search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Watchtower"

    • வேலூர் மார்க்கெட் பகுதியில் அமைகிறது
    • போலீசார் விழிப்புணர்வு

    வேலூர்:

    தீபாவளி பண்டிகை கொண்டாட பொருட்கள் வாங்க மக்கள் துணிக் கடைகள், நகைக்கடைகளுக்கு குழந்தை களுடன் படையெடுக்கத் தொடங்கியிரு க்கின்றனர். இதனால், வேலூார் லாங்கு பஜாரில் கூட்டம் அலைமோதுகிறது.

    வேலுார் மட்டுமின்றி சுற்றுப்பகுதிகளில் இருந்தும் வரும் மக்கள் கூட்டத்தால் வேலூர் பழைய, புது பஸ் நிலையம் பகுதிகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கூட்டம் அதிகரிப்பதால் பிக்பாக்கெட் திரு டர்கள், சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் மற்றும் கவனத்தை திசை திருப்பி பொருட் களை திருடிச் செல்லும் சமூக விரோதிகளின் நடமாட்டமும் தொடங்கியிருக் கிறது.

    இதைத்தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    அதேநேரத்தில் கூட்டத்தை பயன்ப டுத்தி விலைமதிப்பு மிக்க பொருட்களை திருட வாய்ப்புள்ளதால் மக்கள் ஜாக்கிர தையாக இருக்க வேண்டும், முன்பின் தெரியாதவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். திருடர்களை கண்காணிக்க வசதியாக லாங்கு பஜாரில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேல் இருந்து போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடு படுகின்றனர்.

    இப்போது ஒரு டவர் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இன்று அல்லது நாளை லாங்கு பஜாரின் பல இடங்களில் டவர் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று வேலூர் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு தெரிவித்தார்.

    • பொது மக்கள்பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
    • நகை, பணம் போன்ற பொருட்களை திருடுவது, பிக்பாக்கெட் அடிப்பதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர்.

    கடலூர்:

    நாடுமுழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின்போது வீட்டில் பலகாரங்கள் செய்து, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து கொண்டாடுவர். இதையடுத்து தற்போது பொது மக்கள்பண்டி கையை கொண்டாட தயாராகி வருகின்றனர். கடலூர் மற்றும் அதன்சுற்றியுள்ள பகுதி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் புத்தாடை வாங்குவதற்காக கடலூர் லாரன்ஸ் சாலை மற்றும் கடலூர்-சிதம்பரம் சாலையில் உள்ள துணி கடைகளுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

    தீபாவளி நெருங்கும் நாட்களில் கடலூர் நகர் வீதிகளில் பொதுமக்களின் கூட்டம் இந்த பகுதியில்அதிகரித்து காணப்படும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் பொதுமக்களிடமிருந்து நகை, பணம் போன்ற பொருட்களை திருடுவது, பிக்பாக்கெட் அடிப்பதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர். இதனை தடுக்கும் பொருட்டு கடலூர்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும்போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி, கடலூர் அண்ணா மேம்பாலம் சிக்னல் அருகிலும், கடலூர்-சிதம்பரம் சாலைமற்றும் கடலூர் பஸ் நிலையத்திலும் போலீசார் கண்காணிப்பு கோபுரம்அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.அவர்கள் அந்த கண்காணிப்பு கோபுரத்தில்இருந்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்து கொண்டே பாதுகாப்பு பணியில்ஈடுபட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் கூட்டத்தில் மர்ம நபர்கள் திருட்டுசெயல்களில் ஈடுபடுகின்றனரா? என்பதையும் தீவிரமாக கண்காணித்துவருகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

    ×