search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "in family dispute"

    • ராஜம்மாள் வீட்டின் வெளியே உள்ள காலி இடத்திற்கு சென்று தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டார்.
    • சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம்பாளையம், சூரி குட்டை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கரிய கவுண்டர். இவரது மனைவி ராஜம்மாள் (65). இவர்களுக்கு தர்மன் என்ற மகன் உள்ளார். கரிய கவுண்டருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 2 வருடமாக கரிய கவுண்டர், ராஜம்மாள் இருவரும் சிக்கரசம்பாளையம் பகுதியில் செல்வராஜ் என்பவரது தோட்டத்தில் குடியிருந்து விவசாய வேலை பார்த்து வந்தனர்.

    ஒரு வருடத்திற்கு முன்பு சொத்து தகராறில் அவரது மகன் தர்மன் தாய், தந்தையிடம் கோபித்து கொண்டு சென்று விட்டார். ஒரு வருடமாக பெற்றோரிடம் பேச்சுவார்த்தை இல்லை.

    இந்நிலையில் சம்பவத்தன்று வயதான காலத்தில் உடல்நிலை சரியில்லாமல் நாம் தனியாக வாழ்வதைவிட சாவதே மேல் என்று கரிய கவுண்டர், ராஜம்மாள் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் கணவன்-மனைவி இருவரும் தூங்க சென்று விட்டனர்.

    அதிகாலை 3 மணி அளவில் எழுந்த ராஜம்மாள் வீட்டில் இருந்த மண்எண்ணை கேனை எடுத்துக் கொண்டு வீட்டின் வெளியே உள்ள காலி இடத்திற்கு சென்று தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டார்.

    இதை தோட்டத்தில் வேலை செய்யும் பழனிச்சாமி என்பவர் பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார்.

    பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ராஜம்மாள் மீது எரிந்த தீயை அணைத்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே ராஜம்மாள் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×