என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதி திரும்பிய பெண் விபத்தில் பலி
Byமாலை மலர்25 May 2022 5:29 AM GMT (Updated: 25 May 2022 5:29 AM GMT)
மஞ்சம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தேர்வு எழுதிவிட்டு மீண்டும் வீடு திரும்புவதற்காக கல்லூரியில் இருந்து வெளியே வந்த பெண் கார் மோதியதில் உயிரிழந்தார்.
செந்துறை:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகில் உள்ள அரவங்குறிச்சியை சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன் மனைவி லோகநாயகி(31). இவர் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தார். திருச்சியில் இவருக்கு தேர்வு எழுத அழைப்பாணை வந்த நிலையில் அங்கு தேர்வு எழுதச்சென்றார். மணப்பாறை அருகில் உள்ள கருப்பூர் என்ற கிராமத்திற்கு தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் சனிக்கிழமை சென்றார்.
மஞ்சம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தேர்வு எழுதிவிட்டு மீண்டும் வீடு திரும்புவதற்காக கல்லூரியில் இருந்து வெளியேறினார். அப்போது மின்னல் வேகத்தில் வந்த ஒரு கார் அவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த லோகநாயகி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இவர் நாம்தமிழர் கட்சி சார்பில் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிட்டவர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகில் உள்ள அரவங்குறிச்சியை சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன் மனைவி லோகநாயகி(31). இவர் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தார். திருச்சியில் இவருக்கு தேர்வு எழுத அழைப்பாணை வந்த நிலையில் அங்கு தேர்வு எழுதச்சென்றார். மணப்பாறை அருகில் உள்ள கருப்பூர் என்ற கிராமத்திற்கு தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் சனிக்கிழமை சென்றார்.
மஞ்சம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தேர்வு எழுதிவிட்டு மீண்டும் வீடு திரும்புவதற்காக கல்லூரியில் இருந்து வெளியேறினார். அப்போது மின்னல் வேகத்தில் வந்த ஒரு கார் அவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த லோகநாயகி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இவர் நாம்தமிழர் கட்சி சார்பில் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிட்டவர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X