search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Athikadavu project"

    • சோலார் பேனல் மற்றும் வால்வு பொருத்தும் பணி நடந்து வருகிறது.
    • கம்ப்யூட்டர் உதவியுடன் அறித்து அதற்கேற்ப தண்ணீர் திறந்துவிட முடியும்.

    அவினாசி,

    அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டப்பட உள்ளது. அவிநாசி நகரப்பகுதியில் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவச்சேரி, சாலைப்பாளையம் பகுதியிலுள்ள குளம், குட்டைகளில், அவுட்லெட் சென்சார் சிஸ்டம்எனப்படும் உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது.

    இதற்கான சோலார் பேனல் மற்றும் வால்வு பொருத்தும் பணி நடந்து வருகிறது.இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், குளத்தில் ஏற்கனவே உள்ள தண்ணீரின் அளவு, திட்டத்தின் படி திறந்து விடப்பட வேண்டிய தண்ணீரின் அளவு ஆகியவற்றை கம்ப்யூட்டர் உதவியுடன் அறித்து அதற்கேற்ப தண்ணீர் திறந்துவிட முடியும். குழாயில் ஆங்காங்கே ஏற்படும் அடைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை சரி செய்யும் போது, குழாய்கள் நீரோட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி பணி செய்ய வால்வு பொருத்தப்பட்டுள்ளது என்றனர்.

    ×