search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஞ்சநேயர் வழிபாடு"

    • பஞ்சமுக ஆஞ்சநேயர் பக்தர்களுக்க ஐந்துவிதமான அனுக்கிரகங்களை வாரி வழங்குகின்றார்.
    • ஸ்ரீ ஆஞ்சநேயர் பரிபூரண கடாட்சம் தருபவர்.

    பஞ்சமுக ஆஞ்சநேயர் என்பது, ஆஞ்சநேயர் தனது திருமுகத்தோடு, ஸ்ரீ வராகர், ஸ்ரீ கருடன், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீஹயக்கிரீவர் ஆகிய தெய்வங்களின் திருமுகங்களையும் தனது திருமுகத்தோடு இணைத்துக் கொண்டு பத்து கைகளுடன் விதவிதமான ஆயுதங்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பவர். அத்தகைய சிறப்புமிக்க பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் ஒன்று கோயம்புத்தூரில் நவாவூர் பிரிவு என்னும் இடத்தில் அமைந்துள்ளது.

    இந்த ஐந்து திருவுருவங்களைக் கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயர். பக்தர்களுக்க ஐந்துவிதமான அனுக்கிரகங்களை வாரி வழங்குகின்றார். கிழக்கு முகமாகத் தரிசனம் தரும் ஸ்ரீ ஆஞ்சநேயர் பரிபூரண கடாட்சம் தருபவர். இஷ்ட சித்திகளை பக்தர்களுக்கு தருபவர், தெற்குமுகமாக தரிசனம் தரும் ஸ்ரீ நரசிம்மர், எதிரிகளின் தொல்லைகளை அழிக்கவும் மனோதைரியம் பெறவும், அசாதாரண சக்திகளால் ஏற்படும் தொல்லைகளைப் போக்கிக் கொள்ளவும் அருளுகிறார்.

    மேற்குமுகமாகத் தரிசனம் தரும் ஸ்ரீ கருட பகவான் சகல சவுபாக்கியங்களும் அருளுகிறார். வடக்குமுகமாகத் தரிசனம் தரும் ஸ்ரீ வராகர் செல்வச் செழிப்பினை பக்தர்களுக்கு வாரி வழங்குகிறார்.

    மேல் நோக்கிய பார்வையுடன் காணப்படும் ஸ்ரீ ஹயக்கிரீவர் சகல கலைகளையும், கல்வியையும் கற்றுக்கொண்டு அவற்றில் சிறந்து விளங்க அருளுகிறார். பஞ்சமுக ஆஞ்சநேயர் பக்தர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவதால். பக்தர்கள் இவர் திருத்தலத்திற்கு வந்து மனமுருக வேண்டிச் செல்கின்றனர்.

    • மதிப்புமிக்க முத்து மாலையை அவருக்கு பரிசளித்தார்.
    • ஒவ்வொரு முத்தாக எடுத்து கடித்து உடைத்து தூக்கி வீசினார்.

    `ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே

    வாயுபுத்ராய தீமஹி

    தந்நோ, ஹனுமன் ப்ரசோதயாத்'

    இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி, அதோடு ராம நாமத்தையும் பாராயணம் செய்து வந்தால், அனுமனிடம் இருந்து கேட்ட வரங்கள் கிடைக்கும்.

    வடை மாலை ஏன்?

    ராவணனை வதம் செய்து அயோத்தி திரும்பிய பின்னர், ராமருக்கு பட்டாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. அதில் அனைவரும் பங்கேற்றிருந்தனர். அனுமனும் கலந்துகொண்டார். அந்த சபையில், அனுமனுக்கு ஒரு உயர்ந்த பரிசை அளிக்க விரும்பிய சீதாதேவி, தன்னுடைய கழுத்தில் இருந்து ஒரு மதிப்புமிக்க முத்து மாலையை அவருக்கு பரிசளித்தார். அதை வாங்கிய அனுமன், அந்த மாலையில் இருந்து ஒவ்வொரு முத்தாக எடுத்து கடித்து உடைத்து தூக்கி வீசினார்.

    இதைப்பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர். அனுமனின் செய்கையைப் பற்றி சீதாதேவியே அவரிடம் கேட்கவும் செய்தார். அதற்கு அனுமன், "தாயே.. தாங்கள் பரிசளித்த முத்து மாலையில் இருந்த ஒரு முத்தில் கூட ராம ரசம் இல்லை. ராம ரசம் இல்லாத எந்த பொருளும் எனக்கு உயர்வானது அல்ல" என்றார். சீதாதேவி மட்டுமல்ல அங்கிருந்த அனைவருமே அனுமனின் பக்தியை நினைத்து பூரித்துப் போயினர்.

