என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இளம்பெண்ணுடன் பழகியதை கண்டித்ததால் விஷம் குடித்த வியாபாரி சாவு
- இளம்பெண்ணுடன் பழகியதை கண்டித்ததால் விஷம் குடித்த வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
- சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முகவூர் கிருஷ்ணன்கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் (வயது 31). இவர் ரெடிமேடு ஆடை கள் உற்பத்தி செய்யும் தொழில் செய்து வந்தார். தனது வீட்டு மாடியில் ரெடிமேடு ஆடைகளை உற்பத்தி செய்யும் பணிகளில் பெண்களை ஈடுபடுத்தி வந்தார்.
அப்போது அவர் அங்கு வேலைக்கு வந்த ஒரு இளம்பெண்ணிடம் நெருங்கி பழகி வந்தார். இதுபற்றி அறிந்த முத்துக்கிருஷ்ணனின் தாய் கண்டித்துள்ளார். மேலும் அவரது மனைவி ரேசிகா கணவருடன் பேசாமல் இருந்து வந்துள்ளார்.
இதனால் மனம் உடைந்த முத்துக்கிருஷ்ணன் விஷம் குடித்துவிட்டார். அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். அங்கு சற்று உடல்நலம் பெற்றதும் அவரை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
அப்போது முத்துக்கி ருஷ்ணன் ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தி னர் அவரை மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாப மாக இறந்தார்.
இதுபற்றி தளவாய்புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்