search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உம்மன் சாண்டி"

    • காங்கிரஸ் கட்சி சார்பில் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
    • செப்டம்பர் 1-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை திருவிழா நடைபெறுவதால் 5-ந்தேதி தேர்தல் பணி பாதிக்கப்படலாம்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி உடல்நலம் பாதித்து கடந்த ஜூலை மாதம் 18-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கு செப்டம்பர் 5-ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து காங்கிரஸ் கட்சி புதுப்பள்ளி வேட்பாளரை அறிவித்தது. அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் உடனடியாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். மற்ற கட்சியினர் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் இடைத் தேர்தல் தேதியை மாற்றி அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. கோட்டயம், மணற்காடு தேவாலயங்களில் செப்டம்பர் 1-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை திருவிழா நடைபெறுவதால் 5-ந்தேதி தேர்தல் பணி பாதிக்கப்படலாம் என்பதால் இடைத்தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி இருக்கிறது.

    புதுப்பள்ளிக்கு விரைவாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு இடதுசாரி ஜனநாயக முன்னனி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஓணம் பண்டிகை, அய்யன்காளி-ஸ்ரீநாாயணகுரு ஜெயந்தி, மணற்காடு பெருநாள் போன்ற கொண்டாட்டங்களை கருத்தில் கொள்ளாமல் தேர்தல் ஆணையம் இடைத் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக இடதுசாரி ஜனநாயக முன்னனியின் தொகுதி பொறுப்பாளரும், கேரள மந்திரியுமான வி.என். வாசவன் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதனால் புதுப்பள்ளி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற தேர்தல் ஆணைத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். கேரள மாநிலத்தின் இரு பிரதான கட்சிகளும் புதுப்பள்ளி இடைத்தேர்தல் தேதியை மாற்றவேண்டும் என்று வலுயுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • செப்டம்பர் 5-ந்தேதி வாக்குப்பதிவு, 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை
    • தொகுதி மக்கள் நினைவில் அப்பா இருந்தாலும், அரசியல் ரீதியான போட்டி

    கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள சட்டமன்ற தொகுதி புதுப்பள்ளி. இந்த தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வான முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான உம்மன் சாண்டி கடந்த ஜூலை மாதம் காலமானார்.

    இதனால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்திய தேர்தல் ஆணையம் செப்டம்பர் 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும், 8-ந்தேதி வாக்குகள் எண்ணப்படும் எனவும் அறிவித்தது.

    இந்த நிலையில், அவரது மகன் சாண்டி உம்மன் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

    வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்து சாண்டி உம்மன் கூறுகையில் ''இந்த பொறுப்புக்கு என்னை தேர்வு  செய்ததற்கு, கட்சிக்கு நன்றியுள்ளவராக இருப்பேன். இது எனக்கு மிகப்பெரிய சவால்.

    எனது தந்தையை புதுப்பள்ளி மக்கள் இன்னும் நினைவில் வைத்திருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், ஒவ்வொரு துறையிலும் தோல்வியடைந்த ஆளும் கட்சி கூட்டணிக்கு எதிராக இது அரசியல் போட்டியாக இருக்கும்'' என்றார்.

    • 2017 பேட்ச் மருத்துவ மாணவர்கள் பிரிவுபசார விழாவை முன்னிட்டு கல்லூரி நிர்வாகம் சார்பில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
    • அரசின் அறிவிப்பை மருத்துவக் கல்லூரி போன்ற அரசு நிறுவனமே மீறி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி புற்றுநோய் பாதிப்புக்கு பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 18-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் பெங்களூருவில் இருந்து ஏர் ஆம்புலன்சு விமானம் மூம் திருவனந்தபுரத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு இடங்களில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. பின்பு இறுதிச்சடங்குக்காக திருவனந்தபுரத்தில் இருந்து அவரது செந்த ஊரான கோட்டயம் புதுப்பள்ளிக்கு அரசு போக்குவரத்து கழக பேரூந்தில் எடுத்துச் செல்லப்பட்டது.

