search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்பி பாலசுப்ரமணியம்"

    பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வரும் ரஜினிக்கு பிரபல பாடகர் குரல் கொடுக்க இருக்கிறார்.
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தர்பார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முதன்முறையாக ரஜினிகாந்துடன் இணைந்துள்ளார்.

    மும்பையில் நடைபெற்று வந்த இதன் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவு அடைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. மேலும், படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. பிரதிக் பாபர், தலீப் தாஹில், ஜதின் சர்னா, யோகி பாபு, நிவேதா தாமஸ் என தர்பார் படத்தில் தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாமல் மற்ற திரையுலகில் இருந்தும் நடிகர், நடிகைகள் படக்குழுவில் இணைந்து வருகின்றனர்.



    இந்நிலையில் தர்பார் படத்தின் ரஜினி அறிமுக பாடலை அவரது ஆஸ்தான பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாட இருப்பதாக தகவல் வருகின்றன. பேட்ட படத்திலும் ரஜினி அறிமுக பாடலான மரண மாஸ் பாடலை அவர்தான் பாடினார்.
    அப்போ சூர்யாவிற்காக குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம், இப்போ கார்த்திக்காக தேவ் படத்தில் குரல் கொடுத்திருக்கிறார். #Dev #Karthi #Suriya
    கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தேவ்’. இதில் இவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஆக்சன் திரில்லர் அட்வெஞ்சர் படமாக உருவாகும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லட்சுமண் தயாரித்து வருகிறார்.

    இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஒரு பாடலை பாடி இருக்கிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இவர் இதற்கு முன் சூர்யாவிற்காக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான ‘7ம் அறிவு’ படத்தில் ‘யம்மா யம்மா...’ என்ற பாடலை பாடியிருந்தார்.



    இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் சூர்யா சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார். இது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று வைரலானது. #Dev
    ×