    அந்த அனுமனுக்கு, ராம நாமத்தைச் சொல்லிய படியே வடையை கைகளால் தட்டி, சுட்டு, பின் மாலையாக கோர்த்து அணிவிக்க வேண்டும். அதை கடித்துப் பார்க்கும் அனுமன், அதில் ராம ரசம் இருப்பின், அதை அணிவித்த பக்தர்களுக்கு வேண்டிய வரங்களைத் தருவார் என்பது நம்பிக்கை.

    சிரஞ்சீவி பட்டம் பெற்றவர்களில் முக்கியமானவர், ஆஞ்சநேயர். இவர், ராமாயண இதிகாசத்தில் தலைவனாக வைத்து போற்றப்படும் ராமரின், முதன்மை பக்தனாகவும், அவரது தூதுவனாகவும் இருந்து பேறுபெற்றவர். ராம நாமத்தைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக விண்ணுலக வாழ்வை மறுத்து, இந்த பூமியிலேயே தங்கியவர் என்ற பெருமைக்குரியவர்.

    இத்தகைய சிறப்பு கொண்ட ஆஞ்சநேயருக்கு, மார்கழி மாதம் மூலம் நட்சத்திரம் அன்று ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அவரது சிறப்புகளைப் பற்றி அறிந்துகொள்வோம்.

    கேசாரி என்ற மன்னன், அஞ்சனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பல காலமாக குழந்தைப் பேறு கிடைக்காமல் இருந்தது. இதனால் அஞ்சனா, தனக்கு குழந்தைப் பேறு கிடைக்க வேண்டும் என்பதற்காக சிவபெருமானை நோக்கி கடுமையாக தவம் செய்தார். இவர் தவம் செய்த இடம் `அஞ்சனாத்ரி மலை' என்று அழைக்கப்படுகிறது. கர்நாடக மாநிலம் ஹம்பியில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.

    ஒரு முறை திருக்கயிலாயத்தில் சிவபெருமானும், பார்வதியும், குரங்கு உருவத்தில் விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது அவர்கள் இருவரின் உடலில் இருந்தும் ஜோதி வெளிப்பட்டு ஒரே ஜோதியாகி நின்றது. அதனை வாயு பகவான் கொண்டு வந்து, தவம் செய்து கொண்டிருந்த அஞ்சனாவிடம் பிரசாதமாக கொடுத்தார். அதன்மூலம் பிறந்தவர்தான், 'ஆஞ்சநேயர்'. சிவனின் ஜோதியில் இருந்து பிறந்தவா் என்பதால், 'ருத்ர வீரிய சமுத் பவாய நமக' என்ற நாமம் அவருக்கு உண்டானது. இப்படி ஆஞ்சநேயர் அவதரித்தது, மார்கழி மாதம் மூலம் நட்சத்திரம் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. எனவே அந்த நாளில், 'அனுமன் ஜெயந்தி' கொண்டாடப்படுகிறது.

    சிவபெருமான் சக்தியில் இருந்து தோன்றியவர் என்பதால், ஆஞ்சநேயருக்கு இயல்பாகமாக அதீத சக்தி இருந்தது. அவர் குழந்தையாக இருந்த சமயத்தில், கிரகண காலம் ஒன்று வந்தது. அப்போது ராகு பகவான், சூாியனை பிடிப்பதற்காக சென்று கொண்டிருந்தார். ராகு, சூரியனை நெருங்க நெருங்க சூரியனின் செம்மை நிறம் கூடியது. பூமியில் குழந்தையாக இருந்த ஆஞ்சநேயருக்கு, சூரியன் ஒரு பழம் என்று தோன்றியது. எனவே அதைப் பறித்து சாப்பிடும் நோக்கில், ஆஞ்சநேயர் வானில் எகிறி பறக்கத் தொடங்கினார்.

    சிறிய குரங்கு ஒன்று சூரியனை நோக்கி வருவதைப் பார்த்த ராகு, அதை தடுத்து நிறுத்த முயன்றார். ஆனால் குழந்தையான ஆஞ்சநேயரோ, ராகுவை தன் காலால் தள்ளிவிட்டு, சூரியனை நோக்கி முன்னேறினார். இதனால் `கிரகணம் நடை பெறாமல் போய்விடுமோ' என்று அஞ்சிய ராகு, தேவர்களின் தலைவனான இந்திரனிடம் இதுபற்றி முறையிட்டார்.

