search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுன்சிலர்கள் போராட்டம்"

    • தலைமை கணக்கர் சம்பத் வரவு-செலவு குறித்த அறிக்கையை வாசித்தார்.
    • 4 ரோட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான சத்திரத்தை மீட்பது உள்ளிட்டவை தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.

    மாரண்டஅள்ளி:

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சியில் மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு செயல் அலுவலர் ஆயிஷா முன்னிலை வகித்தார். தலைமை கணக்கர் சம்பத் வரவு-செலவு குறித்த அறிக்கையை வாசித்தார்.

    அதனை தெடர்ந்து வடிகால் வசதி, தெருவிளக்கு, குடிநீர் பராமரிப்பு, விளையாட்டு மைதானம், ஆடு அடிக்கும் தொட்டி, சுற்று சுவர், நீரேற்றும் மின் மோட்டார், சமுதாய கூட கட்டிடம் பராமரிப்பு, 4 ரோட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான சத்திரத்தை மீட்பது உள்ளிட்டவை தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.

    இதில் அரசு சத்திரம் மீட்பு மற்றும் துரோயதனன் படுகள இடத்தில் சமுதாய கூடம் கட்டும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திகா பன்னீர் செல்வம் தலைமையில் சத்யா சிவகுமார், அபிராமி காந்தி, அனிதா ரமேஷ் ஆகியோர் கூட்டத்தை வெளிநடப்பு செய்து பேரூராட்சி அலுவலக வாயிலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆளுங்கட்சியை சேர்ந்த பேரூராட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட 5 பேர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தி.மு.க. - அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடைய கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • எதிர்கட்சி கவுன்சிலர்கள் மேயரின் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம் இன்று காலை 10.15 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கூட்டம் தொடங்க தாமதமானது.

    கூட்டத்துக்கு மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர்.

    கூட்டம் தொடங்க தாமதமானதால் அ.தி.மு.க.,பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க் கட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதற்கு பதிலடியாக தி.மு.க. உறுப்பினர்களும் எதிர்த்து கோஷமிட்டனர்.

    அப்போது தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் மணிப்பூர் சம்பந்தமான வீடியோவை மாமன்ற உறுப்பினர்கள் உள்ள வாட்ஸ்-அப் குழுவில் பதிவிட்டது ஏன்? என்று பெண்கவுன்சிலர் கேள்வி எழுப்பினார். இதனால் தி.மு.க. - அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடைய கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து எதிர்கட்சி கவுன்சிலர்கள் மேயரின் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர்.

    • ஒப்பந்தப்புள்ளி ஒத்தி வைக்கப்பட்டதைக் கண்டித்து நடந்தது
    • போலீசார் சமரசம் செய்ததால் போராட்டத்தை கைவிட்டனர்

    வந்தவாசி:

    வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற இருந்த ஒப்பந்தப்புள்ளி ஒத்தி வைக்கப்பட்டதைக் கண்டித்து ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அந்த அலுவலகத்தினுள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் ரூ.83.76 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி படிவங்கள் நேற்று மாலை வரை வழங்கப்படும் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் இன்று மாலை வரை பெற்றுக் கொள்ளப்படும் என்றும் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக இந்த ஒப்பந்தப்புள்ளி ஒத்தி வைக்கப்படுவதாக ஒன்றிய நிர்வாகம் அலுவலகத்தில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டியது.

    இதனால் ஆத்திரமடைந்த ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினுள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஆர்.விஜயன் தலைமையில் ஒன்றியக்குழு உறுப்பினர் சக்திவேல் மற்றும் 5 பெண் ஒன்றியக்குழு உறுப்பினர்களின் கணவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

    அதிகாரிகள் அைலகழிப்பு

    இந்த ஒப்பந்தப்புள்ளி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், இப்போது மீண்டும் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்தப்புள்ளி படிவங்களை வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழித்தனர். இப்போதோ மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கின்றனர். ஒப்பந்தப்புள்ளி தள்ளி வைக்கப்பட்டதற்கான உண்மையான காரணத்தையும் அவர்கள் தெரிவிக்க மறுக்கின்றனர். ஆளுங்கட்சியினரின் அழுத்தம் காரணமாகவே அதிகாரிகள் இதுபோன்று முறையற்று செயல்படுகின்றனர். எனவே ஒப்பந்தப்புள்ளி ஒத்தி வைக்கப்பட்டதைக் கண்டித்து நாங்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.

    தகவலறிந்து அங்கு சென்ற வந்தவாசி தெற்கு போலீசார் சமரசம் செய்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    ×