search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்காணிப்பு கோபுரம்"

    • வேலூர் மார்க்கெட் பகுதியில் அமைகிறது
    • போலீசார் விழிப்புணர்வு

    வேலூர்:

    தீபாவளி பண்டிகை கொண்டாட பொருட்கள் வாங்க மக்கள் துணிக் கடைகள், நகைக்கடைகளுக்கு குழந்தை களுடன் படையெடுக்கத் தொடங்கியிரு க்கின்றனர். இதனால், வேலூார் லாங்கு பஜாரில் கூட்டம் அலைமோதுகிறது.

    வேலுார் மட்டுமின்றி சுற்றுப்பகுதிகளில் இருந்தும் வரும் மக்கள் கூட்டத்தால் வேலூர் பழைய, புது பஸ் நிலையம் பகுதிகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கூட்டம் அதிகரிப்பதால் பிக்பாக்கெட் திரு டர்கள், சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் மற்றும் கவனத்தை திசை திருப்பி பொருட் களை திருடிச் செல்லும் சமூக விரோதிகளின் நடமாட்டமும் தொடங்கியிருக் கிறது.

    இதைத்தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    அதேநேரத்தில் கூட்டத்தை பயன்ப டுத்தி விலைமதிப்பு மிக்க பொருட்களை திருட வாய்ப்புள்ளதால் மக்கள் ஜாக்கிர தையாக இருக்க வேண்டும், முன்பின் தெரியாதவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். திருடர்களை கண்காணிக்க வசதியாக லாங்கு பஜாரில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேல் இருந்து போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடு படுகின்றனர்.

    இப்போது ஒரு டவர் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இன்று அல்லது நாளை லாங்கு பஜாரின் பல இடங்களில் டவர் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று வேலூர் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு தெரிவித்தார்.

    • பொது மக்கள்பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
    • நகை, பணம் போன்ற பொருட்களை திருடுவது, பிக்பாக்கெட் அடிப்பதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர்.

    கடலூர்:

    நாடுமுழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின்போது வீட்டில் பலகாரங்கள் செய்து, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து கொண்டாடுவர். இதையடுத்து தற்போது பொது மக்கள்பண்டி கையை கொண்டாட தயாராகி வருகின்றனர். கடலூர் மற்றும் அதன்சுற்றியுள்ள பகுதி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் புத்தாடை வாங்குவதற்காக கடலூர் லாரன்ஸ் சாலை மற்றும் கடலூர்-சிதம்பரம் சாலையில் உள்ள துணி கடைகளுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

    தீபாவளி நெருங்கும் நாட்களில் கடலூர் நகர் வீதிகளில் பொதுமக்களின் கூட்டம் இந்த பகுதியில்அதிகரித்து காணப்படும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் பொதுமக்களிடமிருந்து நகை, பணம் போன்ற பொருட்களை திருடுவது, பிக்பாக்கெட் அடிப்பதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர். இதனை தடுக்கும் பொருட்டு கடலூர்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும்போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி, கடலூர் அண்ணா மேம்பாலம் சிக்னல் அருகிலும், கடலூர்-சிதம்பரம் சாலைமற்றும் கடலூர் பஸ் நிலையத்திலும் போலீசார் கண்காணிப்பு கோபுரம்அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.அவர்கள் அந்த கண்காணிப்பு கோபுரத்தில்இருந்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்து கொண்டே பாதுகாப்பு பணியில்ஈடுபட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் கூட்டத்தில் மர்ம நபர்கள் திருட்டுசெயல்களில் ஈடுபடுகின்றனரா? என்பதையும் தீவிரமாக கண்காணித்துவருகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

    • ராஜேந்திரன் கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி பணியில் ஈடுப்பட்டார்.
    • அவர் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து கீழே இறங்கும் போது தவறி விழுந்தார்.

    திருச்சி

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட து.களத்தூர் கிராமத்தில் வெளி மாநிலத்தை தலைமை இடமாகக் கொண்டு ஒரு தனியார் நிறுவனம் செயல் பட்டு வருகிறது.

    இதில் தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 காவலர்கள் உட்பட 14 பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு பணியில் இருந்த களத்தூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி காவல் பணி பார்த்துவிட்டு கீழே இறங்கும்போது, எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவின்றி கீழே கிடந்தார்.

    இதனை பார்த்த காவலர்கள் சிவகுமார், வேலுச்சாமி, பாலசுப்பிரமணி ஆகியோர் நிறுவன மேலாளர் ஹரிஹர சுப்பிரமணியன் உதவியுடன் சிகிச்சைக்காக ராஜேந்திரனை துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் உதவியுடன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராஜேந்திரனை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜேந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து மேலாளர் ஹரிஹர சுப்பிரமணியக் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த துறையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சுற்றுலாப் பயணிகளின் நகைகள் உள்பட விலை உயர்ந்தப் பொருள்கள் கார்களிலிருந்து திருடப்படுவது அடிக்கடி நடைபெறுகிறது
    • அமைக்கப்பட்ட கண்காணிப்புக் கேமராக்கள் முறையாக பராமரிக்கப்படாததால் அவை செயலிழந்து போயின.

    கன்னியாகுமரி :

    திற்பரப்பு அருவிக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் இதர மாநிலங்களிலிருந்தும் பொதுமக்கள் வருகை தருகின்றனர். இதில் குறிப்பாக சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இங்குவரும் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது.

    இந்நிலையில் இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருந்து வருகிறது. குறிப்பாக சுற்றுலாப் பயணிகளின் நகைகள் உள்பட விலை உயர்ந்தப் பொருள்கள் கார்களிலிருந்தும், இதர குளிக்கும் பகுதியிலிருந்தும் திருடப்படுவது அடிக்கடி நடைபெறுகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு அருவிப்பகுதிகளைக் கண்காணிக்கும் வகையில் இங்கு அமைக்கப்பட்ட கண்காணிப்புக் கேமராக்கள் முறையாக பராமரிக்கப்படாததால் அவை செயலிழந்து போயின.

    இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் தலைமையில் தக்கலை துணை சூப்பிரண்டு கணேசன் தலைமையில் போலீசார் நேற்று அருவிப் பகுதியில் ஆய்வு செய்தனர். இதையடுத்து பிரதான சாலையிலிருந்து அருவிக்கு செல்லும் நுழைவுப் பகுதி முதல் வாகனங்கள் நிறுத்தப்படும் கடைசி எல்லைப் பகுதி வரை கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்கவும், வாகனங்கள் நிறுத்தப்படும் இடத்தின் மத்தியில் கண்காணிப்புக் கோபுரம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பான அறிக்கைகளை மாவட்ட காவல் சூப்பிரண்டு அலுவலகத்தில் அடுத்து நடைபெறும் கூட்டத்தில் சமர்பிக்கவும், மாவட்ட சூப்பிரண்டு, தக்கலை துணை சூப்பிரண்டு கணேசனுக்கு உத்தரவிட்டார்.

    ×