    உடனே அங்கு வந்த தேவேந்திரன், "அஞ்சனை மைந்தனே.. இது பழம் அல்ல; சூரியன். அதனை உன்னால் சாப்பிட இயலாது. உனக்கு வேறு பழம் தருகிறேன்" என்று எவ்வளவோ சொல்லியும் ஆஞ்சநேயர் கேட்கவில்லை. சிறு குழந்தை என்பதால் அடம் பிடித்தார்.

    செய்வதறியாது திகைத்த தேவேந்திரன் ஒரு கட்டத்தில் கோபம் கொண்டு, தன்னுடைய ஆயுதமான வஜ்ஜிராயுதத்தால், ஆஞ்சநேயரின் தாடையில் தாக்கினார். இதனால் ஆஞ்சநேயர் பூமியில் போய் விழுந்தார். இந்திரன் தாக்கியதில் ஆஞ்சநேயரின் தாடை வீக்கம் கொண்டது. வடமொழியில் தாடைக்கு 'ஹனு' என்று பெயர். எனவே அவர் 'அனுமன்' என்று பெயர் பெற்றார்.

    சிவபெருமானின் சக்தியை அஞ்சனாதேவியிடம் கொண்டு போய் சேர்த்தவர், வாயு பகவான். அதனால் அனுமனுக்கு 'வாயுபுத்திரர்' என்ற பெயரும் உண்டு. அனுமன் பிறப்பெடுக்க காரணமாக இருந்த வாயு பகவானுக்கு, ஆஞ்சநேயர் தாக்கப்பட்டது வருத்தத்தை அளித்தது.

    எனவே அவர் தன்னுடைய காற்றை அடக்கிக்கொண்டு ஒரு குகைக்குள் போய் இருந்து கொண்டார். இதனால் பிரபஞ்சத்தில் எங்குமே காற்று இல்லாமல் அனைத்து ஜீவராசிகளும் துன்பத்தில் துடித்தன.

    இதனால் பதற்றம் அடைந்த தேவேந்திரன், உடனடியாக வாயுவிடம் சென்று, "வாயுவே.. ஏன் இப்படி செய்கிறீர்கள்?" என்று கேட்டார்.

    அதற்கு வாயு பகவான், "ஆஞ்சநேயனை.. நீங்கள் தாக்கியது என்னை வேதனைப்படுத்திவிட்டது. எனவே அவனுக்கு அதிக சக்திகள் கொடுத்து பாதுகாக்க வேண்டும்" என்று வேண்டினார். இதையடுத்து இந்திரன், பிரம்மா, அக்னி உள்ளிட்ட அனைவரும் சேர்ந்து, 'இனிமேல் எந்த அஸ்திரங்களாலும் அனுமனை ஒன்றும் செய்ய முடியாது' என்ற வரத்தை அளித்தனர். எனவே ஆஞ்சநேயருக்கு 'அபராஜிதன்' என்ற பெயர் உண்டு. இதற்கு 'வெல்ல முடியாதவர்' என்று பொருள்.

    விரதம் இருப்பது எப்படி?

    அனுமன் ஜெயந்தி அன்று அதிகாலையில் நீராடி, உணவு உண்ணாமல் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும். ராம நாமம் சொல்லி அவரை வழிபடுவதுடன், வெற்றிலை மாலை, வடை மாலை, வெண்ணெய் சாத்தியும் வழிபாடு செய்ய வேண்டும். மேலும் வீட்டில் உள்ள ஆஞ்சநேயர் படத்திற்கு தீபாராதனை ஏற்றி வழிபடுங்கள். அனுமனின் வாலில் சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து வழிபடுவது சிறப்பு. காலை உணவாக பொரியும், பழமும் சாப்பிட வேண்டும். பகல் உணவாக கிழங்கு, காய்கறிகளை உண்ண வேண்டும். இரவில் ஆஞ்சநேயா் திருநாமங்களைச் சொல்லி விரதத்தை முடிக்க வேண்டும்.

