search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனிதா குமாரசாமி"

    மண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமி வெற்றி பெறுவது உறுதி. இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்று முதல்-மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    முதல்-மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி எம்.எல்.ஏ. ஹாசனில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

    மண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமி வெற்றி பெறுவது உறுதி. இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். ஊடகங்கள், இந்த கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும் என்று செய்திகளை வெளியிடுகிறீர்கள். உண்மை நிலையை அறிந்து செய்தி வெளியிடுங்கள்.

    இந்த கூட்டணி அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்யும். மண்டியாவில் தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும், கூட்டணி அரசுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

    இவ்வாறு அனிதா குமாரசாமி கூறினார்.
    கர்நாடக மாநில சட்டசபை இடைத்தேர்தலில் முதல் மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதா ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளரை வீழ்த்தினார். #AnithaKumaraswamy #Ramanagaramassemblybypolls #Karnatakabypolls
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தின் ஷிவமோகா தொகுதி பா.ஜ.க. எம்.பி.யான எடியூரப்பா, பல்லாரி தொகுதி பா.ஜ.க. எம்.பி.யான ஸ்ரீராமுலு, மண்டியா தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.பி.யான புட்டராஜு ஆகியோர் கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

    இதைதொடர்ந்து, தங்களது எம்.பி. பதவிகளை அவர்கள் மூவரும் ராஜினாமா செய்தனர். இந்த மூன்று தொகுதிகளுக்கும் நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

    கடந்த சட்டசபை தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முதல் மந்திரி குமாரசாமி சன்னப்பட்னா தொகுதி எம்.எல்.ஏ.வாக நீடிக்கப் போவதாக அறிவித்தார். இதனால், அவர் வெற்றிபெற்ற மற்றொரு தொகுதியான ராமநகரா சட்டசபை உறுப்பினருக்கான இருக்கை காலியாக இருந்தது. மேலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ. நியமகவுடா இறந்ததால் ஜம்கன்டி சட்டசபை உறுப்பினருக்கான இருக்கையும் காலியானது.

    பாராளுமன்ற இடைத்தேர்தலுடன் இந்த 3 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர்  3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அம்மாநிலத்தை ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்தித்தன.



    கடந்த மூன்றாம் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் படிப்படியாக வெளியாகி வரும் நிலையில் ராமநகரா சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட  முதல் மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 137  வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளரை வீழ்த்தினார்.

    இதேபோல், ஜமகன்டி சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நியமகவுடா 39 ஆயிரத்து 480 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    மேற்கண்ட இரு சட்டசபை தொகுதிகளிலும் தங்களது வேட்பாளர்களின் வெற்றியை பெங்களூருவில் உள்ள கர்நாடக மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.#AnithaKumaraswamy  #Ramanagaramassemblybypolls #Karnatakabypolls

    கர்நாடக முதல் மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதாவுக்கு ரூ.94 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #AnithaKumaraswamy #Assets
    பெங்களூர்:

    கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் மதச்சார்பற்ற ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.



    சட்டசபை தேர்தலில் குமாரசாமி 2 தொகுதியில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றிபெற்றார். இதில் ராமநகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

    இதை தொடர்ந்து ராமநகர்  மற்றும் ஜாம்கண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர் 3-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. நியமகவுடா விபத்தில் இறந்ததால் ஜாம்கண்டி தொகுதியில் தேர்தல் நடைபெறுகிறது.

    இதில் ராமநகர் தொகுதியில் முதல்-மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதா மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் போட்டியிடுகிறார்.

    அனிதா நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் அவரது சொத்து மதிப்பு குறிப்பிட்டு இருந்தது. 55 வயதான அனிதாவுக்கு ரூ.94 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.7.88 கோடி மதிப்புள்ள சொத்து கணவருக்கு சொந்தமானது.

    காங்கிரஸ் ஆதரவுடன் அனிதா களத்தில் நிற்கிறார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் சந்திரசேகர் போட்டியிடுகிறார்.

