search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உற்சவ திருவிழா"

    • அத்தி வரதர் எனப்படும் மரத்தால் செய்யப்பட்ட பெருமாள், திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கிறார்.
    • திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது.

    திருக்கச்சி அல்லது காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் என்பது பெருமாள் கோவில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம். இது சென்னைக்கு அடுத்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முப்பதோராவது திவ்ய தேசமாகும்.

    வரலாறும் சிற்பக்கலையும்

    இக்கோவில் எவரால் முதலில் நிறுவப்பட்டது என்பது தெரியவில்லை. எனினும் கி.பி. 1053 இல் சோழகளால் வேழமலையில் குகைவரைக் கோவில் கிழக்கு மேற்கே விரிவாக்கப்பெற்றது என்று கல்வெட்டுகளின் மூலம் அறியப்படுகிறது. முதலாம் குலோத்துங்க சோழனும், விக்கிரம சோழனும் கோவிலை விரிவுபடுத்தினர். பதினான்காம் நூற்றாண்டில் தாயார் சன்னதியும், அபிஷேக மண்டபமும் அமைக்கப்பெற்றன. சோழர்களின் வீழ்ச்சிக்குபின், விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் கல்யாண மண்டபங்களை நிறுவினர்.

    கல்யாண மண்டபம் எட்டு வரிசைகளில், வரிசைக்கு பன்னிரண்டு தூண்களாக 96 சிற்பகலை மிக்க ஒரே கல்லால் ஆன தூண்கள் நிறைந்த மண்டபம் ஆகும். தூண்களில் யாளி, போர்க்குதிரை, குதிரை மீது வீரர்கள் மற்றும் பல்வகை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதற்குள் உள்ள சிறிய நன்கு தூண் கொண்ட மண்டபத்தையும் சேர்த்து நூறு கால் மண்டபம் என அழைக்கபடுகிறது. இதன் நன்கு மூலைகளில் தொங்கும் கற்சங்கிலிகள் சிற்பக்கலையின் விந்தையாகும். கிழக்கு கோபுரம் ஒன்பது நிலைகளுடன் 180 அடி உயரமுடையது. தற்போது இக்கோபுரம் சிதிலமடைந்துள்ளது.

    மூலவராகிய தேவராஜப் பெருமாள், வேழமலை (அத்திகிரி) மீது நின்ற திருக்கோலத்தில் மேற்கே திருமுகமண்டலமுடன் நாற்கரத்துடன் அருள்பாலிக்கிறார். மூலவர் மலை மீது அமைந்துள்ளார் என்பதற்கு சான்றாக கர்பகிரகத்தின் நேர் கீழே குன்று குடைவரை கோவிலில் யோக நரசிங்க பெருமாள் வீற்றுக்கிறார். பெருமாளை காண்பதற்கு இருப்பதிநான்கு படிகளை ஏறிச்செல்லும்போது காணப்படும் தங்க பல்லி மற்றும் வெள்ளி பல்லி, இக்கோவிலில் பிரசிதம். மூலவரை நோக்கியபடி தென்மேற்கே பெருந்தேவி தாயாருக்கு தனி சன்னதியும், திருக்குளத்தின் எதிரே சக்கரதாழ்வர் சன்னிதி உள்ளது. கோவில் வெளி பிரகாரத்தில் கண்ணன், ராமர், வராஹா பெருமாள் சன்னதிகளும், ஆண்டாள், ஆழ்வார்கள், களியமானிக்க பெருமாள், ஆச்சார்யர்கள் சன்னதிகளும் மற்றும் நம்மாழ்வார் சன்னதியும் உள்ளன. இராஜகோபுரம் 96 அடி உயரமுள்ளது.

    அத்தி வரதர் எனப்படும் மரத்தால் செய்யப்பட்ட பெருமாள், திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கிறார். முழுவதும் அத்திமரத்தால் ஆன பள்ளிகொண்ட பெருமாள் நீண்ட நெடிய உருவம். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, குளத்து நீரை முழுவதும் வெளியேற்றி ஸ்ரீ அத்திவரதரின் திருவுருவச் சிலையை வெளியெடுத்து, கோவிலில் பள்ளிகொள்ள வைத்து ஒருமாத காலத்திற்கு உற்சவங்கள் பிரமாதமாக நடக்கும். அத்திவரதரை தம் வாழ்நாளில் தரிசிப்பது மிகப் பெரும் பேறு ஆகையால், எங்கிருந்தெல்லாமோ வந்து மக்கள் பெருமாளைத் தரிசிப்பர்.

    திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது. தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது. இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார்.

    பாடல்கள்

    மங்களாசாசனம், திருமங்கையாழ்வார்

    என்னெஞ்சம் மேயான் என் சென்னியான், தானவனை-

    வன்னெஞ்சம் கீண்ட மணிவண்ணன், முன்னம்சேய்-

    ஊழியான் ஊழி பெயர்த்தான், உலகேத்தும்-

    ஆழியான் அத்தியூரான்.

