search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எடப்பாடி அரசு"

    எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர் செல்வம் மற்றும் 11 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை தொடங்கியது. #SupremeCourt #OPanneerSelvam
    புதுடெல்லி:

    அ.தி.மு.க. பிளவுபட்ட போது முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டது.

    அப்போது சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர். என்றாலும் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார்.


    பின்னர் இரு அணிகளும் ஒன்றாக இணைந்தன. இந்த நிலையில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 11 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. கொறடா சக்கரபாணி, தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த மனுவை நீதிபதிகள் விசாரித்து தள்ளுபடி செய்தனர். இதைத் தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணையை தொடங்கியது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. #SupremeCourt #OPanneerSelvam
    தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் இன்று சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்க உள்ளதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #18MLAs #MadrasHighCourt
    சென்னை:

    அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 19 பேர், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்தனர். இத்துடன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கவர்னரிடம் கடந்த ஆண்டு மனு கொடுத்தனர்.

    இதைதொடர்ந்து 19 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சபாநாயகரிடம் புகார் கொடுத்தார்.

    அதன் அடிப்படையில் 19 எம்.எல்.ஏ.க்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இதைதொடர்ந்து ஜக்கையன் எம்.எல்.ஏ. மட்டும் சபாநாயகர் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். மற்றவர்கள் ஆஜராகவில்லை.



    இதனால் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான வெற்றிவேல் உள்பட 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் கடந்த 18.9.2017 அன்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஐகோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடக்கூடாது என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பும் நடத்தக்கூடாது என்றும் 20.9.2017 அன்று உத்தரவிட்டார்.

    பின்னர், அந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் தலைமையிலான டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை பல நாட்கள் நடந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர், கொறடா, டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆகியோருக்காக சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல்கள் பலர் இந்த வழக்கில் ஆஜராகி வாதாடினர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

    தமிழக அரசியலில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் இன்று (வியாழக்கிழமை) மதியம் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது. 18 எம்.எல்.ஏ.க்களும் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னதாக அவர்களை டிடிவி தினகரன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செல்லும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும். தகுதிநீக்கம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டால் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அரசு தனது பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

    தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகருடன் சேர்த்து தற்போது அ.தி.மு.க.வுக்கு 114 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் உள்ளனர். தி.மு.க.வுக்கு 98 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதுதவிர டி.டி.வி.தினகரன் சுயேட்சை எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு வேண்டும்.

    தகுதிநீக்கம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டால் அ.தி.மு.க. அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க தற்போதைய சூழ்நிலையில் 4 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

    இதுபோன்று ஒரு சூழ்நிலை வந்தால் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவு அளிப்போம் என்று அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் அறிவிக்கவில்லை. அவர்கள், அவ்வப்போது எதிர்மறையான நிலைப்பாட்டையே மேற்கொண்டுள்ளனர். எனவே, தகுதிநீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வந்தால் எடப்பாடி அரசு கவிழ்ந்து விடும் என்ற சூழ்நிலை தான் தற்போது இருந்து வருகிறது.

    அதே வேளையில் 2 நீதிபதிகள் தனித்தனி தீர்ப்பை அளித்தால் 3 நீதிபதிகளை கொண்ட அமர்வு இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும். 18 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் சபாநாயகர் தன்னிச்சையாக முடிவு எடுத்து இருக்கிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இருப்பதால் அவர்களது விளக்கத்தை கேட்டு உரிய உத்தரவு பிறப்பிக்க சபாநாயகருக்கு ஐகோர்ட்டு உத்தரவிடலாம் என்றும் கூறப்படுகிறது.

    எனவே, இந்த தீர்ப்பு தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. #18MLAs #MadrasHighCourt
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு திட்டமிட்ட செயல் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி அரசு மீது துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

    வேலூர், மே.26-

    தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகன் எம்.எல்.ஏ. காட்பாடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த அரசு காட்டுமிராண்டித்தனமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களில் வேலூர்:

    தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகன் எம்.எல்.ஏ. காட்பாடியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த அரசு காட்டுமிராண்டித்தனமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களில் 13 பேரை இதுவரை சுட்டுக்கொன்றுள்ளது. இதனை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சரியென கூறுகிறார். மக்கள் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டனர் என்றும் அதனால் துப்பாக்கிசூடு சம்பவம் நடந்ததாகவும் தெரிவிக்கிறார். இவ்வளவு பெரிய கலவரம் நடப்பதை ஏன் உளவுத்துறை முன்கூட்டியே அரசுக்கு தெரியப்படுத்தவில்லை.

