search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்பாப்பே"

    • பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர், பிரதரை சந்தித்தார்
    • பிரான்சில் வசிக்கும் இந்தியர்களை சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்

    பிரதமர் மோடி பிரான்ஸ் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று பிரான்ஸில் வசித்து வரும் இந்தியர்களை சந்தித்து அவர்களுடன் உரையாற்றினார். அப்போது, உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்ந்து வரும் பிரான்ஸ் நாட்டின் எம்பாப்பே குறித்து பேசினார்.

    எம்பாப்வே குறித்து பிரதமர் மோடி கூறுகையில் ''இந்திய இளைஞர்களிடையே எம்பாப்பே சூப்பர் ஹீரோவா திகழ்கிறார். எம்பாப்பே-ஐ அனேகமாக பிரான்சைவிட இந்திய மக்கள் அதிகமானோருக்கு தெரிந்திருக்கலாம்'' என்றார்.

    பிரெஞ்ச் லீக் மற்றும் சர்வதேச போட்டிகளில் எம்பாப்பே அபாரமாக விளையாடி வருகிறார். உலகக்கோப்பை கால்பந்தில் அர்ஜென்டினாவிற்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சமீபத்தில் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது அமெரிக்காவில் பேஸ்பால் போட்டிக்கிடையெ கிரிக்கெட்டும் வளர்ந்து வருகிறது என்றார்.

    • எம்பாப்பே 55-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார்
    • 69-வது நிமிடத்தில் கிரீஸ் வீரர் ரெட் கார்டு பெற்று வெளியேறினார்

    ஐரோப்பிய யூனியனில் உள்ள கால்பந்து நாடுகளுக்கு இடையில் தகுதிச்சுற்று நடைபெற்று யூரோ கோப்பைக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டும். 2023-24-ம் ஆண்டு யூரோ கோப்பைக்கான தகுதிக்சுற்று தற்போது நடைபெற்றது வருகிறது.

    இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ்- கிரீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    ஆட்டம் தொடங்கிய வினாடியில் இருந்து இரு அணி வீரர்களும் எதிரணி வீரர்களை கோல் அடிக்கவிடக் கூடாது என்ற நோக்கத்தில் விளையாட முதல் பாதி நேர ஆட்டத்தில் இரண்டு அணியும் கோல் அடிக்கவில்லை.

    2-வது பாதி நேர ஆட்டத்திலும் இரு அணி வீரர்கள் கோல் அடிக்க திணறினர். இறுதியில் 55-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி கிலியான் எம்பாப்வே கோல் அடித்தார். ஆகவே, பிரான்ஸ் 55-வது நிமிடம் முடிவில் 1-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.

    69-வது நிமிடத்தில் கிரீஸ் வீரர் மவ்ரோபனாஸ் ரெட் கார்டு பெற்று வெளியேறினார். இதனால் கிரீஸ் 10 வீரர்களுடன் விளையாடியது. என்றாலும் பிரான்ஸ் அணியை மேலும் கோல் அடிக்கவிடாமல் பார்த்துக்கொண்டது. கிரீஸ் அணியாலும் ஆட்டம் முடியும்வரை கோல் அடிக்க முடியவில்லை. இதனால் பிரான்ஸ் 1-0 என வெற்றி பெற்றது.

    'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள பிரான்ஸ் நான்கு போட்டிகளில் விளையாடி நான்கிலும் வெற்றி பெற்றுள்ளது. கிரீஸ் 3-ல் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    • ஆட்டம் தொடங்கிய 3 நிமிடத்தில் ஜிராடு கோல் அடித்தார்
    • பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி எம்பாப்பே கோலாக்கினார்

    ஐரோப்பா சாம்பியன்ஷிப் தகுதிச் சுற்றில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் முன்னணி அணியான பிரான்ஸ் ஜிப்ரால்டரை எதிர்கொண்டது. இதில் பிரான்ஸ் 3-0 என வெற்றி பெற்றது.

    ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் கிங்ஸ்லி வழங்கிய பந்தை சிறப்பான முறையில் கோலாக்கினார் ஜிராடு. பிரான்ஸ் அணிக்காக அவர் அடித்த 54-வது கோல் இதுவாகும்.

    அதன்பிறகு முதல் பாதிநேரம் ஆட்டம் முடியும் தருவாயில் இருக்கும்போது பெனால்டி வாய்ப்பு மூலம் எம்பாப்பே ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் பிரான்ஸ் அணிக்காக எம்பாப்வே அடித்த கோல்கள் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

    2-வது பாதி ஆட்டத்தில் பிரான்ஸ் மேலும் ஒரு கோல் அடிக்க 3-0 என வெற்றி பெற்றது.

    நேற்று நடைபெற்ற மற்ற ஆடடங்களில் பின்லாந்து, இங்கிலாந்து, துருக்கி, உக்ரைன், கிரீஸ், அர்மேனியா, டென்மார்க், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், கஜகஸ்தான் அணிகள் வெற்றி பெற்றன.

    'பி' பிரிவில இடம்பிடித்துள்ள பிரான்ஸ் 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றிபெற்று முதல் இடம் வகிக்கிறது.

    ×