search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடை தயாரிப்பு"

    • கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக ரசாயனம் கலக்காத வகையில் இயற்கையான ஆயத்த ஆடைகளை தயாரித்து வருகிறது.
    • விலை சற்று அதிகம் என்றாலும் இந்த உடைகளுக்கு என தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை அருகே உள்ள ஆரோவில் பகுதியில் தனியார் ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    சுனாமி தாக்குதலுக்கு பிறகு இங்கு தயாரிக்கப்பட்ட சுனாமிகா பொம்மை உலக அளவில் புகழ் பெற்றது. இந்த நிறுவனம் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக ரசாயனம் கலக்காத வகையில் இயற்கையான ஆயத்த ஆடைகளை தயாரித்து வருகிறது.

    அண்மையில் இந்த நிறுவனம் துளசி, சந்தனம், கத்தாழை போன்ற மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளை கொண்டு துணிகளை உற்பத்தி செய்து அவற்றை கொண்டு ஆடைகளை தயாரித்து வருகின்றது.

    இவற்றை ஆன்லைன், உள்ளூர் கடைகள், வெளி மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் தனி விற்பனையகம் அமைத்து விற்பனை செய்து வருகிறது.

    ஆரோவில்லை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தொடங்கப்பட்ட இந்த ஆயத்த ஆடை நிறுவனம் இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் உடைகளை தயாரிக்கிறது.

    விலை சற்று அதிகம் என்றாலும் இந்த உடைகளுக்கு என தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

    வாடிக்கையாளர்கள் இந்த உடைகளை அணிந்து வலம் வந்த வித்தியாசமான பேஷன் ஷோ புதுவை நகர விற்பனை கூடத்தில் நடந்தது. இதில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் ரசாயன கலக்காத ஆயத்த ஆடைகள் அணிந்து ஒய்யார நடை நடந்து கைத்தட்டல் பெற்றனர்.

    பெண்கள் சுய தொழில் செய்து சம்பாதிக்க முடியும் என்பதை வெளிபடுத்தும் விதமாக இந்த பேஷன் ஷோ நடத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

    • பஞ்சு விலை நிலையாக இருப்பதால் நூல் விற்பனையும், ஜவுளி வர்த்தகமும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.
    • நூல் வர்த்தகமும் சிறப்பாக அமையும் என நூற்பாலைகள் நம்பிக்கை அடைந்துள்ளன.

    திருப்பூர் : 

    கடந்த ஆண்டு அதிக விலைக்கு பருத்தி விற்கப்பட்டதால், கூடுதல் விலையை எதிர்பார்க்கும் விவசாயிகள், பருத்தியை சந்தைக்கு கொண்டு வருவதில் தயக்கம் காட்டுகின்றனர். நல்ல விலை கிடைக்குமென எதிர்பார்த்து, விவசாயிகள் இருப்பு வைத்துள்ளதால் விலை வீழ்ச்சி அடையாமல் சீராக இருக்கிறது. சிறிய இடைவெளிக்கு பின் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் நூல் விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது. பஞ்சு விலை நிலையாக இருப்பதால் நூல் விற்பனையும், ஜவுளி வர்த்தகமும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.

    இது குறித்து, ஐ.டி.எப்., கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது:- சர்வதேச சந்தைகளுடன் ஒப்பிடுகையில் இந்திய பருத்தி விலை அதிகமாக இருக்கிறது. கடந்த ஆண்டுகளில் இழந்த நூல் மற்றும் ஆடை ஏற்றுமதி சந்தையை, சாதகமான பருத்தி விலையில் மீண்டும் கைப்பற்ற துவங்கியிருக்கிறோம். செப்டம்பர்-அக்டோபர், மாதங்களில் சரிந்த நூல் ஏற்றுமதி டிசம்பர் மாதம் 40 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளது.