    (ஒவ்வொரு நாமாவைச் சொல்லி மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்)

    ஓம் மர்க்கடேசாய நம: பாதெள பூஜயாமி (கால்)

    ஓம் மஹோத்ஸஹாய நம: குல்பௌ பூஜயாமி (கணுக்கால்)

    ஓம் மஹாக்ஷுத்ர நிபர்ஹணாய நம: ஜங்கே பூஜயாமி (முழங்கால்)

    ஓம் ச'த்ருஸம்ஹாராய நம: ஜானுனீ பூஜயாமி (முட்டி )

    ஓம் ராமதூதாய நம: ஊரூ பூஜயாமி (தொடை)

    ஓம் மஹாதீராய நம: கடிம் பூஜயாமி (இடுப்பு)

    ஓம் ருத்ரவீர்யாய நம: குஹ்யம் பூஜயாமி (மர்மம்)

    ஓம் அஞ்சனாகர்பஸம் பூதாய நம: நாபிம் பூஜயாமி (தொப்புள்)

    ஓம் வாயுபுத்ராய நம: உதரம் பூஜயாமி (வயிறு)

    ஓம் குமாரப்ரம்மசாரிணே நம: வக்ஷ பூஜயாமி (மார்பு)

    ஓம் துஷ்டக்ரஹ விநாசாய நம: ஹ்ருதயம் பூஜயாமி (நெஞ்சு)

    ஓம் மஹாபல பராக்ரமாய நம: ஸ்கந்தௌ பூஜயாமி (தோள்)

    ஓம் ஜிதேந்த்ரியாய நம: கண்டம் பூஜயாமி (கழுத்து)

    ஓம் ஸீதாசோ காபஹாரிணே நம: ஹஸ்தான் பூஜயாமி (கைகள்)

    ஓம் லக்ஷ்மணப்ராணதாத்ரே நம: பாஹும் பூஜயாமி (புஜதண்டம்)

    ஓம் காகுஸ்த தூதாய நம: முகம் பூஜயாமி (முகம்)

    ஓம் ருத்ரமூர்த்தயே நம: நாஸிகாம் பூஜயாமி (மூக்கு)

    ஓம் வஜ்ர தேஹாய நம: அக்ஷிணீ பூஜயாமி (கண்கள்)

    ஓம் ராமப்ரியாய நம: கர்ணௌ பூஜயாமி (காதுகள்)

    ஓம் கோடிந்து ஸூர்யப்ரபாய நம: சிர: பூஜயாமி (தலை)

    ஓம் மாருதாத்மஜாய நம: ஸர்வாண்யங்கானி பூஜயாமி (முழுவதும்)

    அனுமனின் மாலா மந்திரம் ஓம் நமோ ஹரிராம தூதா, ஆஞ்ஜநேயா, அதிபல பராக்ரம சூரா, அந்தரண்டபகிரண்ட சண்ட பிரசண்ட உத்தண்ட கோலாஹல, அகோர சத்ரு சம்ஹாரா, வரம் தேஹி க்ருபா தயாளா, சிவ சிவ யோகாசன ப்ரியா, வாயு குமாரா, ஸீதா லக்ஷ்மி ஸுதா ஸுதா, சாயா பராக்ரம விஸ்வரூபா, ஓம்காரா ஆங்கார ஹ்ரீங்கார, சஞ்ஜீவராயா, ஸர்வ மோக்ஷகரணா, ஸஹஸ்ரநாம அலங்கிருத பூஷணா, ப்ரஹ்ம வரப்ரஸாத அனுகூலா, ப்ருண்ட கால ருத்ரா பக்தி விஸ்வாஸ சுத்த வசீகரா, ஸுக்ருத குணசீலா, அம்ருத காலஞான பரமாத்மா, பரம விமோசனா, பம்பம்பம், ரரர, ரிரிரி, நமச்சிவாய ஹனுமந்தா மம, வசி ஸ்வாஹா.

    • வெற்றி தரும் வெற்றிலை மாலை
    • ராமர் தந்த கணையாழியை (மோதிரத்தை) சீதா தேவியிடம் வழங்கினார் ஆஞ்சநேயர்.

    வெற்றி தரும் வெற்றிலை மாலை

    வெற்றியை யார்தான் விரும்பமாட்டார்கள், ஆனால் வெற்றி தேவதையின் அருள்பார்வை நம்மீது பட வேண்டுமானால், என்னதான் அதிர்ஷ்டம் இருந்தாலும், உரிய வழிபாடு மிக, மிக அவசியமாகும்.

