search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்த்திகை தீப வழிபாடு"

    • 500 கிலோ நெய் கொப்பரையில் ஊற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகளை செய்து மகா கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
    • பின்னர் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே உள்ள பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவில் மலை மேல் அமைந்துள்ளது. இக்கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது. இதையொட்டி 500 கிலோ நெய் கொப்பரையில் ஊற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகளை செய்து மகா கார்த்திகை தீபம் அர்ச்சகர் கீர்த்தி வாசகன் ஏற்றி வைத்தார்.

    அதன் பின்னர் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து கைலாசநாதருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. டி.எஸ்.பி. கீதா தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். இதில் கோவில் செயல்அலுவலர் ஹரிஷ்குமார், அ.தி.மு.க. மாவட்ட பாசறை செயலாளர் நாராயணன், தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
    • இன்று பழனி முருகன் கோவிலில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா 20-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. 6-ம் நாளான நேற்று மாலை சாயரட்சை பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சண்முகா ர்ச்சனை, வள்ளி-தெய்வானை சின்னகு மாரருக்கு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் தங்க மயில் வாகனத்தில் சின்னகுமாரர் உலா வரும் நிகழ்ச்சி மற்றும் தங்கரத புறப்பாடு நடைபெற்றது.

    இன்று பழனி முருகன் கோவிலில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதியம் 2 மணிக்கு சண்முகார்ச்சனை அதனைத் தொடர்ந்து சாயரட்சை பூஜை மற்றும் சின்னகுமாரர் தங்க மயில் வாகனத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மலைக்கோவிலில் 4 திசைகளிலும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மலைக்கோவில் தீப ஸ்தம்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி மற்றும் சொக்கபனை கொளுத்துதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோவிலிலும் கார்த்திகை தீபம், சொக்கபனை கொளுத்தப்படுகிறது. கார்த்திகை தீபத்தையொட்டி இன்று தங்கரத புறப்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பழனி கோவிலில் குவிந்தனர். இதனால் அடிவாரம், கிரி வீதி, ரோப்கார், மின் இழுவை ரெயில் நிலையம், யானைப்பாைத, படிப்பாதை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மலைக்கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    கடந்த சில நாட்களாக சபரிமலை அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. எனவே அவர்கள் வசதிக்காக பழனி மலைக்கோவிலில் 2 தற்காலிக பஞ்சாமிர்த கடைகள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று வடக்கு கிரி வீதி, பாதவிநாயகர் கோவில் செல்போன் பாதுகாப்பு நிலயைம் அருகே கோவில் நிர்வாகம் சார்பில் விற்பனை மையத்தை இணை ஆணையர் மாரி முத்து தொடங்கி வைத்தார்.

    இதில் பஞ்சாமிர்தம் கோவில், முருகன் படங்கள், புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு கோவில்களிலும் கார்த்திகை தீபம் இன்று ஏற்றப்படுகிறது. தேனி மாவட்டம் தேவ தானப்பட்டி முருகமலை பரமசிவன் கோவிலில் மாலை 6 மணிக்கு 2500 அடி உயர முருகமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி கழுதை மற்றும் குதிரைகள் மூலம் பூஜை மற்றும் அன்னதான பொருட்கள் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    • மலைக்கோவிலில் 4 திசைகளிலும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மலைக்கோவில் தீப ஸ்தம்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி மற்றும் சொக்கபனை கொளுத்துதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பழனி கோவிலில் குவிந்தனர்.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா 20ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. 6-ம் நாளான நேற்று மாலை சாயரட்சை பூைஜ நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சண்முகா ர்ச்சனை, வள்ளி- தெய்வானை சின்னகு மாரருக்கு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் தங்க மயில் வாகனத்தில் சின்னகுமாரர் உலா வரும் நிகழ்ச்சி மற்றும் தங்கரத புறப்பாடு நடைபெற்றது.

    இன்று பழனி முருகன் கோவிலில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதியம் 2 மணிக்கு சண்முகார்ச்சனை அதனைத் தொடர்ந்து சாயரட்சை பூஜை மற்றும் சின்னகுமாரர் தங்க மயில் வாகனத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மலைக்கோவிலில் 4 திசைகளிலும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மலைக்கோவில் தீப ஸ்தம்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி மற்றும் சொக்கபனை கொளுத்துதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோவிலிலும் கார்த்திகை தீபம், சொக்கபனை கொளுத்தப்படுகிறது. கார்த்திகை தீபத்தையொட்டி இன்று தங்கரத புறப்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பழனி கோவிலில் குவிந்தனர். இதனால் அடிவாரம், கிரி வீதி, ரோப்கார், மின் இழுவை ரெயில் நிலையம், யானைப்பாைத, படிப்பாதை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மலைக்கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு கோவில்களிலும் கார்த்திகை தீபம் இன்று ஏற்றப்படுகிறது. தேனி மாவட்டம் தேவ தானப்பட்டி முருகமலை பரமசிவன் கோவிலில் மாலை 6 மணிக்கு 2500 அடி உயர முருகமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி கழுைத மற்றும் குதிரைகள் மூலம் பூஜை மற்றும் அன்னதான பொருட்கள் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    ஏராளமான பக்தர்கள் தங்கள் வீடுகளிலும் தீபம் ஏற்றி கார்த்திகை திருநாளில் வழிபாடு நடத்தினர்.

    ×