search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரும்பு சத்து"

    • வயதைக் குறைத்துக் காட்டக் கூடிய தன்மை பப்பாளிக்கு உண்டு.
    • நோய் ஏற்படுத்தக் கூடிய நச்சுக் கிருமிகளை முற்றிலும் அகற்றும்.

    பரபரப்பான வாழ்க்கை சூழலால் பலருக்கு உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை. கவலை வேண்டாம். காய்கறி, பழங்கள் மூலமாகவும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியும். இந்த பட்டியலில் முதலில் இருப்பது பப்பாளி. வைட்டமின்கள், இரும்பு சத்து, கால்சியம், ரிபோபிளாவின் உள்ளிட்டவை நிறைந்திருக்கும் ஒரு 'ஆல் ரவுண்டர்' பழம் பப்பாளி. உணவில் தினமும் பப்பாளி சேர்த்துக் கொண்டால் கழிவுகளை சரியான முறையில் வெளியேற்றி செரிமானத்தை சீராக்கும், கொழுப்பை எரித்துவிடும். பப்பாளியில் உள்ள பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து இதயத்தை பாதுகாக்கும். எனவே உங்கள் டயட்டில் பப்பாளியை மிஸ் பண்ண வேண்டாம்.

    பப்பாளியில் ஆண்டி ஆக்சிடண்ட் இருக்கிறது. இதனால் நோய் ஏற்படுத்தக் கூடிய நச்சுக் கிருமிகளை முற்றிலும் அகற்றும். இதில் வைட்டமின் சி, ஏ, இ சத்துகள் நிறைந்திருப்பதால் கண் பார்வை தெளிவாக இருக்கும். கண்களுக்கு நல்லது.

    வயதைக் குறைத்துக் காட்டக் கூடிய தன்மை பப்பாளிக்கு உண்டு. எனவே அதிகமாக பப்பாளி உண்பதால் செல்கள் வயதாவதைக் கட்டுப்படுத்தும்.

    ஆஸ்துமா நோய் கொண்டவர்கள் பப்பாளியை தொடர்ந்து சாப்பிடுவதால் அதன் அளவு குறைந்து கட்டுப்பாடாக இருக்கும். பப்பாளி உண்பதால் புற்றுநோய் இல்லா ஆரோக்கிய உடலைப் பெறலாம். புற்று நோய்க் கிருமிகள் வரக்கூடிய அறிகுறிகள் தெரிந்தாலே பப்பாளி அதை முற்றிலும் அகற்றும்.

    வைட்டமின் கே மற்றும் வைட்டமின்சி சத்துக் குறைபாடுக் காரணமாகத்தான் எலும்பு முறிவு பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகிறது. இந்த இரண்டு சத்துகளும் பப்பாளியில் அதிகமாக இருக்கிறது. நீரிழிவு நோய் இருப்போரும் பப்பாளியை உண்ணலாம். இதில் சர்க்கரையின் அளவும் குறைவு என்பதால் பயமின்றி தாராளமாக உண்ணலாம். சர்க்கரை அளவும் கட்டுப்பாடாக இருக்கும்.

    அஜீரணக் கோளாறு சரிசெய்யப்படும். என்சமைன் பப்பாளியில் அதிகம் இருப்பதால் அது உணவை எளிதில் ஜீரணித்துவிடும். நார்ச் சத்தும் பப்பாளியில் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையும் வராது. பப்பாளி நீர் நிறைந்த பழம் என்பதால் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும்.

    ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும் தன்மை பப்பாளியில் இருக்கிறது. நார்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் ஆகியவை அதிக அளவில் இருப்பதால் இதயக் கோளாறுகள் ஏற்படாது. பொட்டாசியம் சத்து அதிகம் உட்கொள்ளப்பட்டால் உடலுக்கு தீங்கான சோடியத்தின் அளவைக் குறைக்கும். இதனால் உணவு ஜீரண சக்தி சீராகி மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.