    திருவனந்தபுரத்தில் இருந்து கோட்டயம் வரை நடந்த அவரது இறுதி ஊர்வலத்தில் சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டுநின்று உம்மன் சாண்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

    உம்மன்சர்ண்டியின் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் கடந்த 18 மற்றும் 19-ந்தேதி ஆகிய 2 நாட்கள் துக்க நாளாக கேரள அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து அந்த இருநாட்களிலும் நடக்க இருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

    இந்நிலையில் உம்மன்சாண்டி மறைந்த 18-ந்தேதியன்று திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் கலைநிகழச்சி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2017 பேட்ச் மருத்துவ மாணவர்கள் பிரிவுபசார விழாவை முன்னிட்டு கல்லூரி நிர்வாகம் சார்பில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனிடம், முன்னாள் கவுன்சிலர் ஸ்ரீகுமார் என்பவர் புகார் மனு அளித்துள்ளார். அவர் தனது புகார் மனுவில், உம்மன் சாண்டி மறைவையடுத்து அரசு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்த துக்க நாளில் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்டு கலை நிகழ்ச்சி நடத்தி உள்ளனர்.

    மது விருந்தும் நடந்துள்ளது. இது குறித்து காவல் மற்றும் கலால் துறைக்கு தகவல் தெரிவித்தேன். அரசின் அறிவிப்பை மருத்து வக்கல்லூரி போன்ற அரசு நிறுவனமே மீறி உள்ளது. இதனால் அதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    • கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி கடந்த 18-ந்தேதி பெங்களூருவில் மரணம் அடைந்தார்.
    • அவரது இறுதிச்சடங்கு சொந்த ஊரான கோட்டயம் புதுப்பள்ளியில் நேற்று நடந்தது.

    கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி கடந்த 18-ந்தேதி பெங்களூருவில் மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கு சொந்த ஊரான கோட்டயம் புதுப்பள்ளியில் நேற்று நடந்தது.

    இந்நிலையில் நடிகர் விநாயகன் தனது முகநூல் பக்கத்தில் நேரலையில் தோன்றி உம்மன் சாண்டி குறித்து அவதூறு கருத்துக்களை பேசினார். அந்த வீடியோவில், "யார் இந்த உம்மன் சாண்டி. அவர் இறந்தால் அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும். உங்களுடைய அப்பாவும் இறந்து விட்டார். உம்மன் சாண்டி இறந்ததற்கு எதற்கு 3 நாள் விடு முறை. அவர் நல்லவர் என்று நீங்கள் வேண்டும னால் சொல்லலாம். ஆனால் நான் சொல்ல மாட்டேன்" என்று கூறியிருந்தார். நடிகர் விநாயகனின் இந்த வீடியோ பதிவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.


    விநாயகன் வீடு

    இதையடுத்து அவர், அந்த வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார். இருந்த போதிலும் உம்மன் சாண்டி குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட நடிகர் விநாயகன் மீது காங்கிரஸ் கட்சி சார்பில் கொச்சி உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நடிகர் விநாயகன் மீது எர்ணாகுளம் வடக்கு போலீசார் வழக்குபதிந்துள்ளனர். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் எர்ணாகுளம், கழுவூரில் உள்ள விநாயகனின் வீட்டின் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கி உள்ளனர். இதில், அவரது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. விநாயகனின் வீட்டில் தாக்குதலில் ஈடுபட்டது காங்கிரஸ் தொண்டர்கள் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நடிகர் விநாயகன் மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
    • இவர் மறைந்த கேரள முன்னாள் மந்திரி உம்மன் சாண்டி குறித்து சர்ச்சையாக பதிவிட்டுள்ளார்.

    மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் விநாயகன் தமிழில் விஷாலின் 'திமிரு' படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர். தொடர்ந்து சிம்புவின் சிலம்பாட்டம், தனுசின் மரியான் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். பின்னர் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த இவர் சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.


    விநாயகன்

    இந்நிலையில், நடிகர் விநாயகன், மறைந்த கேரள முன்னாள் மந்திரி உம்மன் சாண்டி குறித்து சர்ச்சையான வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "யார் இந்த உம்மன் சாண்டி. எதற்காக அரசு மூன்று நாட்கள் துக்கம் விசாரிக்க வேண்டும். ஊடகங்கள் ஏன் அவரது இறுதி ஊர்வலத்திற்கு முக்கியத்து கொடுத்தது. உம்மன் சாண்டி நல்லவர் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் என்ன பண்ண முடியும்?" என்று பதிவிட்டுள்ளார்.


    உம்மன் சாண்டி

    இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து கேரள முன்னாள் மந்திரி உம்மன் சாண்டியை அவமதித்ததற்காக நடிகர் விநாயகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இந்த புகாரை பெற்றுக் கொண்ட போலீஸ் அதிகாரி இதுகுறித்து விசாரித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

    நடிகர் விநாயகன் பதிவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்ததால் அவர் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் இருந்து நீக்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சாலையின் இருபுறத்திலும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு நின்று உம்மன்சாண்டி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
    • உம்மன் சாண்டியின் இறுதிச்சடங்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலந்துக் கொண்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை மரணம் அடைந்தார்.

