search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்காணிப்பு பணி"

    • கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வந்த நிலையில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகின்றது.
    • பாதுகாப்பாக வைத்துக்கொள்ள மீன்வளத்துறையினர் அறிவுறுத்தினர்.

    கடலூர்:

    வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்தது. இந்த புயலானது வருகிற 5-ந் தேதி முற்பகலில் நெல்லூர் - மசூலிப்ப ட்டினம் இடையே புயலாக கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வந்த நிலையில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகின்றது.இதன் காரணமாக மீனவ ர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து தொடர்ந்து புயல் கரையை கடக்கும் நிலையில் காற்றின் வேகம் அதிகரிக்கும் . கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கடலூர் தாழ ங்குடா, தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு உட்பட மாவட்டத்தின் கரையோரங்களில் உள்ள பல்வேறு மீனவ கிராமங்க ளில் கரையோரங்க ளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பைபர் படகுகள், வலைகள் கட்டு மரங்கள் உள்ளி ட்டவைகள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள மீன்வளத்துறையினர் அறிவுறுத்தினர். இதையடுத்துகடலூர் தாழங்குடா மீனவர் கிராமத்தில் படகுகளை டிராக்டர் மூலம் கட்டி மேடான பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக நிறுத்தினார்கள். மேலும் மீன்வளத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • வினாத்தாள் கட்டுக்காப்பு அலுவலகத்திலிருந்து 3 மையங்களுக்கு வினாத் தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
    • காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிகிறது.

    கள்ளக்குறிச்சி 

    கள்ளக்குறிச்சி மாவட்ட தில் பிளஸ்-2 மாண வர்களுக்கான துணைத் தேர்வு இன்று தொடங்கியது. இத்தேர்வுகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெறுகிறது. கள்ளக் குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வினாத்தாள் கட்டுக்காப்பு அலுவலகத்திலிருந்து 3 மையங்களுக்கும், திருக்கோ விலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து 2 மையங்களுக்கும், உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து 2 மையங்களுக்கும் வினாத் தாள்கள் அனுப்பி வைக்கப் பட்டன. இத்தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிகிறது.

    இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பயின்று ஒரு சில பாடப்பிரிவுகளில் தோல்வியடைந்த மாண வர்கள் தேர்வெழுது கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலர் தலைமையிலான அதிகாரி கள் தேர்வு மையங்களுக்கு நேரடியா சென்று கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்ட னர். தேர்வெழுதும் மாண வர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.

    • சர்வதேச எல்லையை தாண்டி பாகிஸ்தான் டிரோன் சந்தேகத்திற்கு இடமாக பறந்தது
    • கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினார்கள்.

    அமிர்தசரஸ்:

    இந்திய எல்லையில் அவ்வப்போது பாகிஸ்தான் டிரோன்கள் அத்துமீறி நுழைந்து வருகிறது. கடந்த வாரம் 3 கிலோ கஞ்சா கட்டப்பட்டிருந்த பாகிஸ்தான் டிரோன் பஞ்சாப் மாநிலத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு அமிர்தசரசில் உள்ள பைனி ராஜ்புட்னா என்ற கிராமத்தில் சர்வதேச எல்லையை தாண்டி பாகிஸ்தான் டிரோன் சந்தேகத்திற்கு இடமாக பறந்தது.

    இதை பார்த்த அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது,

    • குட்கா மற்றும் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்
    • போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் குட்கா மற்றும் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கடலூர் முதுநகர், புதுநகர், திருப்பாதிரிப்புலியூர், நெல்லிக்குப்பம், நெய்வேலி தெர்மல் ஆகிய பகுதிகளில் இருந்த கடைகளில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் கஞ்சா ஆகியவற்றை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நெல்லிக்குப்பம் சுகுமார், நெய்வேலி சாவித்திரி, முதுநகர் தினேஷ், சாலக்கரை மாரியப்பன், திருவந்திபுரம் சிவன்ராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

    • ஆய்வு கூட்டம் கமிஷனர் தலைமையில் நடப்பதும் வழக்கம்.
    • தலா ஒருவர் வீதம், 8 நிலையங்களுக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பூர் :

    குற்ற சம்பவம், அதன் பின்னணி, அவற்றின் மீதான போலீசார் நடவடிக்கை என்ன, அரசியல் மற்றும் பிற அமைப்பினரின் நடவடிக்கை, சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து நுண்ணறிவு பிரிவு (ஐ.எஸ்.,) போலீசார் கண்காணிப்பது வழக்கம். திருப்பூர் மாநகரில் பணியாற்றி வரும் ஐ.எஸ்., போலீசார், இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் மற்ற போலீசாரின் நடவடிக்கை, நிலைய எல்லைக்குள் நடக்கும் லாட்டரி, கஞ்சா, மதுவிற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள், சட்டம் - ஒழுங்கு நிலவரம் உள்ளிட்டவை கண்காணித்து முன்கூட்டியே ஐ.எஸ்., போலீஸ் உதவி கமிஷனரிடம் தெரிவித்து பின்னர் கமிஷனருக்கு தகவல் செல்வது வழக்கம்.

    இந்த பிரிவு முற்றிலும் கமிஷனரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மாதந்தோறும் இரண்டு, மூன்று முறை பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கமிஷனர் தலைமையில் நடப்பதும் வழக்கம்.இந்நிலையில் மாநகரில் உள்ள, 8 போலீஸ் நிலையங்களுக்கு தலா ஒரு ஐ.எஸ்., போலீசார் வீதம் பணியாற்றி வருகின்றனர்.

    இன்னும் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில், தகவல்களை சேகரிக்கும் விதமாக கூடுதல் ஐ.எஸ்., போலீசார் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். தலா ஒருவர் வீதம், 8 நிலையங்களுக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.போலீசார் கூறுகையில், ஒருவர் வழக்கு, ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்றவற்றையும், மற்றொருவர், போலீஸ் நிலைய நிலவரங்கள், போலீஸ் ரோந்து வாகனங்கள் உள்ளிட்டவற்றையும் கண்காணிக்கும் வகையில் பணி நியமிக்கப்பட்டுள்ளனர்என்றனர்.

    ×