ஆயிரத்து 500 அபராதம் விதித்தனர்.

    மேலும் பொதுமக்கள் தங்கள் உயிருக்கும், அடுத்தவர்கள் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் குருகிராம் போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். வைரல் வீடியோவில் விதிமீறலில் ஈடுபட்ட காரை பறிமுதல் செய்த காவல் துறையினர், காரின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தலைநகர் டெல்லி அருகே உள்ள குருகிராமில் பைக்கில் வந்த தனக்கு வழிவிடாததால் ஏற்பட்ட தகராற்றில் ஆட்டோ டிரைவரை குறிவைத்து பெண் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லி அருகே உள்ள குருகிராம் பகுதில் இருக்கும் பவானி என்கிளேவ் பகுதியில் உள்ள சந்து ஒன்றில் இன்று காலை ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவை நிறுத்தி விட்டு போன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். பைக்கில் அங்கு வந்த சப்னா என்ற 35 வயது பெண் வழிவிடக்கோரி டிரைவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

    வாக்குவாதம் முற்றி கைக்கலப்பு உருவாகிய சூழ்நிலையில், அங்குள்ளவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பினர். சிறிது நேரத்திற்கு பிறகு தனது வீட்டில் இருந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு வந்த அந்த பெண், ஆவேசமாக டிரைவரை குறிவைத்து சுட்டுள்ளார்.

    மயிரிழையில் டிரைவர் குண்டடி படாமல் தப்பிக்க, மீண்டும் துப்பாக்கியில் குண்டை நிரப்பியுள்ளார். அதற்குள், அங்குள்ளவர்கள் சுதாரித்துக்கொண்டு துப்பாக்கியை அந்த பெண்ணிடம் இருந்து பறித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    ×