    அத்தியூரான் புள்ளை ஊர்வான், அணிமணியின்-

    துத்திசேர் நாகத்தின் மேல்துயில்வான், - மூத்தீ-

    மறையாவான் மாகடல் நஞ்சுண்டான் தனக்கும்

    இறையாவான் எங்கள் பிரான்.

    திருவிழாக்கள்

    வைகாசி மாதத்தில் உற்சவத் திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெறும். இவ் உற்சவத் திருவிழாவில் கருடசேவையும், தேரும் மிகப்பிரபலம்.

    போக்குவரத்து

    காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் - செங்கற்பட்டு சாலையில் அமைந்துள்ள இத்திருத்தலத்திற்கு நகர பேருந்துகளும் ஆட்டோக்களும் இயக்கப்படுகின்றன. காஞ்சிபுரத்திற்கு சென்னையிலிருந்து எண்ணற்ற பேருந்துகளும் ரெயில்களும் உள்ளன.

    • திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    • அய்யப்பசாமிக்கு களபா பிஷேகம், சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

    கோவை,

    கோவை சித்தாபுதூரில் அய்யப்பசாமி பொற்கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் அய்யப்ப சாமி ஸ்ரீ சக்ரத்தில் வீற்றிருக்கிறார். சபரி மலையில் கடைப்பிடிக்கின்ற ஆச்சார அனுஷ்டானங்கள் இந்த கோவிலில் பின்பற்றப்படுகிறது.

    இந்த கோவிலின் 54-வது உற்சவ திருவிழா மற்றும் அய்யப்ப சேவா சங்கத்தின் 68-வது ஆண்டு விழா நாளை 20-ந் தேதி இரவு 7 மணிக்கு கோவிலின் தந்திரி பிரம்மஸ்ரீ பாலக்காட்டிலத்து சிவபிர சாத் நம்பூதிரி தலைமையில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை இணை ஆணையர் பரஞ் சோதி முன்னிலையில் கொடி யேற்றத்துடன் விழா தொடங்குகிறது.

    தொடர்ந்து முத்தா யம்பிகை செண்டை மேளம் நடைபெறும். 21-ந் தேதி 2-ம் திருவிழாவில் விநாய கருக்கு சிறப்பு பூஜையும், தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் நிறைபிறை சமர்ப்பித்தல் நடைபெறும்.

    இரவு 7.30 மணிக்கு நாட்டிய நாடகம் நடைபெறும். 22-ந் தேதி 3-ம் திருவிழாவன்று, அய்யப்பசாமிக்கு களபா பிஷேகம், சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை, இரவு 7.30 மணிக்கு ஸ்ரீ கிருஷ்ண குசேலா என்ற தலைப்பில் நாட்டிய நாடகம் நடைபெறுகிறது.

    23-ம் தேதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், இரவு 7.30 மணிக்கு பத்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் கலந்து கொள்கிறார். 24-ந் தேதி நவக்கிரகங்களுக்கு சிறப்பு பூஜை, இரவு 7.30 மணிக்கு நாட்டிய மாலை நிகழ்ச்சி நடைபெறும்.

    நிகழ்ச்சியில் போலீஸ் துணை கமிஷனர் சுகாசினி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். 25 -ம் தேதி 6-ம் திருவிழா அன்று காலை பிரம்ம ரக்ஷஸிற்கு சிறப்பு பூஜை, இரவு 7 மணிக்கு ஐயப்ப சேவா சங்கத்தின் 68- வது ஆண்டு விழா நடக்கிறது.

    இரவு 7.30 மணிக்கு இசைத்தென்றல் கலை மாமணி வீரமணி ராஜூ குழுவினர் வழங்கும் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்ச்சி யில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

    26-ம் தேதி 7-ம் திருவிழாவன்று காலை கோவிலில் முருகனுக்கு சிறப்பு பூஜைகள், மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, அதன்பின் அய்யப்பசாமி அலங்கரிக்கப்பட்ட 3 யானைகளில் பள்ளி வேட்டை நிகழ்ச்சிக்கு எழுந்தருள்வார்.

    செண்டை மேளம், பஞ்சவாத்தியத்துடன் ஆவாரம்பா–ளையம் விநா யகர் கோவிலில் புறப்பட்டு பாரதியார் ரோடு, வி.கே.கே. மேனன் ரோடு சந்திப்பு வழியாக கோவிலை அய்யப்பசாமி வந்தடைவார்.

    27-ந் தேதி 8-ம் திருவிழா வன்று காலை திருப்பள்ளி எழுச்சி, திருக்கணிதரிசனம், விஷ்ணுவிற்கு சிறப்பு பூஜைகள் மாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட 3 யானைகளில் அய்யப்ப சாமி திருவீதி உலா வருவார்.