    அந்த வகையில் ஆஞ்சநேயருக்கும், வீரபத்திரருக்கும் வெற்றிலை மாலை அணிவித்து வழிபாடு செய்தால் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

    குறிப்பாக அனுமானுக்கு வெற்றிலை மாலை விசேஷமானது.

    அதன் பின்னணியில் உள்ள புராண சம்பவம் வருமாறு:

    இலங்கையில் அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதையைக் கண்டு பிடிக்க அனுமன் புறப்பட்டுச் சென்றார்.

    நீண்ட தேடுதலுக்குப் பிறகு சீதை அசோக வனத்தில் இருப்பதை அவர் கண்டு பிடித்தார்.

    ராமர் நலமாக உள்ள விபரங்களை சீதையிடம் அனுமன் தெரிவித்தார்.

    பிறகு ராமர் தந்த கணையாழியை (மோதிரத்தை) சீதா தேவியிடம் வழங்கினார் ஆஞ்சநேயர்.

    சீதா தேவியும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

    தனது துன்பத்தைப் போக்கிய ஆஞ்சநேயருக்கு, விக்ராந்தன் (பராக்ரமம் உடையவன்), சமர்த்தன் (திறமையாகச் செய்து முடிப்பவர்), ப்ராக்ஞன் (அறிவாளி), வானரோத்தமன் (வானரர்களில் சிறந்தவன்) என்று நான்கு விருதுகளை வழங்கி கவுரவித்தாள்.

    அத்துடன்,பணிவுடன் வணங்கி நிற்கும் ஆஞ்சநேயருக்கு அட்சதை போட்டு ஆசீர்வதிக்க வேண்டும் என்று சீதாதேவி விரும்பினாள்.

    ஆனால் அப்போது சீதைக்கு அட்சதை போன்ற பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.

    இதனால் அருகில் இருந்த வெற்றிலைக் கொடியிலிருந்து அதன் இலைகளைப் பறித்து, அதை அனுமன் மீது தூவி, மனதார ஆசீர்வதித்தாள்.

    அந்த வெற்றிலைகளை மாலையாகக் கட்டி அனுமனுக்கு போட்டு மகிழ்ச்சியடைந்தாள்.

    சீதா பிராட்டியார் கையால் கிடைத்த இந்த வெகுமதியை ஸ்ரீ ஆஞ்சநேயரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். அன்று முதல் அனுமனுக்கு வெற்றிலை மாலை போடும் வழக்கம் ஏற்பட்டது..

    பொதுவாக, அனைத்து தெய்வங்களுக்கும் வெற்றிலையை சமர்ப்பிக்கும் வழக்கம் உள்ளது. என்றாலும் அனுமனுக்கு நாம் படைக்கும் வெற்றிலை சிறப்புக்குரியதாக மாறுகிறது.

    அனுமனுக்கு வெற்றிலை மாலை சமர்ப்பிக்கும் போது வெற்றிலையின் எண்ணிக்கை 2, 4, 6, 8 என்பதாக இரட்டைப்படை எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.

    வெற்றிலையுடன் வைக்கப்படும் பாக்கின் எண்ணிக்கையும் 1, 3, 5, 7 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் அமைய வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம்.

    ஆகவே, ஸ்ரீஆஞ்சநேயருக்கு வெற்றிலையை மாலையாகக் கட்டி போடும் போது, இவ்வாறே இரண்டு வெற்றிலை ஒருபாக்கு அல்லது நான்கு வெற்றிலை மூன்றுபாக்கு என்பதாக இருக்க வேண்டும்.

    மேலும் வெற்றிலையை நரம்பில்லாத முன்பகுதி வெளியில் தெரியுமாறு மடித்து, வாழை நார் போன்றவற்றைக் கொண்டு, மாலையாகத் தொடுத்துப் போடலாம்.

    இதனால் ஸ்ரீ ஆஞ்சநேயரின் அருளால் நாம் எடுத்த காரியத்தில் எல்லாம் வெற்றி உண்டாகும்.

    அது போல வீரபத்திரரின் அருளைப் பெறவும் வெற்றிலை மாலை வழிபாடே சிறந்தது.

    சென்னைக்கு அருகில் உள்ள அனுமந்தபுரத்தில் இருக்கும் வீரபத்திரர் ஆலயத்தில் வெற்றிலை மாலை வழிபாடு சிறப்பாக நடக்கிறது.

    ×