search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடும்ப தகராறில்"

    • தூக்கிட்ட நிலையில் சாந்தி தொங்கியவாறு இருந்துள்ளார்.
    • ஈரோடு தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சாஸ்திரி நகர், வாய்க்கால் மேடு, குமரன் நகரை சேர்ந்தவர் சரவணன் (44). இவரது மனைவி சாந்தி (33). உறவினர்களான இருவருக்கும் கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

    இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சாந்தி ஈரோட்டில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். சரவணன் சரி வர வேலை க்கு செல்லாமல், வீட்டை கவனிக்காமல் இருந்து வந்துள்ளார்.

    இதனால் குடும்பம் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் சமீப காலமாக சாந்தி மன அழுத்தத்துடன் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று மாலை சாந்தியின் மகன் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்துள்ளது.

    வெகு நேரம் கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

    அப்போது பேன் மாட்டும் கொக்கியில் தூக்கிட்ட நிலையில் சாந்தி தொங்கியவாறு இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே சாந்தி இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து ஈரோடு தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ராஜம்மாள் வீட்டின் வெளியே உள்ள காலி இடத்திற்கு சென்று தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டார்.
    • சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம்பாளையம், சூரி குட்டை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கரிய கவுண்டர். இவரது மனைவி ராஜம்மாள் (65). இவர்களுக்கு தர்மன் என்ற மகன் உள்ளார். கரிய கவுண்டருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 2 வருடமாக கரிய கவுண்டர், ராஜம்மாள் இருவரும் சிக்கரசம்பாளையம் பகுதியில் செல்வராஜ் என்பவரது தோட்டத்தில் குடியிருந்து விவசாய வேலை பார்த்து வந்தனர்.

    ஒரு வருடத்திற்கு முன்பு சொத்து தகராறில் அவரது மகன் தர்மன் தாய், தந்தையிடம் கோபித்து கொண்டு சென்று விட்டார். ஒரு வருடமாக பெற்றோரிடம் பேச்சுவார்த்தை இல்லை.

    இந்நிலையில் சம்பவத்தன்று வயதான காலத்தில் உடல்நிலை சரியில்லாமல் நாம் தனியாக வாழ்வதைவிட சாவதே மேல் என்று கரிய கவுண்டர், ராஜம்மாள் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் கணவன்-மனைவி இருவரும் தூங்க சென்று விட்டனர்.

    அதிகாலை 3 மணி அளவில் எழுந்த ராஜம்மாள் வீட்டில் இருந்த மண்எண்ணை கேனை எடுத்துக் கொண்டு வீட்டின் வெளியே உள்ள காலி இடத்திற்கு சென்று தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டார்.

    இதை தோட்டத்தில் வேலை செய்யும் பழனிச்சாமி என்பவர் பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார்.

    பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ராஜம்மாள் மீது எரிந்த தீயை அணைத்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே ராஜம்மாள் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன் - மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • செல்வி கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அம்மாப்பே ட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குறிச்சி செம்பாடம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சோலையம்மாள் (55). இவரது கணவர் சுப்பிரமணியன். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர்.

    மூத்த மகள் செல்வி கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள சோலையம்மாளின் தம்பியான பழனிச்சாமியை திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு சிவசக்தி (17) என்ற மகனும், சோபியா (13) என்ற மகளும் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் அதே பகுதியில் ரைஸ் மில் வைத்து நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் கணவன் - மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து செல்வி அவரது கணவரிடம் கோபித்துக் கொண்டு தாயார் சோலையம்மாள் வீட்டுக்கு சென்று விட்டார். இதை தொடர்ந்து செல்வி அவரது தாய் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    நேற்று சோலையம்மாள் 100 நாள் வேலைக்கு சென்று விட்ட நிலையில், வீட்டில் தனியாக இருந்த செல்வி கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீடடு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

    • குடும்பத்தகராறில் மணிகண்டன் தீ வைத்துக்கொண்டார்.
    • இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி, காலிங்கராயன்பாளையம் கிழக்கு முருகன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (44). இவரது மனைவி உமா மகேஸ்வரி.

    இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மணிகண்டன் பவானி கூடுதுறையில் பரிகார புரோகிதராக இருந்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக போதிய வருமானம் கிடைக்காததால் பல்வேறு இடங்களில் மணிகண்டன் கடன் வாங்கி உள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    சம்பவத்தன்று குடும்பத்தகராறில் திடீரென்று பெட்ரோலை எடுத்து தனக்கு தானே ஊற்றி மணிகண்டன் தீ வைத்துக்கொண்டார்.

    பின்னர் மணிகண்டன் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • கிருஷ்ணமூர்த்தி மது போதையில் வாணியை சந்தேகப்பட்டு பேசி, தகராறு செய்ததாக தெரிகிறது.
    • அக்கம்பக்கத்தினர் வாணிக்கு போன் செய்து கிருஷ்ணமூர்த்தி தூக்குமாட்டியதில் பேச்சு, மூச்சு இல்லாமல் இருப்பதாக தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகா வள்ளிபுரத்தான் பாளையம், கள்ளியங்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (30). இவரது மனைவி வாணி (26). இவர்களுகு 8 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    இருவரும் கடந்த 20-ந் தேதி ஈரோடு வைராபாளையத்தில் உள்ள வாணியின் தாய் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு கிருஷ்ணமூர்த்தி மது போதையில் வாணியை சந்தேகப்பட்டு பேசி, தகராறு செய்ததாக தெரிகிறது.

    பின்னர் அவர் கோபத்துடன் அங்கிருந்து புறப்பட்டு கள்ளியங்காட்டு வலசில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் இரவு அக்கம்பக்கத்தினர் வாணிக்கு போன் செய்து கிருஷ்ணமூர்த்தி தூக்குமாட்டியதில் பேச்சு, மூச்சு இல்லாமல் இருப்பதாகவும், ஈரோடு அரசு மருத்து வமனைக்கு கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளனர்.

    இதையடுத்து வாணி மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது கிருஷ்ணமூர்த்தி இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வாணி அளித்த புகாரின்பேரில் வெள்ளோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×