    திருவிதி உலா நிகழ்ச்சியில் காவடி, சிங்காரி மேளம், செண்டை மேளம், பஞ்ச வாத்தியம் ஆகியவற்றுடன் பக்தர்கள் புடை சூழ சின்னசாமி ரோடு, சத்தி ரோடு, கிராஸ்கட் ரோடு, 11- ம் நம்பர் ரோடு, 100 அடி ரோடு வழியாக ஆறாட்டு குள த்திற்கு அய்யப்ப சாமி வந்தடைவார். இத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    திருவிழா நாட்களில் தினசரி காலை யானை மற்றும் மேள வாத்தியத்துடன் சீவேலியும், மாலை 5 மணிக்கு காட்சி சீவேலியும் நடைபெறும்.

    இந்த தகவலை கோவில் அறங்காவலர் குழு தலைவர் கே.கே.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • புதன்கிழமை, சத்யசாய் சேவா சமிதி பஜனை, வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது.
    • தினமும் நிகழ்ச்சிக்கு பின்னர் அன்னதானம் வழங்கபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் சத்யசாய் சேவா சமிதி, பல்லடம் தமிழ்சங்கம் ஆகியவை சார்பில் மார்கழி உற்சவ பெருவிழா நேற்று 4ந்தேதி தொடங்கியது. வரும் 13 ந்தேதி வரை பல்லடம் பொன்காளியம்மன் கோயில் வளாகத்தில் விழா நடைபெறும். தினந்தோறும் மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறவுள்ளது.

    நேற்று புதன்கிழமை, சத்யசாய் சேவா சமிதி பஜனை, வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது. இன்று 5ந்தேதி சாய் அற்புதம் திருப்பூர் ஆடிட்டர் நடராஜ் ஆன்மீக சொற்பொழிவு, 6 ந்தேதி கோவை ஸ்ரீ சாரதா நாராயணன் குழுவினரின் பஜனை கச்சேரி, ஆன்மீக பாட்டு கச்சேரி, 7 ந்தேதி அன்னூர் அச்சம்பாளையம் சண்முகம் குழுவினரின் ஆன்மீக பாட்டு கச்சேரி, 8 ந்தேதி பல்லடம் ஸ்ரீசாய் நாட்டியாலயாவின் பரத நாட்டியம், 9 ந்தேதி திங்கள்கிழமை கவிஞர் சுந்தரபாண்டியனி்ன் திருநாவுக்கரசுத்திருமகனார் ஆன்மீக சொற்பொழிவு, 10 ந்தேதி பக்தியிலும் பண்பாட்டிலும் பெரிதும் விஞ்சி நிற்பவர்கள் ஆண்களா, பெண்களா என்ற தலைப்பில் நடுவர் புலவர் சிவக்குமார் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம், 11 ந்தேதி மார்கழியின் மகிமை என்ற தலைப்பில் ஞானபாரதி ஆனந்தகிருஷ்ணனின் ஆன்மீக சொற்பொழிவு, 12 ந்தேதி மாணிக்கவாசகப்பெருமானார் என்ற தலைப்பில் கவிஞர் சுந்தரபாண்டியனின் ஆன்மீக சொற்பொழிவு, 13 ந்தேதி வரம் தரும் வராகி என்ற தலைப்பில் ஈரோடு கவிஞர் பத்மநாபன் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.தினமும் நிகழ்ச்சிக்கு பின்னர் அன்னதானம் வழங்கபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மொட்டையரசு திருவிழாவில் தங்க குதிரை வாகனத்தில் தெய்வானையுடன், முருகப்பெருமான் எழுந்தருளினார்.
    • காலையில் உற்சவர் சன்னதியில் முருகப்பெருமான் தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 3-ந் தேதி வசந்த உற்சவ திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவையொட்டி தினமும் இரவு முருகப்பெருமான் தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி, அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று மீண்டும் உற்சவர் சன்னதிக்கு வந்தடைவார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வைகாசி விசாக திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் குடம், காவடி, பறவைக்காவடி, பன்னீர் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்து வந்து திருப்பரங்குன்றம் சண்முகர், வள்ளி, தெய்வா னைக்கு பாலா பிஷேகம் நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக மொட்டை யரசு திருவிழா இன்று நடந்தது. காலையில் உற்சவர் சன்னதியில் முருகப்பெருமான் தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    சிறப்பு அலங்காரத்தில் முருகன்,தெய்வானையுடன் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். கோவிலில் இருந்து புறப்பட்டு முருகப்பெருமான் பல்வேறு மண்டபங்களில் திருக்கண் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து மொட்டையரசு திடலில் எழுந்தருளிய முருகப்பெருமான் அங்கு ஒவ்வொரு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    மாலை வரை மொட்டை அரசு திடலில் இருக்கும் முருகப்பெருமான் இரவு பூப்பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வந்தடைவார். வழியெங்கும் நூற்றுக்கணக்கான மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணை யர் சுரேஷ் மற்றும் பணி யாளர்கள் செய்திருந்தனர்.

    ×