    ஆனால் இப்போது இதெல்லாம் எதிர்க்கட்சிகளின் சதி என்று கூறுவது பொய்யான ஒன்றாகும். உடனடியாக முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும், இந்த அரசும் மக்களின் சாவிற்கு பொறுப்பேற்று பதவி விலகவேண்டும்.

    முதல்- அமைச்சரும், அமைச்சர்களும் ஏன் பாதிக்கப்பட்ட, கொல்லப்பட்ட மக்களின் உறவினர்களை சந்திக்கவில்லை. இவற்றிற்கெல்லாம் முதல்- அமைச்சர் தான் காரணம். இது திட்டமிட்ட செயல்.

    மக்களைபார்த்து முட்டியிலும், வானத்தை நோக்கியும் சுடாமல் வாகனத்தின்மீது ஏறி போலீசார் படுத்துக்கொண்டு சுட்டனர். இது தீவிரவாதிகளை சுடுவதற்காக பயிற்சி கொடுக்கப்பட்ட போலீஸ் பிரிவு. அதனை அனுமதிக்கவேண்டுமென்றால் உள்துறை செயலாளர் அனுமதிக்கவேண்டும். இல்லையென்றால் முதல்-அமைச்சர் இதற்கு அனுமதிக்கவேண்டும். அதன்படி இவற்றையெல்லாம் அனுமதித்தது தமிழக முதல்-அமைச்சர்தான்.

    தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து அரசு நியமித்துள்ள ஒருநபர் விசாரணை கமி‌ஷன் மூலம் நியாயம் கிடைக்காது. இது கண்துடைப்பு. தமிழக ஆளுனர் நடவடிக்கை எடுக்காமல் அறிக்கை மட்டும் வெளியிட்டுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thoothukudifiring13 பேரை இதுவரை சுட்டுக்கொன்றுள்ளது. இதனை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சரியென கூறுகிறார். மக்கள் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டனர் என்றும் அதனால் துப்பாக்கிசூடு சம்பவம் நடந்ததாகவும் தெரிவிக்கிறார். இவ்வளவு பெரிய கலவரம் நடப்பதை ஏன் உளவுத்துறை முன்கூட்டியே அரசுக்கு தெரியப்படுத்தவில்லை.

    ஆனால் இப்போது இதெல்லாம் எதிர்க்கட்சிகளின் சதி என்று கூறுவது பொய்யான ஒன்றாகும். உடனடியாக முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும், இந்த அரசும் மக்களின் சாவிற்கு பொறுப்பேற்று பதவி விலகவேண்டும்.

    முதல்- அமைச் சரும், அமைச்சர்களும் ஏன் பாதிக்கப்பட்ட, கொல்லப்பட்ட மக்களின் உறவினர்களை சந்திக்கவில்லை. இவற்றிற்கெல்லாம் முதல்- அமைச்சர் தான் காரணம். இது திட்டமிட்ட செயல்.

    மக்களைபார்த்து முட்டி யிலும், வானத்தை நோக்கியும் சுடாமல் வாகனத்தின்மீது ஏறி போலீசார் படுத்துக்கொண்டு சுட்டனர். இது தீவிரவாதிகளை சுடுவதற்காக பயிற்சி கொடுக்கப்பட்ட போலீஸ் பிரிவு. அதனை அனுமதிக்கவேண்டுமென்றால் உள்துறை செயலாளர் அனுமதிக்கவேண்டும். இல்லையென்றால் முதல்-அமைச்சர் இதற்கு அனுமதிக்கவேண்டும். அதன்படி இவற்றையெல்லாம் அனுமதித்தது தமிழக முதல்-அமைச்சர்தான்.

    தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து அரசு நியமித்துள்ள ஒருநபர் விசாரணைகமி‌ஷன் மூலம் நியாயம் கிடைக்காது. இது கண்துடைப்பு. தமிழக ஆளுனர் நடவடிக்கை எடுக்காமல் அறிக்கை மட்டும் வெளியிட்டுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×