search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குண்டும்"

    • சாலை குண்டும், குழியுமாக காட்சியளிப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
    • சாலையில் பொதுமக்கள் கடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை புதிய பஸ் நிலையம் அருகே திருப்பதி கார்டன் பகுதி உள்ளது. இங்கு சுமார் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மழைக் காலங்களில் சாலைகளில் நீர் தேங்கி விடுவதால் மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

    பணியாள ர்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் இந்த சாலையை கடந்து செல்லும் போது மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.

    சாலை குண்டும், குழியுமாக காட்சியளிப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது,

    எங்கள் பகுதியில் சாலை குண்டும், குழியமாக இருப்பதால் எங்கள் சாலையில் பொதுமக்கள் கடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.

    அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. அவசரத்திற்கு சாலையை கடந்து செல்ல சிரமமாக உள்ளது.

    இது குறித்து சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் இந்த பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று புதிய சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி 1-வது வார்டு எஸ்.ஆர்.டி. நகர் பின்புறம் உள்ள சாலை குண்டும், குழியுமாகவும் உள்ளது.
    • நீண்ட ஆண்டுகளாக கோரிக்கையான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி 1-வது வார்டு எஸ்.ஆர்.டி. நகர் பின்புறம் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து வெங்கநாயக்கன்பாளையம் பெரியார் காலனி வரை உள்ள சாலை குண்டும், குழியுமாகவும், பொதுமக்கள் நடக்க முடியாத அளவிலும், பள்ளி வாகனம், இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது.

    மழை நீர் தேங்கி நிற்பதால் இப்பகுதியில் கொசு தொல்லைகளும் மற்றும் நோய் தொற்றும் ஏற்படுகிறது. இப்பகுதியில் உள்ள கழிவு நீர் வடிகால் பகுதி சில இடங்களில் சேதம் அடைந்துள்ளது.

    எஸ்.ஆர்.டி. நகர் பின்புறம் உள்ள 1-வது முதல் 9-வது வீதிகள் வரை புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியை சேர்ந்த பொதுமக்களும், வெங்கநாயக்கன்பாளையம் பெரியார் காலனி, முத்து நகர் பகுதி பொதுமக்களும் இச்சாலை பயன்படுத்தி வருகிறார்கள்.

    இச்சாலை நல்லூர் ஊராட்சி மற்றும் மாதம்பாளையம் ஊராட்சி சேர்ந்த சாலை என்பதால் ஊராட்சி தலைவர் மற்றும் பவானிசாகர் ஒன்றிய சேர்மன், பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

    இதுவரை சாலையை சீரமைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நீண்ட ஆண்டுகளாக கோரிக்கையன சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கணபதி நகர் பகுதியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • 2019-2020ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் தார்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்

    மேட்டுப்பாளையம் அருகே பிளிச்சி ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளது. இதில் 2-வது வார்டுக்குட்பட்ட கணபதி நகர் பகுதியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இங்கு கடந்த 2019-2020ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் தார்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. அப்போது தார்சாலை அமைப்பதற்காக சாலைகள் சமன்படுத்தி அதன் மேல் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டிருந்தது. ஆனால் அதன்பின் இப்பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெறாமல் நிலுவையில் உள்ளது.

    இதனால் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பாதசாரிகளும், வாகன ஓட்டுனர்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுக்கு பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

    இது குறித்து இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்:-

    கடந்த 3 ஆண்டுகளாக மேலாக இப்பகுதியில் தார் சாலை பணி தொடங்கி இன்று வரை முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள து. இதனால் மழைக்கா லங்களில் இச்சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் சாலைப் பணிகள் முடிந்து இதற்கான முழு தொகையும் சம்பந்தப்பட்ட ஒப்பந்தாரர் பெற்று விட்டதாக கூறப்படுகிறது. எனவே பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சாலை பணியை மீண்டும் தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
    • மாணவ- மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள கழுமங்கலம் கிராமத்தில் இருந்து நாகல்குழி செல்லும் தார் சாலை போடப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது அந்த சாலை குண்டும், குழியாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் வெளியூர் சென்று விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு வரும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