    அனிதா 2008-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மதுசிரி தொகுதியில் போடியிட்டு வெற்றிபெற்றார். 2012-ல் சன்னபட்னா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #AnithaKumaraswamy #Assets
    கர்நாடகத்தில் 5 தொகுதிகளுக்கும் நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும். ராமநகர் தொகுதியில் போட்டியிட அனிதா குமாரசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். #AnithaKumaraswamy
    பெங்களூரு:

    சிவமொக்கா, மண்டியா, பல்லாரி ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அடுத்த மாதம்(நவம்பர்) 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கியமான அரசியல் கட்சிகள் இதுவரை மனு தாக்கல் செய்யவில்லை.

    இந்த நிலையில் மனு தாக்கல் செய்ய நாளை(செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும். காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று(திங்கட்கிழமை) மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொண்டுள்ளன.

    அதன்படி ராமநகர், மண்டியா, சிவமொக்கா ஆகிய 3 இடங்களில் ஜனதா தளம்(எஸ்) கட்சியும், ஜமகண்டி, பல்லாரி ஆகிய 2 இடங்களில் காங்கிரசும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜனதா 5 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துகின்றன.

    இடைத்தேர்தல் பணிகளை கவனிக்க காங்கிரஸ் சார்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மண்டியா தொகுதிக்கு மந்திரி கே.ஜே.ஜார்ஜ், சிவமொக்கா தொகுதிக்கு மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே, ராமநகர் தொகுதிக்கு டி.கே.சுரேஷ் எம்.பி. ஆகியோர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    மண்டியா, ராமநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவு வழங்கும் முடிவை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். 50 ஆண்டுகாலமாக தேவேகவுடா குடும்பத்தை எதிர்த்து அரசியல் செய்துவிட்டு, இப்போது திடீரென அக்கட்சிக்கு ஓட்டுப்போடுங்கள் என்று சொன்னால் எப்படி என்று நிர்வாகிகள் கேட்கிறார்கள். அதற்கு காங்கிரஸ் தலைவர்கள், இது கட்சி மேலிடத்தின் முடிவு, அதை ஏற்று அனைவரும் ஜனதா தளம்(எஸ்) கட்சியை ஆதரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

    இதற்கிடையே ராமநகர் சட்டமன்ற தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் போட்டியிடும் முதல்-மந்திரியின் மனைவி அனிதா குமாரசாமி இன்று(திங்கட்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்கிறார்.



    மதியம் 1 மணியில் இருந்து 3 மணிக்குள் மனு தாக்கல் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொள்கிறார். இந்த நிலையில் நேற்று தேவேகவுடாவை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் அனிதா குமாரசாமி நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

    இதேபோல், ஜமகண்டி சட்டமன்ற தொகுதியில், சாலை விபத்தில் மரணம் அடைந்த சித்துநியாமகவுடா எம்.எல்.ஏ. வின் மகன் ஆனந்த் நியாமகவுடா காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து சித்தராமையா 3 நாட்கள் ஜமகண்டியில் தங்கி பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக அவர் இன்று(திங்கட்கிழமை) ஜமகண்டிக்கு செல்கிறார். ஜமகண்டியில் பா.ஜனதா சார்பில் ஸ்ரீகாந்த் குல்கர்னி நிறுத்தப்படுகிறார். இவர் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிவமொக்கா தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் முன்னாள் முதல்-மந்திரி பங்காரப்பாவின் மகன் மது பங்காரப்பா போட்டியிடுகிறார். அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். அவருக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. அந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா களம் காண்கிறார். மண்டியா தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் சிவராமேகவுடா களம் இறங்குகிறார். அந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி டாக்டர் சித்தராமையா போட்டியிடுகிறார்.