    • பள்ளிகளில் மாணவர்கள் வாந்தி எடுப்பதாகவும், வயிற்று வலி இருப்பதாகவும் பள்ளி அதிகாரிகளிடம் இருந்து சுகாதார குழுவினருக்கு தகவல் கிடைத்தது.
    • நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

    அசாம் மாநிலம் சரைடியோ மாவட்டத்தில் உள்ள இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, சுகாதாரத் துறை ஊழியர்கள் வழங்கிய இரும்பு சத்து மாத்திரையை உட்கொண்டதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    பாட்சாகு பிளாக் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் உள்ள படாவ் துணை மையத்தைச் சேர்ந்த சுகாதார பணியாளர்கள் குழு கெரானிபதர் கீழ்நிலைப் பள்ளியின் 75 மாணவர்களுக்கும், நிமாலியா கீழ்நிலைப் பள்ளியின் 26 மாணவர்களுக்கும் இரும்பு சத்து மாத்திரைகளை வழங்கியுள்ளது.

    ஆசிரியர்கள் முன்னிலையில் வழங்கப்பட்ட இந்த மாத்திரைகளை குழந்தைகள் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

    இந்நிலையில் மாத்திரை எடுத்துக் கொண்ட சிறிது நேரத்தில், பள்ளிகளிலிருந்து மாணவர்கள் சிலர் வாந்தி எடுப்பதாகவும், வயிற்று வலி ஏற்பட்டுள்ளதாகவும் பள்ளி அதிகாரிகளிடம் இருந்து சுகாதார குழுவினருக்கு தகவல் கிடைத்தது.

    அவர்கள் உடனடியாக சோனாரி சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர், மேலும் 48 குழந்தைகள் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

    • நாட்டு சர்க்கரை, பனை வெல்லம் உள்ளிட்ட பலவகையான பொருட்களை கொண்டு இனிப்பு பலகாரங்கள் தயார் செய்தனர்.
    • நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் அனைத்து வகையான வைட்டமின் குறைபாடுகளையும் நீக்கிக்கொள்ள முடியும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அடுப்பில்லா சமையல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்லூரியில் பயின்று வரும் இளங்கலை மற்றும் முதுகலை பட்ட வகுப்பு பயின்று வரும் அனைத்து துறை சார்ந்த மாணவிகள் கலந்து கொண்டு வகை வகையான இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, காரம் உள்ளிட்ட அனைத்து அறு சுவைகள் கொண்ட தின்பண்டங்களை அடுப்பு இல்லாமல் தயார் செய்து அசத்தி காட்டினர்.

    இந்த உணவுப்பொ ருட்களை மாணவிகள் தயாரிப்பதற்கு அடுப்பின் உதவி இல்லாமலும், எண்ணெய்யை பயன்ப டுத்தாமலும் இயற்கை மற்றும் பாரம்பரிய உணவு முறையில் சத்து நிறைந்த கம்பு, கேழ்வரகு, சோளம், வரகு, திணை, உளுந்து, பயறு உள்ளிட்ட மாவு பொருட்கள், காய்கறிகள், கீரைகள், இரும்பு சத்து மற்றும் அனைத்து வைட்டமின் அடங்கிய காய்கறிகள், தேங்காய், வெல்லம், நாட்டுச் சர்க்கரை, பனை வெல்லம், ஏலக்காய், கிராம்பு உள்ளிட்ட பொருட்களை கொண்டு பல வகை, வகையான இனிப்பு பலகாரங்களை தயார் செய்து கல்லூரியில் காட்சிக்கு வைத்தனர்.

    இதனை ஆசிரியர்கள், மாணவர்கள் பார்வையிட்டு ருசித்து மகிழ்ந்தனர்.

    இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், பாரம்பரிய உணவு தானிய முறையில் பலவ கையான தின்பண்டங்களை தயார் செய்துள்ளோம் இவைகளை உண்பதன் மூலம்நோய் எதிர்ப்பு சக்திமற்றும் அனைத்து வகையான வைட்டமின் குறைபாடுகளையும் நீக்கிக் கொள்ள முடியும்.

    இந்த உணவுப் பொருட்களை தயாரிக்க நாங்கள் அடுப்புகளை பயன்படுத்தவில்லை.

    இந்த சத்தான உணவுகளை தயார் செய்ய சூடு தேவையில்லை. எனவே இங்கு அடுப்பும் தேவையில்லை.

    மிகக் குறைந்த செலவிலேயே தயாரிக்க கூடிய இந்த உணவு மிகவும் சிறந்த உணவு.ஊட்டச்சத்தும் அதிகம் நிறைந்தது என்றனர்.

    ×