    அவரது உடல் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு கொண்டுவரப்பட்டது. முதலில் அவரது உடல் பூஜப்புரை புதுப்பள்ளி இல்லத்தில் வைக்கப்பட்டது. பின்பு திருவனந்தபுரம் தலைமை செயலக தர்பார் அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    அதன்பிறகு இரவில் புனித ஜார்ஜ் ஆர்த்தோடக்ஸ் ஆலயத்துக்கு கொண்டு செல்லப்பட்ட உம்மன் சாண்டியின் உடல், பின்னர் அங்கிருந்து கேரள மாநில காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனில் பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டது.

    உம்மன்சாண்டியின் உடல் வைக்கப்பட்டிருந்த இடங்களில் ஆயிரக்கணக்கானோர் வந்து, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அதனைத்தொடர்ந்து இரவில் உம்மன்சாண்டியின் உடல் மீண்டும் திருவனந்தபுரத்தில் உள்ள புதுப்பள்ளி இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    அங்கிருந்து அவரது உடல் சொந்த ஊரான கோட்டயம் புதுப்பள்ளிக்கு கொண்டு செல்ல, அவரது இறுதி ஊர்வலம் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. உம்மன் சாண்டியின் உடல், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கேரள அரசு போக்குவரத்து கழக பஸ்சில் எடுத்துச் செல்லப்பட்டது.

    சாலையின் இருபுறத்திலும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு நின்று உம்மன்சாண்டி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு நின்றதால் உம்மன்சாண்டியின் உடல் வைக்கப்பட்டிருந்த வாகனம் ஊர்ந்தபடியே சென்றது.

    அவர் வாகனம் வந்த இடங்களில் எல்லாம், இரவையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் திரண்டு நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள. இதனால் திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு புறப்பட்ட உம்மன்சாண்டி இறுதி ஊர்வலம், சங்கனாச்சேரிக்கு நேற்று காலை 6 மணிக்கே வந்தடைந்தது.

    மற்ற இடங்களைப் போன்று அங்கும் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது. இதனால் உம்மன்சாண்டி இறுதி ஊர்வல வாகனம் சங்கனாச்சேரியை கடந்து செல்லவும் வெகுநேரம் ஆனது. பின்பு உம்மன் சாண்டியின் இறுதி ஊர்வலம் கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளியை நோக்கி சென்றது. புதுப்பள்ளியை ஊர்வலம் அடைந்ததும், உம்மன்சாண்டியின் மூதாதையரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    பின்னர் மாலையில் புனித ஜார்ஜ் ஆர்த்தோடக்ஸ் தேவாலயத்திற்கு உம்மன்சாண்டியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு சிறப்பு பிரார்த்தனை மற்றும் இறுதிச்சடங்கு நடைபெற்றது. அதன்பின்னர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    அவரது கடைசி விருப்பத்தின்படி, எந்தவித அரசு மரியாதையும் இன்றி அவரது உடலை அடக்கம் செய்ய விரும்புவதாக அவரது குடும்பத்தினர் கேரள மாநில தலைமை செயலருக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதற்கு முதலில் சம்மதம் தெரிவிக்காக கேரள அரசு, பின்னர் உம்மன்சாண்டியின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. இதனால் உம்மன்சாண்டியின் உடல் அரசு மரியாதையின்றி அடக்கம் செய்யப்பட்டது.

    உம்மன் சாண்டியின் இறுதிச்சடங்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமதுகான், முதல்-மந்திரி பினராய் விஜயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    உம்மன்சாண்டியின் இறுதிச்சடங்கை முன்னிட்டு கோட்டயம் மாவட்டத்தில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டிருந்தது.

    • திருவனந்தபுரத்தில் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன், மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினார்கள்.
    • இறுதி ஊர்வலத்தை முன்னிட்டு கோட்டயத்தில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி(வயது79) புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தார். பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று அதிகாலை காலமானார்.

