என் மலர்
செய்திகள்

அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கு இம்மாத இறுதியில் அடிக்கல்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கு இம்மாத இறுதியில் அடிக்கல் நாட்டப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #EdappadiPalaniswami #ADMK #TNAssembly
சட்டசபையில் பொன்முடி (தி.மு.க.) பேசும்போது, அத்திக்கடவு- அவினாசி திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்று கேட்டார்.
இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கையில், அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. நான்கைந்து நாட்களில் இறுதிசெய்யப்பட்டு இம்மாத இறுதிக்குள் அடிக்கல் நாட்டப்படும்.
இந்த திட்டம் சிறிது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் மலையில் இருந்து கொண்டு வரும் வகையில் திட்டமிடப்பட்டு இருந்தது. அதற்கு வனத்துறை அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க காலிங்கராயன் பாளையத்தில் இருந்து செயல்படுத்த முடிவு செய்துள்ளோம் என்றார். #EdappadiPalaniswami #ADMK #TNAssembly
Next Story






