search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண் பரிசோதனை முகாம்"

    • கண் பரிசோதனை முகாமில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
    • முகாமில் கலந்து கொண்டவர்களில் தேவைபட்டோருக்கு மேல் சிகிச்சைக்கான ஏற்பாடு செய்யப்பட்டது.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன் மற்றும் தென்காசி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கத்தின் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் சுரண்டையில் நடைபெற்றது. நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் முரளி ராஜா, நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமை பழனிநாடார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு தேவைபட்டோருக்கு மேல் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    முகாமில் சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன், வியாபாரி சங்கத் தலைவர் காமராஜ், வத்தல் வியாபாரி சங்க பொறுப்பாளர் ரத்தினசாமி, காமராஜர் தினசரி மார்க்கெட் வியாபாரி சங்கத் தலைவர் சேர்மசெல்வன், நகர காங்கிரஸ் பிரதிநிதி சமுத்திரம், கவுன்சிலர்கள் அமுதா சந்திரன், ராஜ்குமார், வேல்முத்து, பூபதி செல்லத்துரை, ஜெயராணி வள்ளி முருகன், கல்பனா அன்னபிரகாசம், உஷா பிரபு, செல்வி, ரமேஷ், சாந்தி பட்டு முத்து, மாரியப்பன், காங்கிரஸ் நிர்வாகிகள் பால் என்ற சண்முகவேல், தெய்வேந்திரன், பிரபாகர், பிரபு, கந்தையா, மகேஷ், கஸ்பா செல்வம், அரசு ஒப்பந்தக்காரர் சண்முகராஜ், ஆட்டோ செல்வராஜ், அய்யப்பன், பாலகணேஷ்சங்கர், மகேந்திரன், மாரிச்செல்வம், பிரபாகரன், ராஜன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • டாக்டர் லயனல் ராஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.
    • விமான நிலைய இயக்குனர் சிவ பிரசாத் குத்துவிளக்கு ஏற்றி முகாமினை தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    தூத்துக்குடி விமான நிலையம் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் தூத்துக்குடி விமான நிலையத்தில் நடைபெற்றது. இதில் நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை தென்மண்டல மருத்துவ இயக்குனர், டாக்டர் லயனல் ராஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.

    முகாமினை விமான நிலைய இயக்குனர் சிவ பிரசாத் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். டாக்டர் அபிஷியா முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்தார். மேலாளர்கள் ராபின், பேச்சிமுத்து மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு முகாமினை நடத்தினர். இதில் விமான நிலைய ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    • சாத்தான்குளம் செயிண்ட் ஜான்ஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    • முகாமில் பொதுமக்களுக்கு மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை நடத்தினர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் செயிண்ட் ஜான்ஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் தி ஐ பவுன்டேஷன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தியது.

    பள்ளி முதல்வர் சார்லஸ் ஞானக்குமார் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். இதில் தி ஐ பவுன்டேஷன் மருத்துவ குழுவினர் பங்கேற்று பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோதனை நடத்தினர். இதில் 100-க்கு மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்னர். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது.
    • ஏராளமான டிரைவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

    அரவேனு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் சாலை பாதுகாப்பு வாரம் கடந்த 11-ந் தேதி முதல் 17 தேதி வரை அனுசரிக்கப்பட்டது. இதில் சாலை விதிகளை கடைபிடித்தல், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிதல், காரில் பயணம் செய்யும் போது சீட் பெல்ட் அணிதல், அதிவேகத்தில் வாகனங்களை இயக்கக்கூடாது என விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது.

    இதன் ஒரு பகுதியாக சாலை பாதுகாப்பு வாரத்தின் நிறைவு நாளான நேற்று கோத்தகிரி போக்குவரத்து காவல்துறை சார்பில், தனியார் மருத்துவமனையுடன் இணைந்து ஆட்டோ, டாக்சி மற்றும் சுற்றுலா வாகன டிரைவர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதற்கு இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். முகாமில் ஏராளமான டிரைவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். 

    ×