    அப்போது அவரது மனைவி மரியம்மா உம்மன், மகன் சாண்டி உம்மன், மகள்கள் அச்சு உம்மன், மரியா உம்மன் ஆகியோர் உடனிருந்தனர். உம்மன்சாண்டியின் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து பெங்களூரு இந்திராநகரில் உள்ள அவரது நண்பரும், முன்னாள் மந்திரியுமான டி.ஜான் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று உம்மன்சாண்டிக்கு அஞ்சலி செலுத்தினர். பின்பு உம்மன்சாண்டியின் உடல் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு கொண்டுவரப்பட்டது.

    பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக திருவனந்தபுரத்தில் தலைமை செயலக தர்பார் அரங்கில் உம்மன்சாண்டியின் உடல் வைக்கப்பட்டது. அங்கு கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன், மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினார்கள்.அதனைத்தொடர்ந்து உம்மன்சாண்டியின் உடல் புனித ஜார்ஜ் ஆர்த்தோடக்ஸ் ஆலயத்தில் வைக்கப்பட்டது.

    பின்பு கேரள மாநில காங்கிரஸ் மாநில தலைமையகமான இந்திரா பவனுக்கு உம்மன்சாண்டியின் உடல் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

    அதன்பிறகு உம்மன்சாண்டியின் உடல் திருவனந்தபுரத்தில் இருந்து கோட்டம் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான புதுப்பள்ளியில் உள்ள இல்லத்திற்கு ஊர்வலமாக செல்லப்படுகிறது. ஊர்வலம் திருவனந்தபுரத்தில் இருந்து இன்று காலை 7 மணியளவில் தொடங்கியது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பேருந்தில் அவரது உடல் சாலை மார்க்கமாக எடுத்துச் செல்லப்படுகிறது.

    கட்சியினர் பேருந்தின் முன்னும் பின்னும் கண்ணீர்மல்க நடந்து சென்றனர். நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உம்மன்சாண்டியின் இறுதி ஊர்வல வாகனம் ஊர்ந்து சென்றது. வழிநெடுக பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.

    உம்மன்சாண்டியின் உடல் கோட்டயம் திருநக்கரை மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பொதுமக்கள் அஞ்சலிக்கு நாளை பிற்பகல் 2 மணியளவில் உம்மன்சாண்டியின் உடல் புதுப்பள்ளியில் உள்ள தேவாலயத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு சிறப்பு பிரார்த்தனைக்கு பின் உம்மன் சாண்டியின் உடல் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது.

    நாளை நடைபெற உள்ள இறுதிச்சடங்கின்போது உம்மன்சாண்டிக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அரசு மரியாதையை அவரது குடும்பத்தினர் ஏற்க மறுத்துள்ளனர். தான் இறந்த பின் இறுதிச்சடங்கை எளிய முறையில் நடத்தவிரும்புவதாக உம்மன் சாண்டி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தாகவும், அவரது விருப்பப்பட எளிய முறையில் இறுதிச்சடங்கை நடத்தி அடக்கம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    உம்மன் சாண்டியின் இறுதி ஊர்வலத்தை முன்னிட்டு கோட்டயத்தில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று மதியம் விடுமுறை விடப்பட்டது.

    • கேரள முன்னாள் முதல் மந்திரி உம்மன் சாண்டி(79) உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
    • இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி. காங்கிரஸ் சார்பில் 2 முறை முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார். கடந்த சில மாதத்துக்கு முன் நிமோனியா காய்ச்சல் காரணமாக உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    இதையடுத்து கேரள முன்னாள் முதல் மந்திரி உம்மன் சாண்டி(79) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த நிலையில் உயிரிழந்தார் என அவரது மகன் தெரிவித்துள்ளார். அவரது மறவையொட்டி கேரளாவில் இன்று பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.

    இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதிமய்ய கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தேசியத்தின் மேல் பெரும்பற்றும் மாநில வளர்ச்சியில் மாளாத அக்கறையும் கொண்டு மிக நீண்டகாலம் வெற்றிகரமான அரசியல் பணி செய்து மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற தலைவர் உம்மன் சாண்டியின் மறைவு நாட்டிற்கும், கேரளத்திற்கும் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.





    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாட்டிற்கும், முக்கியமாக கேரளாவிற்கு மிகப்பெரிய இழப்பு- கார்கே
    • நாங்கள் அவரை மிகவும் நேசித்தோம், அவரை அன்புடன் நினைவில் கொள்வோம்- ராகுல் காந்தி

    கேரள மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி இன்று காலை பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை நடைபெற இருக்கிறது.

