search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறுதிபோட்டி"

    • முதலிபாளையத்தில் உள்ள நிப்ட்-டீ கல்லூரி மைதானத்தில் அரையிறுதிப்போட்டிகள் நடைபெற்றன.
    • ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் - சி.ஆர்., கார்மென்ட்ஸ் ஈகிள்ஸ் அணிகள் இறுதி போட்டி மோதுகின்றன

    திருப்பூர்:

    திருப்பூர் பின்னலாடை நிறுவன அணிகளுக்கான நிப்ட்-டீ பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி (என்.பி.எல்.,), முதலிபாளையத்தில் உள்ள நிப்ட்-டீ கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அரையிறுதிப்போட்டிகள் நடைபெற்றன.

    முதல் போட்டியில் ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் - ரிதம் நிட் இந்தியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஈஸ்ட்மேன் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 126 ரன் எடுத்தது. அடுத்ததாக களமிறங்கிய ரிதம் 8 விக்கெட் இழப்புடன் 104 ரன் மட்டுமே எடுத்தது. 4 ஓவர் பந்து வீசி நான்கு விக்கெட் வீழ்த்திய ஈஸ்ட்மேன் அணி பவுலர் விஜயகுமார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    மற்றொரு அரையிறுதியில் எஸ்.என்., எக்ஸ்போர்ட்ஸ் - சி.ஆர்., கார்மென்ட்ஸ் ஈகிள்ஸ் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய எஸ்.என்., அணி 8 விக்கெட் இழப்புக்கு 121 ரன் எடுத்தது. அடுத்து ஆடிய சி.ஆர்., கார்மென்ட்ஸ் 124 ரன் எடுத்து வெற்றியை கைப்பற்றியது. 4 ஓவர் பந்து வீசி 3 விக்கெட் வீழ்த்திய சி.ஆர்., கார்மென்ட்ஸ் பவுலர் ஆல்பிரட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    வருகிற 9-ந் தேதி காலை 9 மணிக்கு, நிப்ட்-டீ பிரீமியர் லீக் கிரிக்கெட் இறுதி போட்டி நடக்கிறது. இதில் ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் - சி.ஆர்., கார்மென்ட்ஸ் ஈகிள்ஸ் அணிகள் மோதுகின்றன.

    போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு நிப்ட்-டீ பிரீமியர் லீக் சுழற்கோப்பை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு,இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு கோப்பை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும்.

    ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருதுகளும் வழங்கப்பட உள்ளது.

    ×