search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் இலவச கண் பரிசோதனை முகாம்
    X

    கோத்தகிரியில் இலவச கண் பரிசோதனை முகாம்

    • விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது.
    • ஏராளமான டிரைவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

    அரவேனு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் சாலை பாதுகாப்பு வாரம் கடந்த 11-ந் தேதி முதல் 17 தேதி வரை அனுசரிக்கப்பட்டது. இதில் சாலை விதிகளை கடைபிடித்தல், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிதல், காரில் பயணம் செய்யும் போது சீட் பெல்ட் அணிதல், அதிவேகத்தில் வாகனங்களை இயக்கக்கூடாது என விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது.

    இதன் ஒரு பகுதியாக சாலை பாதுகாப்பு வாரத்தின் நிறைவு நாளான நேற்று கோத்தகிரி போக்குவரத்து காவல்துறை சார்பில், தனியார் மருத்துவமனையுடன் இணைந்து ஆட்டோ, டாக்சி மற்றும் சுற்றுலா வாகன டிரைவர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதற்கு இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். முகாமில் ஏராளமான டிரைவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

    Next Story
    ×