    உம்மன் சாண்டி மறைவுக்கு பிரதமர் மோடி, கேரள மாநில முதல்வர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா ஆகியோர் கர்நாடகா சென்றுள்ளனர். அவர்கள் உம்மன் சாண்டி உடலுக்கு மலர்வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

    மல்லிகார்ஜூன கார்கே தனது இரங்கல் செய்தியில்  ''நாட்டிற்கும், முக்கியமாக கேரளாவிற்கு மிகப்பெரிய இழப்பு. சிறந்த தலைவர். காங்கிரஸ் கட்சிக்காக நீண்ட காலம் பணியாற்றியவர். அவர் நேர்மையான கட்சி தலைவர். இன்று அவரை இழந்துள்ளோம். நான் மிகவும் கவலையடைகிறேன். இது மிகப்பெரிய இழப்பு'' என்றார்.

    ராகுல் காந்தி தனது இரங்கல் செய்தியில் ''இந்திய மற்றும் கேரள உணர்வையும் பிரதிநிதித்துவப்படுத்தியவர். கேரள மக்களின் உண்மையான தலைவராக திகழ்ந்தவர். அவரை நாம் தவற விடுகிறோம். நாங்கள் அவரை மிகவும் நேசித்தோம், அவரை அன்புடன் நினைவில் கொள்வோம். அவரது குடும்பத்தினருக்கும், அவரை இழந்து வாடும் ஒவ்வொருவருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • வாழ்நாள் முழுவதையும் மக்கள் சேவைக்காகவும், கேரளாவின் முன்னேற்றத்திற்காகவும் செலவிட்டவர்- மோடி
    • மக்கள் வாழ்வில் மிகவும் நெருக்கமாக இருந்தவர், திறமையான நிர்வாகி- பினராயி விஜயன்

    கேரள மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான உம்மன் சாண்டி இன்று காலை பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். 79 வயதாகும் உம்மன் சாண்டியின் மறைவையொட்டி கேரளாவில் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மோடி தனது இரங்கல் குறித்து டுவிட்டர் செய்தியில் ''மிகவும் எளிமையாக பழகக்கூடிய, தனது வாழ்நாள் முழுவதையும் மக்கள் சேவைக்காகவும், கேரளாவின் முன்னேற்றத்திற்காகவும் செலவிட்டவரை நாம் இழந்துள்ளோம். நாங்கள் இருவரும் அவரவர் மாநில முதல்வராகவும், நான் பிரதமரான பின், சந்தித்த நிகழ்வுகளை திரும்பி பார்க்கிறேன். அவரது குடும்பத்தினருடனும், ஆதரவாளர்களுடன் என்னுடைய எண்ணங்கள் இருக்கும். அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் ''ஒரே வருடத்தில்தான் நாங்கள் இருவரும் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டோம். மாணவர் வாழ்வில் இருந்து அரசியல் வாழ்வு வரை ஒரே நிலையில் இருந்தது. தற்போது அவரது பிரிவு மிகவும் வருதத்தை அளிக்கிறது. மக்கள் வாழ்வில் மிகவும் நெருக்கமாக இருந்தவர், திறமையான நிர்வாகி'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • 79 வயதான உம்மன் சாண்டி பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்
    • இறுதிச் சடங்கு வியாழக்கிழமை நடைபெறுகிறது

    கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி. காங்கிரஸ் சார்பில் 2 முறை முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார். கடந்த சில மாதத்துக்கு முன் நிமோனியா காய்ச்சல் காரணமாக உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    இந்நிலையில், இன்று காலமானார். சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த நிலையில் உயிரிழந்தார் என அவரது மகன் தெரிவித்துள்ளார்.

    அவரது மறவையொட்டி கேரளாவில் இன்று பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.

    மேலும், அனைத்து அரசு அலுவலகங்கள், தொழில்முறை கல்லூரிகள் உள்பட கல்வி நிறுவனங்கள் இன்று செயல்படாது எனவும் தெரிவித்துள்ளது.

    இறுதிச் சடங்கு வியாழக்கிழமை நடைபெற இருக்கிறது.

    • காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி.
    • கடந்த சில மாதமாக உடல்நலக் குறைவால் கடும் அவதிப்பட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி. காங்கிரஸ் சார்பில் 2 முறை முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார்.

    கடந்த சில மாதத்துக்கு முன் நிமோனியா காய்ச்சல் காரணமாக உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    இந்நிலையில், கேரள முன்னாள் முதல் மந்திரி உம்மன் சாண்டி(79) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த நிலையில் உயிரிழந்தார் என அவரது மகன் தெரிவித்துள்ளார்.

    ×