    ஒரு மாதமாக, இந்திய பருத்தி விலை ஸ்திரத்தன்மையை அடைந்து உள்ளதால் உள்நாட்டு நூல் மற்றும் ஆடை வியாபாரமும் உயரத் துவங்கியுள்ளது. அமெரிக்காவில் சாகுபடி செய்யப்படும் பருத்தியின் அளவு மற்றும் மகசூல் விபரம், ஏப்ரல் மாதம் தெரிய வரும். அதுவரை பருத்தி வர்த்தகத்தில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை.

    வெளிநாட்டு சில்லரை விற்பனை கடைகளில் சரக்கு குறைந்து புதிய ஆர்டர் வரத்து அதிகரித்துள்ளது. 'பிராண்டட்' நூலிழை மற்றும் ஆடைகளுக்கான ஆர்டர்கள் வரத் துவங்கியுள்ளன. சீனாவில் மீண்டும் கொரோனா பரவியுள்ள நிலையில் அந்த நாட்டுக்கான ஆர்டர்கள் பெருமளவு இந்தியாவை நோக்கி திரும்பியுள்ளன. இதனால், இம்மாதத்தில் இருந்து நூல் வர்த்தகமும் சிறப்பாக அமையும் என நூற்பாலைகள் நம்பிக்கை அடைந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த2 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை கால ஆடை தயாரிப்பு ஆர்டர் வருகை சரிந்துவிட்டது.
    • ஆண்டு துவக்கம் முதலே திருப்பூர் நிறுவனங்களுக்கு ஆர்டர் வருகை குறைவாகவே உள்ளது.

    திருப்பூர் :

    உள்நாட்டு சந்தைக்காக பின்னலாடை ரகங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் திருப்பூரில் ஆயிரக்கணக்கில் உள்ளன.இந்நிறுவனங்களுக்கு கோடை, குளிர் பருவ காலங்கள், பொங்கல், ரம்ஜான், தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் ஆடை தயாரிப்புக்கான ஆர்டர் அதிக அளவில் கிடைக்கிறது.

    பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் தீபாவளி பண்டிகை மிக முக்கியமானது. இப்பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள வர்த்தகரிடமிருந்து திருப்பூர் நிறுவனங்களுக்கு அதிக அளவு ஆடை தயாரிப்பு ஆர்டர் கிடைக்கிறது. போனஸ் கிடைப்பதால் தொழிலாளர்களையும், தீபாவளி தித்திக்க செய்கிறது.கொரோனா பரவல் காரணமாக கடந்த2 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை கால ஆடை தயாரிப்பு ஆர்டர் வருகை சரிந்துவிட்டது. அபரிமிதமாக உயர்ந்த நூல் விலை, கொரோனாவால் உள்நாட்டில் ஏற்பட்டுள்ள வர்த்தக மந்தநிலையால் நடப்பு ஆண்டு துவக்கம் முதலே திருப்பூர் நிறுவனங்களுக்கு ஆர்டர் வருகை குறைவாகவே உள்ளது. கைவசம் போதிய ஆர்டர் இல்லாததால் உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள் சார்ந்துள்ள நிட்டிங், சாய ஆலை, பிரின்டிங், எம்ப்ராய்டரி உட்பட அனைத்துவகை ஜாப்ஒர்க் துறையினரும் கவலை அடைந்துள்ளனர்.

    வருகிற அக்டோபர் 24-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கொரோனா குறித்த கவலைகள் விலகியுள்ளன. தீபாவளி ஆடை தயாரிப்புக்கு ஆர்டர் வருகை அதிகரிக்கும் என்கிற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் பின்னலாடை துறையினர்.நூற்பாலைகள், ஒசைரி நூல் விலைகளை ஒரே சீராக தொடர செய்து, வர்த்தகத்தை ஈர்ப்பதற்கு கைகொடுக்கவேண்டும் என்பது ஒட்டுமொத்த ஆடை உற்பத்தியாளர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

    ×