search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரியலூர் விபத்து"

    • வசந்த் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அந்த வழியாக ஜெயங்கொண்டத்திலிருந்து சென்று கொண்டிருந்த கார் மீது மோதியது.
    • விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதியை ஒட்டிய ஆமணக்கதோண்டி என்ற இடத்தை சேர்ந்தவர் வீரப்பெருமாள்(வயது 75). இவர் தனது வீட்டில் இருந்து அருகிலுள்ள கடைக்கு சைக்கிளில் சென்றார்.

    சாலையை கடக்க முயன்ற போது எதிரே ஜெயங்கொண்டம் அடுத்த கல்லேரி கிராமம் கோவில் தெருவை சேர்ந்த வசந்த் (35) என்பவர் இவர் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வீட்டுக்கு செல்வதற்காக மோட்டாசைக்கிளில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தார்.

    எதிர்பாராதவிதமாக சாலையை கடக்க நின்று கொண்டிருந்த வீரபெருமாள் மீது மோட்டார்சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வீரபெருமாள் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    வசந்த் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அந்த வழியாக ஜெயங்கொண்டத்திலிருந்து சென்று கொண்டிருந்த கார் மீது மோதியது. இதில் வசந்த் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார், அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி வசந்த் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் வீரபெருமாள், வசந்த் ஆகியோரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • மருவத்தூர் தாண்டி சென்றபோது அங்கே நடுரோட்டில் டயர் வெடித்து நின்ற டிராக்டரில் மோதி விபத்து ஏற்பட்டது.
    • விபத்து குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் விசாரணை நடத்தி டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் பாக்கியராஜ் (வயது38). இவர் மாணவர் விடுதியில் சமையலராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று இரவு செந்துறையில் இருந்து தனது பைக்கில் ஊருக்கு புறப்பட்டார். வழியில் விழுப்பணங்குறிச்சி கிராமத்தில் சித்தாள் வேலை செய்து கொண்டிருந்த அவரது உறவினர்களான சுரேஷ் மனைவி அமுதா (33) மற்றும் பரமசிவம் மனைவி அமராவதி (30) ஆகிய 2 பேர் நின்று கொண்டிருந்தனர்.

    பின்னர் அவர்கள் 2 பேரையும் தனது பைக்கில் அழைத்து கொண்டு ஊருக்கு சென்று கொண்டு இருந்தார்.

    மருவத்தூர் தாண்டி சென்றபோது அங்கே நடுரோட்டில் டயர் வெடித்து நின்ற டிராக்டரில் மோதி விபத்து ஏற்பட்டது.

    இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம்அடைந்தனர். தகவல் அறிந்த உறவினர்கள் அவர்களை மீட்டு செந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கே சிகிச்சை பலனின்றி அமுதா பரிதாபமாக உயிரிழந்தார்.

    பின்னர் பாக்கியராஜ் மற்றும் அமராவதி ஆகியோரை மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பாக்கியராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். அதனை தொடர்ந்து அவரது உடலை மீண்டும் செந்துறை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் விசாரணை நடத்தி டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

    இதற்கிடையே பாக்கியராஜின் உறவினர்கள், செந்துறை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை. அதனால் சிகிச்சைக்காக கொண்டு வந்தவர்கள் உயிர் இழந்தனர். மருத்துவமனையில் போதி மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை நியமித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு கொடுக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதனைத் தொடர்ந்து செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேஷ் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன் பின்னர் போலீசாரே உடலை ஆம்புலன்சில் ஏற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×