search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அத்திக்கடவு"

    • ஈரோடு அடுத்த நசியனூர் புதுப்பாளையம் பகுதியில் அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகளுக்காக குழாய்கள் பொருத்தும் பணியை அமைச்சர் முத்துசாமி இன்று பார்வையிட்டார்.
    • இதனை முதல்-அமைச்சர் வந்து திட்டத்தை தொடங்கி வைப்பார்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த நசியனூர் புதுப்பாளையம் பகுதியில் அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகளுக்காக குழாய்கள் பொருத்தும் பணியை அமைச்சர் முத்துசாமி இன்று பார்வையிட்டார்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    இப்பகுதியில் திட்ட பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இது சம்பந்தமாக விவசாயிகள், பொதுப்பணித்துறை மற்றும் பணியை செய்து வரும் நிறுவனத்துடன் பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் தொடக்கப்பட்டுள்ளன .

    இதேபோன்று காலிங்கராயன் பாளையம், நசியனூர் போன்ற பகுதிகளிலும் 2 இடங்களில் சிறு சுணக்கம் பணிகளில் ஏற்பட்டது. அதுவும் தீர்க்கப்பட்டு விடும்.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருந்துறை பகுதியில் கடந்த மாதம் அரசு நிகழ்ச்சிக்கு வந்த பொழுது அத்திக்கடவு- அவினாசி திட்ட பணிகள் 2 மாதத்திற்குள் முடிவ டையும். நானே வந்து திட்ட த்தை தொடங்கி வைப்பேன் என்று அறிவித்தார்.

    அதன்படி அத்திக்கடவு- அவினாசி திட்ட பணிகள் அக்டோபர் மாதத்திற்குள் முடிவடையும். அதற்காக பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. இதனை முதல்-அமைச்சர் வந்து திட்டத்தை தொடங்கி வைப்பார். திட்டத்தின் கீழ் விடுபட்ட குளம், குட்டைகளை சேர்ப்பதற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதுவும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    கீழ்பவானி பாசன திட்டத்தில் முறை வைத்து நீர் தற்போது விநியோகி க்கப்படுவது சம்பந்தமாக விவசாயிகள் ஆட்சேபனை தெரிவித்து மனு அளித்துள்ளனர். இது சம்பந்தமாக பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் பேசி உரிய தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வாய்க்காலை நவீனப்படு த்துவது குறித்து விவசா யிகளிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப்படும். இது சம்பந்தமாக ஏற்கனவே ஒரு தீர்ப்பு வந்த போதும் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு ஒன்று இருந்த போதிலும், விவசாயிகளிடம் பேசி ஒருமித்த கருத்தை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்வோம்.

    பவானி நகருக்கு புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது போன்று கோபிசெட்டிபாளையம் பகுதியிலும் அமைக்க மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதுவும் அரசின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொட்டியில் ஒருவர் தலை குப்புற விழுந்துகிடப்பதாக அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் பணியாளர்கள் இன்று காலை திங்களூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
    • இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோத னைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் திங்களூர் சுப்பையன் பாளையம் பிரிவு அருகில் அத்திக்கடவு -அவினாசி திட்ட பைப் லைன் செல்கிறது. அப்பகுதியில் தண்ணீர் திறந்து விடும் வால்வு உள்ள இடத்தில் சுமார் 3 அடி அகலத்தில் தொட்டி கட்டியுள்ளனர்.

    இந்த தொட்டியில் ஒருவர் தலை குப்புற விழுந்துகிடப்பதாக அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் பணியாளர்கள் இன்று காலை 8.30 மணியளவில் திங்களூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    அதன்பேரில் போலீசார் அங்கு சென்று அந்த நபரை மீட்டு பார்த்தபோது அவர் உயிரிழந்த நிலையில் இருப்பது தெரியவந்தது.

    விசாரணையில் அவர் திங்களூர் நீல கவுண்டம்பாளையத்தை சேர்ந்த முருகேசன் (48) என்பதும், நேற்று இரவு தண்ணீர் திறந்துவிடும் வால்வு அமைக்கப்பட்டுள்ள தொட்டி மீது அமர்ந்து மது அருந்திய போது போதையில் தவறி தொட்டிக்குள் தலை குப்புற கவிழ்ந்து விழுந்து தலையில் அடிபட்டு இறந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோத னைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஈங்கூரில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனி சாமிக்கு சென்னிமலை வடக்கு ஒன்றிய செயலாளர் தலைமையில் 250 பேர் வரவேற்பு வழங்கி இரு சக்கர வாகனத்தில் பெருந்துறை வரை அணி வகித்து வந்தனர்.
    • ஈரோடு மாவட்ட முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கையை ஏற்று அ.தி.மு.க. ஆட்சியில் பெருந்துறைக்கு கொடிவேரி, ஈரோட்டுக்கு ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.

