search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்னசென்ட் திவ்யா"

    நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் ரூ.74,600 அபராதம் விதித்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் நகராட்சிகள்,11 பேரூராட்சிகள் மற்றும் 4 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கிய 4 மண்டலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை தவிர்ப்பது மற்றும் பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதை தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வினை வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் ஏற்படுத்தும் பொருட்டு ஒட்டு மொத்த கள ஆய்வு மண்டல அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டது.

    இதற்காக ஊட்டி, குன்னூர், கூடலூர், மற்றும் கோத்தகிரி ஆகிய 4 மண்டலங்களில் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் துணை கலெக்டர் நிலை அலுவலர்கள் குழுக்களாக பிரிந்து, மாவட்டம் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டனர். இக்குழுவினர் ஆய்வின் போது, தடை செய்யப்பட்ட, 28.100கி.கி எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, அபராதத் தொகையாக ரூ.74,600 வசூல் செய்யப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் வியாபாரிகளும், பொதுமக்களும்,சுற்றுலா மற்றும் வெளியூர் பயணிகளும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துதல் மற்றும் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தவிர்த்து நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச் சூழலை பாதுகாத்திட வேண்டும் என கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
    ஊட்டியில் சுதந்திர தின விழாவையொட்டி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நாளை(புதன்கிழமை) தேசியக்கொடியை ஏற்றுகிறார். நீலகிரி மாவட்டம் முழுவதும் 570 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். #IndependenceDay
    ஊட்டி:

    நாடு முழுவதும் சுதந்திர தின விழா நாளை (புதன்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா நாளை காலை 10 மணியளவில் ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. விழாவில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார். அதனை தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். இதில் தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களின் அணிவகுப்பும் நடக்க உள்ளது.



    விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனங்கள் நடைபெறுகிறது. தொடர்ந்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இந்த விழாவில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ் மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள். விழாவையொட்டி மைதானத்தை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு கொடிக்கம்பம் நடப்பட்டு, மேடை அமைக்கப்பட்டு உள்ளது. விழாவை பொதுமக்கள் பார்ப்பதற்காகவும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தற்காலிகமாக கழிப்பறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    விழாவுக்காக ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கடந்த சில நாட்களாக தினமும் காலையில் ஆயுதப்படை போலீசார் துப்பாக்கியுடன் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நடைபெற்ற போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகையை போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா பார்வையிட்டார். மேலும் ஊட்டி அரசு கலைக்கல்லூரி தேசிய மாணவர் படை மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களும் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். விழா நடைபெறும் மைதானம் மற்றும் அங்குள்ள சாலையை தூய்மையான வைக்கும் பணியில் நகராட்சி சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    விழாவை முன்னிட்டு போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா உத்தரவின்பேரில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகிய 3 தாலுகாக்களில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு(மதுவிலக்கு) கோபி தலைமையிலும், கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகாக்களில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தம்பிதுரை தலைமையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் முழுவதும் 570 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். சேரம்பாடி, தாளூர், அய்யங்கொல்லி, கக்கனல்லா, எருமாடு, பாட்டவயல், நாடுகாணி, முள்ளி, மஞ்சூர், கெத்தை, குஞ்சப்பணை உள்ளிட்ட 16 சோதனைச்சாவடிகளில் இரவும், பகலும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்துகிறார்கள். சோதனைக்கு பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. குன்னூரில் 4 இடங்கள், ஊட்டியில் 4 இடங்கள், கூடலூரில் 1 இடம், கோத்தகிரியில் 1 இடம் என வாகன சோதனை நடத்தப்படுகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து விடுதிகளிலும் தங்கும் நபர்கள் குறித்த விவரங்களை போலீசார் கேட்டறிந்து சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். மாவட்ட கலெக்டர் பங்களாவில் இருந்து ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானம் வரை நாளை போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. மைதானம் முழுவதும் போலீஸ் கண்காணிப்பில் உள்ளது. 
    மரம் முறிந்து விழுந்து உயிரிழந்த கல்லூரி மாணவர் குடும்பத்துக்கு தமிழக அரசின் சார்பில் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சத்துக்கான காசோலையை நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார். #InnocentDivya #FinancialAssistance
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் கிறிஸ்டோபர். இவரது மனைவி ரோஷிணி. இவர்களுடைய மகன்கள் இமான் அகஸ்டின் (வயது 18), விபின். இதில் இமான் அகஸ்டின் கோத்தகிரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தங்கி இருந்து பி.காம். சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி விடுமுறையில் ஊட்டிக்கு வந்த இமான் அகஸ்டின் பிரார்த்தனை செய்வதற்காக ஆலயத்துக்கு சென்று கொண்டு இருந்தபோது, மரம் முறிந்து விழுந்ததில் பரிதாபமாக இறந்தார். அதனை தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சத்துக்கான காசோலையை நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, உயிரிழந்த இமான் அகஸ்டின் குடும்பத்தினருக்கு வழங்கினார். இதில் கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி., சாந்தி ராமு எம்.எல்.ஏ., ஊட்டி தாசில்தார் தினேஷ்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 
    ×