search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "athikadavu"

    • தொட்டியில் ஒருவர் தலை குப்புற விழுந்துகிடப்பதாக அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் பணியாளர்கள் இன்று காலை திங்களூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
    • இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோத னைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் திங்களூர் சுப்பையன் பாளையம் பிரிவு அருகில் அத்திக்கடவு -அவினாசி திட்ட பைப் லைன் செல்கிறது. அப்பகுதியில் தண்ணீர் திறந்து விடும் வால்வு உள்ள இடத்தில் சுமார் 3 அடி அகலத்தில் தொட்டி கட்டியுள்ளனர்.

    இந்த தொட்டியில் ஒருவர் தலை குப்புற விழுந்துகிடப்பதாக அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் பணியாளர்கள் இன்று காலை 8.30 மணியளவில் திங்களூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    அதன்பேரில் போலீசார் அங்கு சென்று அந்த நபரை மீட்டு பார்த்தபோது அவர் உயிரிழந்த நிலையில் இருப்பது தெரியவந்தது.

    விசாரணையில் அவர் திங்களூர் நீல கவுண்டம்பாளையத்தை சேர்ந்த முருகேசன் (48) என்பதும், நேற்று இரவு தண்ணீர் திறந்துவிடும் வால்வு அமைக்கப்பட்டுள்ள தொட்டி மீது அமர்ந்து மது அருந்திய போது போதையில் தவறி தொட்டிக்குள் தலை குப்புற கவிழ்ந்து விழுந்து தலையில் அடிபட்டு இறந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோத னைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஈங்கூரில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனி சாமிக்கு சென்னிமலை வடக்கு ஒன்றிய செயலாளர் தலைமையில் 250 பேர் வரவேற்பு வழங்கி இரு சக்கர வாகனத்தில் பெருந்துறை வரை அணி வகித்து வந்தனர்.
    • ஈரோடு மாவட்ட முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கையை ஏற்று அ.தி.மு.க. ஆட்சியில் பெருந்துறைக்கு கொடிவேரி, ஈரோட்டுக்கு ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.

    பெருந்துறை:

    முன்னாள் முதல்- அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செய லாளருமான எடப்பாடி பழனிசாமி பெருந்துறைக்கு வந்தார். அவருக்கு பஸ் நிலையம் அருகே ஒருங்கிணைந்த அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் முன்னாள் அமை ச்சர்கள் கே.ஏ. செங்கோட் டையன் எம்.எல்.ஏ., கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ., ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராம லிங்கம், எம்.எல்.ஏ.க்கள் ஜெயக்குமார், பண்ணாரி ஆகியோர் தலைமை வகித்தனர்.

    முன்னதாக ஈங்கூரில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனி சாமிக்கு சென்னிமலை வடக்கு ஒன்றிய செயலாளர் தலைமையில் 250 பேர் வரவேற்பு வழங்கி இரு சக்கர வாகனத்தில் பெருந்துறை வரை அணி வகித்து வந்தனர்.

    அப்போது அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செய லாளர் எடப்பாடி பழனி சாமி பேசியதாவது:-

    ஈரோடு மாவட்ட முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கையை ஏற்று அ.தி.மு.க. ஆட்சியில் பெருந்துறைக்கு கொடிவேரி, ஈரோட்டுக்கு ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.

    விவசாயிகளின் 50 ஆண்டு கோரிக்கையான அத்திக்கடவு, அவினாசி திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.1,652 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டது. அந்த திட்டம் தற்போது தி.மு.க. ஆட்சியில் ஆமை வேகத்தில் நடக்கிறது. இந்த திட்டம் 6 மாதம் முன்பே முடிந்திருக்க வேண்டும்.

    இந்த திட்டம் மூலம் 3 மாவட்டங்களில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் பவானிசாகர் உபரி நீரால் நிரப்பப்பட்டு விவசாயிகள் பயன் அடைந்திருப்பார்கள். திட்டம் நிறைவேறாததால் பவானிசாகர் அணையின் உபரி நீர் கடலில் கலக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முடிவில் பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ் நன்றி கூறினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு, பெருந்துறை யூனியன் சேர்மன் சாந்தி ஜெயராஜ், பெருந்துறை வடக்கு ஒன்றிய செயலாளர் வைகை தம்பி என்கிற ரஞ்சித் ராஜ், பெருந்துறை மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயன் என்கிற ராமசாமி, பெருந்துறை, கருமாண்டி செல்லி பாளையம் பேரூர் செயலாளர்கள், ஊத்துக்குளி ஒன்றிய செயலாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கு இம்மாத இறுதியில் அடிக்கல் நாட்டப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #EdappadiPalaniswami #ADMK #TNAssembly


    சட்டசபையில் பொன்முடி (தி.மு.க.) பேசும்போது, அத்திக்கடவு- அவினாசி திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்று கேட்டார்.

    இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கையில், அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. நான்கைந்து நாட்களில் இறுதிசெய்யப்பட்டு இம்மாத இறுதிக்குள் அடிக்கல் நாட்டப்படும்.

    இந்த திட்டம் சிறிது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் மலையில் இருந்து கொண்டு வரும் வகையில் திட்டமிடப்பட்டு இருந்தது. அதற்கு வனத்துறை அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க காலிங்கராயன் பாளையத்தில் இருந்து செயல்படுத்த முடிவு செய்துள்ளோம் என்றார். #EdappadiPalaniswami #ADMK #TNAssembly

    ×