    பெருந்துறை:

    முன்னாள் முதல்- அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செய லாளருமான எடப்பாடி பழனிசாமி பெருந்துறைக்கு வந்தார். அவருக்கு பஸ் நிலையம் அருகே ஒருங்கிணைந்த அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் முன்னாள் அமை ச்சர்கள் கே.ஏ. செங்கோட் டையன் எம்.எல்.ஏ., கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ., ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராம லிங்கம், எம்.எல்.ஏ.க்கள் ஜெயக்குமார், பண்ணாரி ஆகியோர் தலைமை வகித்தனர்.

    முன்னதாக ஈங்கூரில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனி சாமிக்கு சென்னிமலை வடக்கு ஒன்றிய செயலாளர் தலைமையில் 250 பேர் வரவேற்பு வழங்கி இரு சக்கர வாகனத்தில் பெருந்துறை வரை அணி வகித்து வந்தனர்.

    அப்போது அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செய லாளர் எடப்பாடி பழனி சாமி பேசியதாவது:-

    ஈரோடு மாவட்ட முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கையை ஏற்று அ.தி.மு.க. ஆட்சியில் பெருந்துறைக்கு கொடிவேரி, ஈரோட்டுக்கு ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.

    விவசாயிகளின் 50 ஆண்டு கோரிக்கையான அத்திக்கடவு, அவினாசி திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.1,652 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டது. அந்த திட்டம் தற்போது தி.மு.க. ஆட்சியில் ஆமை வேகத்தில் நடக்கிறது. இந்த திட்டம் 6 மாதம் முன்பே முடிந்திருக்க வேண்டும்.

    இந்த திட்டம் மூலம் 3 மாவட்டங்களில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் பவானிசாகர் உபரி நீரால் நிரப்பப்பட்டு விவசாயிகள் பயன் அடைந்திருப்பார்கள். திட்டம் நிறைவேறாததால் பவானிசாகர் அணையின் உபரி நீர் கடலில் கலக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முடிவில் பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ் நன்றி கூறினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு, பெருந்துறை யூனியன் சேர்மன் சாந்தி ஜெயராஜ், பெருந்துறை வடக்கு ஒன்றிய செயலாளர் வைகை தம்பி என்கிற ரஞ்சித் ராஜ், பெருந்துறை மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயன் என்கிற ராமசாமி, பெருந்துறை, கருமாண்டி செல்லி பாளையம் பேரூர் செயலாளர்கள், ஊத்துக்குளி ஒன்றிய செயலாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சோலார் பேனல் மற்றும் வால்வு பொருத்தும் பணி நடந்து வருகிறது.
    • கம்ப்யூட்டர் உதவியுடன் அறித்து அதற்கேற்ப தண்ணீர் திறந்துவிட முடியும்.

    அவினாசி,

    அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டப்பட உள்ளது. அவிநாசி நகரப்பகுதியில் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவச்சேரி, சாலைப்பாளையம் பகுதியிலுள்ள குளம், குட்டைகளில், அவுட்லெட் சென்சார் சிஸ்டம்எனப்படும் உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது.

    இதற்கான சோலார் பேனல் மற்றும் வால்வு பொருத்தும் பணி நடந்து வருகிறது.இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், குளத்தில் ஏற்கனவே உள்ள தண்ணீரின் அளவு, திட்டத்தின் படி திறந்து விடப்பட வேண்டிய தண்ணீரின் அளவு ஆகியவற்றை கம்ப்யூட்டர் உதவியுடன் அறித்து அதற்கேற்ப தண்ணீர் திறந்துவிட முடியும். குழாயில் ஆங்காங்கே ஏற்படும் அடைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை சரி செய்யும் போது, குழாய்கள் நீரோட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி பணி செய்ய வால்வு பொருத்தப்பட்டுள்ளது என்றனர்.

    ×