    ராமநகர் தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் போட்டியிடும் அனிதா குமாரசாமியை எதிர்த்து, பா.ஜனதா சார்பில் சந்திர சேகர் களம் காண்கிறார். இவர் கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்லாரி தொகுதியில் பா.ஜனதா சார்பில் முன்னாள் எம்.பி. சாந்தா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல் செய்கிறார்கள். பல்லாரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி இன்னும் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை. வேட்புமனு தாக்கலுக்கு பிறகு இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #AnithaKumaraswamy


    கர்நாடக மாநிலத்தில் காலியாக உள்ள இரு சட்டசபை தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் முதல் மந்திரி குமாரசாமியின் முதல் மனைவி அனிதா ராமநகரா தொகுதியில் போட்டியிடுகிறார். #Anitakumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் காலியாக உள்ள இரு சட்டசபை தொகுதிகளில்  நடைபெறும் இடைத்தேர்தலில் முதல் மந்திரி குமாரசாமியின் முதல் மனைவி அனிதா ராமநகரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    கர்நாடக மாநிலத்தின் ஷிவமோகா தொகுதி பா.ஜ.க. எம்.பி.யான எடியூரப்பா, பல்லாரி தொகுதி பா.ஜ.க. எம்.பி.யான ஸ்ரீராமுலு, மண்டியா தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.பி.யான புட்டராஜு ஆகியோர் கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதைதொடர்ந்து, தங்களது எம்.பி. பதவிகளை அவர்கள் மூவரும் ராஜினாமா செய்தனர். இந்த மூன்று தொகுதிகளுக்கும் நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

    கடந்த சட்டசபை தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முதல் மந்திரி குமாரசாமி சன்னப்பட்னா தொகுதி எம்.எல்.ஏ.வாக நீடிக்கப் போவதாக அறிவித்தார். இதனால், அவர் வெற்றிபெற்ற மற்றொரு தொகுதியான ராமநகரா சட்டசபை உறுப்பினருக்கான இருக்கை காலியாக உள்ளது. மேலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ. நியமகவுடா இறந்ததால் ஜம்கன்டி சட்டசபை உறுப்பினருக்கான இருக்கையும் காலியாக உள்ளது.

    பாராளுமன்ற இடைத்தேர்தலுடன் இந்த 3 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர்  3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 6-ம் தேதி எண்ணப்பட்டு அன்று முடிவுகள் வெளியாகும்.


    இந்நிலையில், ராமநகரா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளராக போட்டியிடப் போவதாக முதல் மந்திரி குமாரசாமியின் முதல் மனைவியும், சினிமா நடிகையுமான அனிதா இன்று அறிவித்துள்ளார்.

    ராமநகராவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அனிதா இந்த தொகுதியில் என்னை வேட்பாளராக நிறுத்த கட்சி தலைமை தீர்மானித்துள்ளது என குறிப்பிட்டார். #KarnatakaCMwife #Ramanagaraassemblysegment #Anitakumaraswamy
    கர்நாடகாவில் ராம்நகர் தொகுதியில் மத சார்பற்ற குமாரசாமியின் மனைவி அனிதாவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. #AnithaKumaraswamy
    பெங்களூர்:

    கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில், மதசார் பற்ற ஜனதாதள மாநில தலைவர் குமாரசாமி 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.

    அவர் நின்ற செனப்பட்டனா, ராம்நகர் ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். பின்னர் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து முதல்-மந்திரி ஆனார்.

    இதையடுத்து ராம்நகர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார். இந்தநிலையில் ஜம்கண்டி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.சிந்துநியாமகவுடா விபத்தில் மரணம் அடைந்தார்.

    தற்போது காலியாக உள்ள ராம்நகர், ஜம்கண்டி ஆகிய தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தொடங்கி இருக்கிறது.

    இந்த தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் ஜம்கண்டி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும், ராம்நகர் தொகுதியில் மத சார்பற்ற குமாரசாமியின் மனைவி அனிதாவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.

    இதை அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். எனவே, ராம்நகர் தொகுதியில் அனிதா போட்டியிடுவார் என்று அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #AnithaKumaraswamy
    ×