    ஊட்டி,

    குன்னூர் நகராட்சி 20-வது வார்டிற்கு உட்பட்டது மாடல் அவுஸ் குடியிருப்பு பகுதி. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    அப்பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மேலும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை காணப்பட்டது. இங்கு சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அதன்பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி மூலம் ரூ.22 லட்சம் செலவில் இரவோடு, இரவாக சாலை அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் சமீபத்தில் குன்னூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக மாடல் அவுஸ் குடியிருப்பு பகுதியில் புதிதாக போடப்பட்ட சாலை மழைநீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் மீண்டும் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. வாகன ஓட்டிகளும் கீழே விழும் நிலையும் காணப்படுகிறது.

    இதற்கு காரணம் இந்த சாலை தரம் இல்லாமல் அமைக்கப்பட்டதாக நகராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, தரமற்ற சாலையை அமைக்கும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையால் பெயர்ந்த சாலையை மீண்டும் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நேதாஜி நகருக்கு செல்லும் சுமார் ஒரு கிலோ மீட்டர் சாலை 20 ஆண்டுகளாக மண் சாலையாகவே உள்ளது.
    • தார்சாலை அமைக்க வலியுறுத்தல்

    நல்லம்பள்ளி,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம்,தடங்கம் ஊராட்சிக்குட்பட்டது நேதாஜி நகர். இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

    சுமார் 25, ஆண்டுகளாக குடி இருந்து வருகின்றனர்.இங்கு குடியிருப்பவர்கள் ஊராட்சிக்கு வீட்டு வரியும் செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தடங்கம் மெயின்ரோட்டில் இருந்து நேதாஜி நகருக்கு செல்லும் சுமார் ஒரு கிலோ மீட்டர் சாலை 20 ஆண்டுகளாக மண் சாலையாகவே உள்ளது.

    மழைகாலங்களில் குண்டும் குழியுமாக உள்ள மண் சாலையில் தண்ணீர் தேங்குவதால் பாதசாரிகள் நடக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.

    மேலும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் சேறு,சகதியில் சிக்கிக்கொண்டு கீழே விழுந்து விடுகின்றனர்.

    மண் சாலையை தார் சாலையாக மாற்ற வலியுறுத்தி ஊராட்சி நிர்வாகம் மற்றும் நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

    எனவே மாவட்ட நிர்வாகம் இந்த மண் சாலையை தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாற்று வழி இல்லாமல் ஒரே சாலையை பயன்படுத்தி வருவதால் தொடர்ந்து சாலை பழுதடைந்து வருகிறது.
    • துரித நடவடிக்கை மேற்கொண்டு சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி சார்பில் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்க மத்திய ஜல்சக்தி திட்டத்தின் கீழ் 5.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 18 வார்டுகளிலும், 2 வருடங்களாக பணிகள் நடைபெற்று வருகிறது.

    கடந்த ஓராண்டுக்கு முன்பு ஸ்தூபி மைதானம் முதல் கல்கூடஹள்ளி வரை உள்ள பெல்ரம்பட்டி செல்லும் நெடுஞ்சாலை குடிநீர் குழாய் அமைக்க தோண்டப்பட்டது.

    அந்த சாலை சீரமைக்கப்படாததால் குண்டும், குழியுமாக மாறி, கற்கள் பெயர்ந்து, மண் துகள்கள் வாகன ஓட்டிகளின் கண்களில் விழுகிறது.

    சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.மேலும் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    மாற்று வழி இல்லாமல் ஒரே சாலையை பயன்படுத்தி வருவதால் தொடர்ந்து சாலை பழுதடைந்து வருகிறது.

    பேரூராட்சி நிர்வாகத்தின் மெத்தனத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×