search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்ெபண்"

    • சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சேலத்தாம்பட்டி குடிசைமாற்று வாரியம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். சலவை தொழிலாளி. இவரது மனைவி அலமேலு மங்கை பிரியா இவர் தனது மகளுடன் இன்று காலையில் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாமில் மனு கொடுப்பதற்காக வந்தார்.
    • கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து திடீரென அலமேலு மங்கை மறைத்து கொண்டு வந்த சாணிபவுடரை குடித்து விட்டார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சேலத்தாம்பட்டி குடிசைமாற்று வாரியம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். சலவை தொழிலாளி. இவரது மனைவி அலமேலு மங்கை பிரியா (வயது 36). இவர் தனது மகளுடன் இன்று காலையில் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாமில் மனு கொடுப்பதற்காக வந்தார்.

    அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து திடீரென அலமேலு மங்கை மறைத்து கொண்டு வந்த சாணிபவுடரை குடித்து விட்டார். இதை பார்த்த போலீசார், உடனடியாக ஓடி வந்து, அவரை மீட்டு விசாரித்தனர். அப்போது தான், கந்தம்பட்டியை சேர்ந்த ஒருவரிடம் தனது வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்து கந்துவட்டிக்கு ரூ.3 லட்சம் கடன் வாங்கினேன். 20 மாத தவணையில் கட்டுவதாக வாங்கியிருந்தேன்.

    இதையடுத்து 10-வது தவணையில் முழு பணத்தையும் அவரிடம் கொடுத்தபோது பணத்தை வாங்க மறுத்து 20 தவணையும் முடிந்த பிறகு தான் வீட்டின் பத்திரத்தை தருவேன் என கூறினார். பணத்தை வாங்கி கொண்டு பத்திரத்தை கொடுங்கள் என கேட்டபிறகும் அவர் தர மறுத்து தகாத வார்த்தைகளால் திட்டுகிறார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி சாணி பவுடரை குடித்து விட்டேன். பத்திரத்தை தர மறுக்கும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் ெதரிவித்தார்.

    இதையடுத்து போலீசார், அலமேலு மங்கையை சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு அவசர வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • இளம்பெண்ணுடன் பழகியதை கண்டித்ததால் விஷம் குடித்த வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முகவூர் கிருஷ்ணன்கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் (வயது 31). இவர் ரெடிமேடு ஆடை கள் உற்பத்தி செய்யும் தொழில் செய்து வந்தார். தனது வீட்டு மாடியில் ரெடிமேடு ஆடைகளை உற்பத்தி செய்யும் பணிகளில் பெண்களை ஈடுபடுத்தி வந்தார்.

    அப்போது அவர் அங்கு வேலைக்கு வந்த ஒரு இளம்பெண்ணிடம் நெருங்கி பழகி வந்தார். இதுபற்றி அறிந்த முத்துக்கிருஷ்ணனின் தாய் கண்டித்துள்ளார். மேலும் அவரது மனைவி ரேசிகா கணவருடன் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

    இதனால் மனம் உடைந்த முத்துக்கிருஷ்ணன் விஷம் குடித்துவிட்டார். அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். அங்கு சற்று உடல்நலம் பெற்றதும் அவரை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

    அப்போது முத்துக்கி ருஷ்ணன் ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தி னர் அவரை மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாப மாக இறந்தார்.

    இதுபற்றி தளவாய்புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    ×